வெள்ளி, 16 டிசம்பர், 2016

கார்த்திகையின் சிறப்பு !

கார்த்திகையின் சிறப்பு !




கார்த்திகை ஒரு ஆரியப் பண்டிகை என்று பக்குவப்படாத அறிவுகள் கொடி பிடிக்கும் முன்பு நமது பாரம்பரியத்தை மக்களிடம் அடையாளம் காட்டுவது நமது கடமையாகும்:
----------------------------------------------------------------------------------------------
இந்து பண்டிகைகள் என்று வந்தாலே போதும் அர்த்தமற்ற நாத்தீக கருஞ்சட்டைக் கூட்டமும், தொப்புள் கொடி உறவி என்று சொல்லிக் கொண்டு உயிர்நாளங்களை அறுக்கும் மதத்தவரும், ஆங்கிலேய மதத்தவரும், இது ஒரு ஆரியப் பண்டிகை, பார்ப்பன சடங்கு என்று நீட்டி முழங்கத் தொடங்கி விடுவார்கள். சங்கத் தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீபத் திருநாள் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
தொல்காப்பியம்:
---------------------------
“வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (தொல்காப்பியம்: 35)
பொருள்:- “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு”
அகநானூறு:
-------------------
”குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி” (அகம்.141)
பொருள்:- கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர். தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல்.
கார்த்திகை அறிவியல்:-
-------------------------------------
அறிவியல்படியும் Pleiades வானத்தில் நட்சத்திரக் கூட்டம். இது ‘திறந்த கூட்டம்’ (Open cluster) என்ற பகுப்பைச் சேர்ந்தது. திறந்த கூட்டங்கள் பிரபஞ்ச அளவைகளில் ‘சமீப காலத்தியது’. கார்த்திகைக் கூட்டம் உண்டாகி 100 மில்லியன் ஆண்டுகள் தான் இருக்கும். நம்மிடமிருந்து 400 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. சாதாரண தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் கூட கூட்டத்தில் பற்பல நட்சத்திரங்களைக் காணமுடியும். கார்திகை தீபஒளித் திருவிழா மனிதனுக்கு தியானத்தையும் மன நிம்மதியையும் கற்றுத்தருகிறது. இருள் நீங்கி ஒளி பிறக்கும் பரவசத்தை தருகிறது.
--------------------------------------------------------------------------------------------
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி சனாதனம் எப்போதுமே அர்த்தமுள்ளதும் தனித்துவம் கொண்டதும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள