வியாழன், 3 பிப்ரவரி, 2011

தமிழக உறவுகளே உண்மையா?




தமிழக மீனவர் மீதான இந்திய மத்தியஅரசின் திடீர் அக்கறை,
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நாடகம்
தேசப்பற்றுள்ள .தேசிய  இயக்கம் தெரிவிப்பு,
தமிழக மீனவர்கள் மீது, இந்திய மத்திய அரசாங்கம் காட்டும் அக்கறையானது,
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, மத்திய அரசாங்கம் நடத்தும், நாடக 
அரங்கேற்றமாகும், என இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் 
தலைவர், திரு.டாக்டர்,குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-2

அநுரத புரத்திலுள்ள எல்லாளன் சமாதி .

இரண்டு தமிழர்கள் கொலை செய்யப் பட்டதற்கே எல்லாளன் என்ற சிற்றரசன்,தமிழகத்தில் இருந்து படைதிரட்டி  வந்து சண்டையிட்டது 
பழைய வரலாறு. ஆயிரக் கணக்கில் தமிழர்கள்,துடி துடித்துச் சாக 
கொலை செய்யத் தூண்டியவனுடன், சேர்ந்து கைகுலுக்கி, சேர்ந்து  
வாழுங்கள் என்று கடிதம் எழுதியது இன்றைய தமிழகத்தின், 
,சாதனையுடன் கூடிய வரலாறு. என்ன நடந்ததது இன்றையத் 
தமிழருக்கு 
முதலிருந்து  படிக்க.. 
௨.அதிகாரம்
தேவப்பிரிய தீசன் அரசனானது முதல்; எல்லாளன் வெற்றிபரியந்தம்.

முத்த சிவராஜனுக்குப்பின்,அதாவது கி.பூ. 307ம் வருசத்தில் அவன் மகன் 
(Devananpiatissa ) தேவப்பிரியன் என்னும் பட்டப்பெயருடைய தீசன் அரசனானான்.
இவன் சிம்மாசன மேறியவுடன்,பூமியில் புதைந்து கிடந்த பொன், வெள்ளி,
இரத்தினாதிகள் வெளி யெழும்பின வென்றும், மூங்கில்கள் தாமே வளர்ந்து 
புஷ்பங்கள், மிருகங்கள், பலவர்ணப் பஷிகள் முதலியவற்றை ஈன்றன 
வென்றும் சிங்கள் புராணம் கூறும்.இது மங்கள வருணனையன்றி,
உண்மையாய் நடந்ததன்று.

சனி, 29 ஜனவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-1



விஜயவமிசகாலம்.
க. அதிகாரம்.
இதன் முற்பகுதியைப் படிப்பதற்கு இங்கு செல்லவும்.
(விஜயராஜன் வந்தது முதல்; முத்த சிவ ராஜன் ஆண்டது பரியந்தம்)
 இச் சரித்திரத்தை செவ்வொழுக்காய் நடத்தி முடிக்கவேண்டி,இலங்கைக்கு
(wijayo ) விஜயராஜன் வந்தமையை, ஆதி சம்பவமாகக் கொண்டு சொல்லுவாம்.

இவ்வரசனுடைய பிறப்பை ஆராயுமிடத்து,தந்தை வழி,வங்க நாட்டு அரச
குலமென்றும், தாய் வழி,கலிங்க நாட்டு அரச பத்தினி வமிச மென்றும்
தெரிய வருகிறது.இவனுடைய மூதாயானவள்,இழிகுலத்தவனாகிய
சிங்கனேன்பவனை விய பிரசார மார்க்கமாய்க் கூடிச் சிங்கவாகு என்பவனைப்
பெற்றாள்.(Singhabahu ) சிங்கவாகு இவ் விஜய ராஜனைப் பெற்றான்.இவ்வுண்மையை
அறியாதார் உள்ளபடியே சிங்கத்தையணைந்து பெற்றாள் என்பார்.

*சிங்கவாகு என்பவன்,மகத தேயத்திலேயுள்ள லாலாநாட்டைக் கட்டிக்கொண்டு,
அதற்கு அரசனாகிச் சிங்க புரமென்னு  நகரத்திளிருந்தரசு செய்து வருகையில்
அவனுடைய மூத்த குமாரனாகிய விஜய ராஜன்,துன் மார்க்கனும் தன்போலிய
துஷ்டர் பலரைச் சேர்த்துக் கொண்டு சனங்களுக்குத் துன்பஞ  செய்பவனுமா
யிருந்தான்.அதனால் ஜனங்கள் சிங்கவாகுவிடத்திலே போய் முறையிட,
சிங்கவாகு,உடனே விஜயராஜனை எழுநூறு மெயக்காப்பாளருடன்,கடல் தாண்டி
யப்புறம்போய் பிழைக்கும்படி அனுப்பிவிட்டான்.விஜயராஜனும் அவ்வாறே
புறப்பட்டு இந்தியக்கரையிலேயே வேறோர் இடத்தையடைய முயன்றும் ,வாய்க்காமையால்,ஈற்றில்,இலங்கையை நாடிச் சென்று புத்தளத்திற்குச்
சமீபத்தேயுள்ள தம்ப பண்ணை என்னுமிடத்தை அடைந்தான்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:

இலங்கை 1883க்கு முதல் எப்படி இருந்தது என்பதை அறிய இதை முழுவதும் 
படியுங்கள்.இன்றைய இலங்கைக்கும் 1883க்கு முதல் இருந்த இலங்கையையும் 
உற்று நோக்கிப் பாருங்கள்.






OPINIONS  ON THIS WORK.
R.BERCKENRIDGE ESQ.
SUB INSPECTOR OF SCHOOLS.

The appearance of an Epitome of the History of Ceylon in the Tamil Language is very auspicious and quite oportune.
Mr.A.Mootootamby Pillai of Manipay in Jaffna.has made extensive researches, into all available ancient and modern works 
or the subject and has summed up genuine information in this small compass.The correctness of chronology and history.
as well as the beauty of the style of  language in which they are clothed, are worthy of commendation.I do not hesitate to
recommend this book for the use of pupils in our Schools.

If the author would take some more pains and make the book a little more elaborate, it cannot, but be counted one among 
modern Tamil Classics.    
  
R.Breckehtidge.

Moolay, 8th, Sept,1883.



From L.Mannuel Esq.
Sub-Asst.Inspector of Schools.

The History of Ceylon,in Tamil by Mr. A.Mootootamby Pillay,Editer of the "Sathiabbimaanie" supplies 
a want longfelt in our Schools.The Compiler is a Scholar of some reputation,and a writer  of much
experience, He has consulted the best writers on Ceylon --Tennent,Furguson,Cassie Chetty and
Turnour. The work is clear in arrangement; and its style is worthy of imitation by our youths.It is 
thus specially designed for schools,and I have much pleasure in recommending it to students in 
middle and Training Schools, and Candidates desirous of qualifying themselves for Teachers' Certificates. 

L.Manuel 

Jaffna,15th Sept.1883.


From
J.R.ARNOLD ESQ.
Prof.of Vernacular Literature.
Jaffna College And Editor, Morning Star.

From a careful and brief perusal and examination of Mr.A.Mootootamby Pillay's Epitome of Ceylon History.
I am prepared to express my opinion that the work is well designed and executed,and will dully supply the want that is felt and exists in the Vernacular schools.The author, it seems, has spared  no pains to execute the work in such a way as to 
Please the students as well as the general readers. The style is neat, simple,commanding  and animating; expressions 
are rich,forcible and enlivening. The plan of the work is what it should be --abundance of materials compressed 
into a small compass.The size of the work is such that the vast majority of the  Tamil  students can    easily afford 
to purchase.To be brief, I am  disposed  to say that the work  is in  every respect  worth the patronage of   the public. 

J.R.Arnold
Manipay,15th  Sept, 1883.


From
WM.NEVINS ESQ.
Head Master,Wes.Central Collegiate
Institution, Jaffna.

The History of a people proposes to give prominently an account of their thoughts, words
and deeds, as they are exhibited mainly in public life.The Historian, properly so called,
assumes and perhaps claims to himself the privileged gift of ascertaining as facts the things 
he has been recording.

The facts thus recorded deserve the attention and study of the rising generation only 
when they tend to cultivate upon their welfare.

We have reason to believe that Mr.A Mootootamby Pillay had these and smilar thoughts 
in view, in  the preparation of his Lanka Charitira Suchanam, and we recommend the 
work  to the Tamil public.Tamil scholars will certainly  find in it  valuable information closely 
connected with the ancient Tamils  of India and Ceylon.
Wm.Nevins,
     Jaffna,19th Sept. 1883.

From
J EVARTS ESQ.
HEAD MASTER,CHUNDICULLY SEMINARY.

The long felt want of a history of our island in Tamil is worthily supplied by Mr.A.Mootootamby's
Epitome of the History of Ceylon. as a text book in history for  Vernacular Schools, it will be found to be a very useful work. containing as it does, much information in a little space;
while the simplicity and conciseness of the style render it a valuable acquisition to the prose 
literature of our language.
J.Evarts   


Alevetty,25th Sept. 1883.


From
V.FRANCIS THAMBOO ESQ.
Editor,Catholic Guardian.

I have perused with pleasure the Epitome of Ceylon History written for the use of Vernacular
Schools by Mr. Mootootamby of Manipay, the Editor of the Karical Sathiabbimani, and I am
happy to state that the work is generally interesting being written  throughout  in an elegant  and
agreeable style.The appendix given at the end will be of great use to students.Mr.mootootamby
has on the whole done his work well as it admirably adapted to exhibit the whole of the History
of Ceylon within a short Compass.

V,Francis Thamboo.
Jaffna Town,15thSpet.1883.

From
JAMES H.MARTYN ESQ.

This little manual on the History of Ceylon by Mr A.Mootootamby Pillay of Manipay,sheets of which
 were sent for my perusal  as they  issued  from the press has special features which can not fail to
 commend themselves to the public generally. There is sufficient matter. Methodically given
to meet the requirements of Tamil schools. The style  of writing is engaging  and evinces  a refined taste
combined  with considerable freshness  and vigor. The writer is entitled to the praise of entire freedom
from prejudice and partiality --the chief title to public  approbation in the compiler of a historical
manual. Altogether I look upon the work as a valuable contribution to the School literature of the Island
which is just forming under the influence of the Revised Code.In saying all this I hope I do not commit
myself  to any expression of opinion as to the acceptability of the work in the case of denominational
schools.
James H.Martyn.  
 
Jaffna,18th Sept.1883.


From
E.SPAULDING ESQ.
Late Teacher,Batticotta High School.

I have carefully  read the Epitome of the Tamil History of Ceylon by Mr.A.Mootootamby Pillay and
am of opinion that the work contains in a small compass much valuable  and useful information and is
characterised  throughout   with the highest graces of brevity, purity and simplicity of style. The
author has certainly conferred a lasting  benefit  upon the youth of the country by  supplying  a long
-felt desideratum and such as desire to gain a knowledge of the history of the Island will do well
to possess the compendium.

E.Spaulding Esq

Manipay, 18th Sept.1883.


புதன், 26 ஜனவரி, 2011

திருப்புகழும்,கந்தசஸ்டி கவசமும்.


மன நிம்மதிக்கும், மகிழ்ச்சியான சூழ்நிலைக்கும்,இந்த இசைத்  தொகுப்பைக் கேட்டுப்
 பாருங்கள்.மன நிம்மதியும்,மன நிறைவும் நம்மைத்தேடி  வருவதைப் போன்ற வுணர்வும் ஏற்படும்.எல்லாம் நமது  மனதைப் பொறுத்ததுதான்.முயற்சி பண்ணிப் பாருங்கள். இன்னும் ஏராளமான மதம் சம்பந்தமான,பாடல்களும் சினிமாப் பாடல்களும்
இங்கே,இலவசமாகக் கேட்கலாம்,விரும்புவர்களுக்கும்  அனுப்பலாம்.  .   


வியாழன், 20 ஜனவரி, 2011

கிடைத்த வெள்ள நிவாரணம்.


இதற்கு  முதல் எழுதிய பதிவில் வெள்ள நிவாரணம் படும் பாடு என்பதை எழுதியிருந்தேன், இது எனது பிரதேச மக்களுக்குக்  கிடைத்த வெள்ள நிவாரணம்.கிட்டத்தட்ட ஒருமாதம் வெள்ள நீருக்குள் கிடந்து,பிரண்டு
சாதனைகள் செய்த  மக்களுக்கு,ஒரு வழியாக, புண்ணியவான்கள் மனது வைத்து, வழங்கிய  அரசாங்க நிவாரணம்,மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் ஆணைக்கிணங்க
மண்முனை வடக்கு,பிர தேச செயலாளரின், அனுசரணையுடன்,எமது பகுதி கிராம சேவையாளரால்,வழங்கப்பட்டது.முன்னைய பதிவில் குறிப்பிட்ட,நிவாரணத்திற்கும்,
இந்த நிவாரணத்திற்கும் சம்பந்தம் இல்லை.அந்த நிவாரணப் பணத்திற்கு என்ன நடந்தது
என்பதை நிற்சயம் இந்தப் பிளாக்கில்,கட்டாயம் வெளிவரும்.

இதை நான் வாங்கப் பட்டபாடு,ஐயா,சொல்லில் மாளாது,நான் தான் இதற்கு உரியாள் என்பதை நிருபிக்க,இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டபோதுகூட,
இவ்வளவு கஷ்டப்படவில்லை.பத்துப் பேர் கொண்ட,ஒரு குழுவால்,சரியாக விசாரணை
செய்யப்பட்ட பின்புதான்,இந்தப் பொட்டலம்,எனது கைக்குக் கிடைத்தது.


1 .துவாய்.................................................................150 .00
2 .போத்தல் தண்ணீர் 1500 .மல...........................120 .00..
1பைக்கட்,90 ,கிராம் சொக்கலட் மாறி பிஸ்கட் 30 .00
1 .பைக்கட்,90கிராம் மில்க் கீரீம் பிஸ்கட் ..........30 .௦௦00௦௦
1 .பைக்கட்,70,கிராம் மாறி பிஸ்கட் ....................20 .00
1 .சன்லையிற் சலவை சோப்பு ............................27 .00
1 .பற்பசை சிறியது .................................................35 .00
1 .பல் தூரிகை,..........................................................32 .௦௦௦௦௦௦00௦௦
1 .அங்கர் பைக்கட் 400 கிராம்...............................244 .00
1 .லக்ஸ் சோப்பு ......................................................32 .00
3 .சம்போ பைக்கட் ..................................................15 .௦௦௦௦௦௦00
மொத்தம்..................................................................735.00


கையில் வெள்ள நிவாரண பொட்டலம்,கிடைத்தவுடன்,உடனடியாகப் பிரித்து,அதிலிருந்த
ஒரு தண்ணீர்ப் போத்தலையும்,ஒரு பிஸ்கட் பைக்கட்டையும்,அவ்விடத்திலேயே, சாப்பிட்டு முடித்து,எனது களைப்பைத் தேற்றிக் கொண்டேன்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு ஒரு வருடச் சம்பளம்,125 கோடி ரூபா, நாள்
ஒன்றுக்கு அவர்களின் சம்பளச் செலவு,.3,42 ,466.௦௦ ரூபா இதை  நான் சொல்லவில்ல,
நமது சக பதிவர் ஒருவரின் பதிவில் வாசித்தது.நீங்களும் பார்க்க  இன்னும் எவ்வளவு செலவுகளை எடுத்துக் காட்டலாம்,ஆனால் அவைகளின் எதிர் விளைவுகளைத் தாங்கக்
கூடியளவு,நமது உடம்பும் தயாரில்லை,குடும்பச் சூழலும்,நல்லதாக இல்லை.

இப்படி நமது நாட்டின் முக்கிய செலவுகளை,எண்ணிப் பார்த்து,நமது நாட்டில் ,வாழுகின்ற
மக்களின் இயலாமையை நினைத்து,மனது நிறைந்த பாரத்துடன்,கையில் இருந்த நிவாரணப் பொருள்களின்,பாரம் தெரியாமல்,எனது வீட்டை நோக்கிய பயணத்தைத்
தொடர்ந்தேன்.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

இலங்கையின் முதல் இனக் கலவரம்.



சாதனைகள்  படைத்த இலங்கையின் இனக்கலவர வரலாற்றை,பிள்ளையார் சுழி போட்டுத் 
தொடங்கி வைத்தவர்களே,இலங்கையின் முதல் பிரதமரும்,அவருடைய சகாக்களும்தான்.இந்த இனக்கலவரம் மூலமாகத்தான் இவர்கள் சிங்கள  மக்களின் கதாநாயகர்களாக அவதாரம் எடுத்தார்கள்.ஆனால், இவர்களை முதலாம்  உலகப்போர் நடக்கின்ற நேரம் என்றும் பாராமல் 
இலண்டன் வரைச் சென்று போராடி,இவர்களைச் சிறை மீட்டதும் ஒரு தமிழன்தான். எப்படி இருக்கிறது இந்த வரலாறு.   

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. அதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ்.சேனநாயக்கா, டீ.ஆர்.விஜேவர்த்தன,Dr காசியஸ் பெரேரா,E .T .D .சில்வா,F .R .டயஸ்
பண்டாரநாயக்கா,A .H .மொலமூர் ,H .அமரசூரியா  உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்று பிரித்தானிய  மகாராணியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார்.திரு. இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை தேரை இழுத்துச் சென்றனர்.12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று, இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கொழும்பில் வாட் பிளேசில் இருந்த அவரின் "சுகஸ்த்தான்"வீடுவரை இந்தத் தேர் இழுப்பு நடைபெற்றதாம். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனங்கள்  சேதமாக்கப்பட்டன. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன..

D .S .சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றுப் பேசிய வரவேற்பில்,திரு 
சேர்.பொன்.இராமநாதனை,(“the Greatest Ceylonese of all times”).  "இலங்கையின் மாமனிதன் என்றும் இவர்தான்" என்று போற்றிப் பேசியதாக வரலாறு.அதே வேளையில் ஸ்டேட் கவுன்சில்,மந்திரி சபையின்  தலைவராக இருந்த ஸ்ரீ பரோன் ஜய திலக்க ஒரு படி மேலே போய் (“as the Greatest man Ceylon has produced in the past fifty years.”)"இலங்கையின் ஐம்பது வருட வரலாற்றில் மிகவும் சிறந்த மனித பொக்கிஷம்" என்று பாராட்டினார்.இவைகள் ஸ்ரீலங்கா வரலாற்றில் மறையாத இடம் பிடித்தவை.படங்கள் மறையலாம் சரித்திரங்கள் தொடரும்.

சேர்.பொன் இராமநாதன் .

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 

13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். 

அரசியல் சேவை 

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். 

சமூக சேவை 

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. 

சமய சேவை 

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். 

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கோயில் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.இன்றும் இவரது பெயரின் நினைவாக் கொச்சிக்கடையில்,இலங்கைப் புகையிலைக் கொம்பனி இருக்கும் வீதியின் பெயர்,"இராமநாதன் வீதி" என்ற பெயர்ப் பலகையைக் காணலாம்.  

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். 

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். 

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய 
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருமையுடைய சேர்,பொன்.இராமநாதனை அரசியலில் இருந்து,ஓரம் கட்ட வைத்தவர்களும்,எமது சிங்கள நண்பர்கள்தான். 

நன்றி:தமிழ் விக்கி பீடியா 

வெள்ள நிவாரணம் படும் பாடு.

வெள்ள  நிவாரணம்  படும்  பாடு. எனது பிரதேசத்தில்,வெள்ளம் வந்து வடிந்து,அது வந்த
சுவடும்கூட அழிந்து மறைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் பட்ட பாடு,பரமசிவனால் கூடப் பார்க்க முடியாது.உடுத்த  உடையுடன்,எடுத்த பையுடனும்,ஓடித்தப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன்,வீட்டைக் கூடத் திரும்பிப் பார்க்காமல்,வீதிக்கு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.சுனாமி கொடுத்த அனுபவங்கள் பின்னால்  விரட்ட,சொத்துச் சுகங்கள் தேவையில்லை,உயிர் தப்பினால் போதும். என்ற எண்ணத்தில்,தங்கள் அன்றாடத் தேவைக்குத் தேவையான எதையும் கூடக் கவனியாமல்,தற் காலிக நிவாரண முகாம்களுக்குள் காலடிஎடுத்து வைத்தவர்கள் இவர்கள்.இவர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நான் விபரிக்கத் தேவையில்லை.

நிவாரணம்,பத்திரிகைகளிலும்,வானொலிகளிலும்,தொலைக் காட்சிகளிலும்.வெகு 
பிரமாதமாக வழங்கப்படுகிறது.பாக்கிஸ்தான் வழங்கியது,சீன வழங்கியது,இந்தியா 
வழங்கியது,இப்படி பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.சமைத்த உணவு வழங்கியதுடன்,பாடசாலைகளில் தங்கியிருந்தவர்களின் நிவாரணம் முடிந்தது,என்பதை 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஒருவர்,மனவருத்தத்துடன் அறியத் தந்தபோது,மனதுக்கு 
வெகு கஷ்டமாகத்தான் இருந்தது.

எனது நண்பர் ஒருவர்,கிராம அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில்,பொறுப்பான பதவியிலுள்ளார்.இவர் இரவு பகலாக கொப்பியும்,பென்னுமாக,அலைந்து திரிந்தார்,
என்ன விஷயம்,ஏதாவது கவிதை கட்டுரை எழுதுறீங்களா? என்று கேட்டேன்.இல்ல 
நமது பகுதிக்கு,வெள்ள நிவாரணமாக,ஒரு தொகைப் பணம் கிடைத்துள்ளது,அதை எப்படி 
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, பகிர்ந்தளிப்பது,என்ன,சாமான் வாங்கிக்
கொடுக்கலாம்.என்று தலையை பிய்த்துக்கொண்டு,திரிவதாகாவும்,எல்லோருக்கும் 
நிவாரணம் சரியாகக் கொடுத்து முடிக்கும்வரை தனக்குப் பெரிய மன உளச்சலாக,
இருப்பதாகவும்,சொன்னார்.

இன்று காலை,அவரைக்கண்டேன்,என்ன, எங்கே,போகிறீர்கள் என்று கேட்டேன்?
சங்கத்தால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருப்பதாகவும.அந்தக் கூட்டத்திற்கு,தன்னையும் 
கலந்து கொள்ளுமாறு,அவசர அழைப்பு வந்ததாகவும்,துண்டைக்காணோம் துணியைக்காணோம். என்று அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருந்தார்.நானும்,அக்கம்,பக்கம் 
உள்ளவர்களிடம்,நாளை,அல்லது,மறு நாள்,எல்லோருக்கும் வெள்ள நிவாரணம் 
கிடைக்கும், என்று உசுப்பேற்றி விட்டு விட்டேன்.அனைவரும் நியாயமான எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்தோம்.நேரம் ஆக ஆக,எதிர்பாப்புகளும் கூடியது.

நேரம் மாலை ஏழு மணியைத்  தாண்டியது.எல்லோரும் பொறுமையைத் தாண்டி,அதற்கு
அப்பாலும் சென்று விட்டார்கள்.நண்பரின் தலை தெரியத் தொடங்கியதும்,எல்லோர் முகங்களிலும் ஒரு சந்தோசம்,ஒரு ஆர்வம்.கற்பனை கலந்த ஒரு கனவு.நண்பர் நெருங்கி
வந்துவிட்டார்,நண்பரின் முகத்தையும்,அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதின் எதிர் பார்ப்பு,எல்லோர் முகங்களிலும் தெரிந்தது.

நண்பர் சுரமற்ற   குரலில்,சொல்லத் தொடங்கினார்,நிவாரணம் வழங்க வந்த பணம்,
பெரிய அரசியல் வாதியின் தேவைக்குப் பயன் படுத்த வேண்டியுள்ளதாம்,நிவாரணம் நாங்கள்,வழங்கியதாகவும்,நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டதாகவும்,கையெழுத்து வைத்துத் தரும்படி,அரச ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும்,நண்பர் நடந்தவைகளை
தொங்கிய முகத்துடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.   



சனி, 15 ஜனவரி, 2011

பிங்க் தேடு பொறியில் உங்கள் வலைப்பதிவு.


உங்கள்  வலைப்பதிவை பிங் தேடு பொறியுடன்,இலகுவாக இணைக்கவும் , வலைப்பதிவர்களின் வலைப்பதிவை இணைய வாசகர்கள்,இலகுவாகத்
தேடிக்  கண்டுபிடிக்கவும்  இலகுவாக,பிங் தேடுபொறி,இலகுவான முறையை  அறிமுகப் படுத்தியுள்ளது

வலைப்பதிவர்கள் செய்யவேண்டியது,உங்கள் வலைப்பதிவின் URL ,(Blog URL:) இடுகைத் தள ஓடை,(Blog RSS Feed )  உங்கள் வலைப் பதிவின் தலைப்பு (Blog Title ).இவற்றை இதற்கென வழங்கப் பட்டுள்ள இடங்களில் நிரப்பிவிட்டு , அதன் கீழ் காணப்படும் பெட்டியில் உள்ள கோட்டை உங்கள் டெம்ப்ளேட்டின்,காட்டப்படும் இடத்தில் பேஸ்ட் பண்ணி,  சேமிக்கவும்.பின்னர் உங்கள் டெம்ப்ளேட்டை இயல்பு  நிலைக்குக் கொண்டு
வந்து, கணனியை ஓய்வாக்கி,(restart )பின்,தொடரவும்.

பிங்க் தேடுபொறியில் உங்கள் வலைப் பதிவின் (URL ) முகவரியை இடுகையிட்டுத் , தேடிப்பாருங்கள், பலன் பளிச்செனத் தெரியும்.

பிங் தேடுபொறியின் Blog ping tool பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.மேலதிக விபரங்களும்,செயல் முறை விளக்கங்களையும் அங்கு விபரமாகக் காணலாம்.
பிங்க் தேடு பொறியில் உங்கள் வலைப்பதிவு.

உங்கள் வலைப் பதிவு எவ்வளவு தூரம் வாசகரிடம் பிரபல்யம் அடைந்துள்ளது என்பதை அறிய இங்கு சென்று அறியுங்கள்,மேலே கூறியவை யாவும் இதற்கும் பொருந்தும்,அதே
தேவைகளை,இங்கு நிறைவேற்றி (Check All) செய்து பின்னர்,send pings அமத்துங்கள்,
உங்கள் வலைப்பதிவின்,பிரபல்யம் தேடு பொறிகளில் காணலாம்.இந்தத் தளத்திற்குச் செல்ல 

தைப் பொங்கல் வாழ்த்து.!



வெள்ளம் வழிந்து மனவேதனைகள் கழிந்து-மனப் 
பள்ளம் நிறைய  இருந்த பழவினைகள்,  மறைந்து   
உள்ளம் எல்லாம் புது, இன்பம் நிறைந்து -இந்த 
உலகமெல்லாம் இனி,இன்ப ஒளி பரவட்டும்.
அன்புடன்,
"பத்தும் பலதும்"