புதன், 14 செப்டம்பர், 2022

அனுபவம் #,அவமானம்#மனம்#

 தென்றலைத் தீயாக்கி ,தீன் சுவைத்,

தேன் வதையை நஞ்சாக்கி.-பன்பற்ற

வஞ்சகர் கூட வாழ்வது வாழ்வல்ல,

கொஞ்ச நொடியாகும் நில்லாதே.


எதிர்பார்ப்புகள் தவிடு பொடியானால்,

எதிர்காலம் எப்பொழுதும்  கேள்விக்குறி-சதிராடும்

நெஞ்சே, எது வந்தபோதும்,கலங்காதே,

கொஞ்சமும் அசையாதே, விலகியே, போ!


உறவுகள் கலைந்து,உணர்வுகள் தொலைந்து,

துறவிகள் போல வாழும், மணிதா!-மரபுகள்

மறந்து,பண வரவுகள் தேடி, உந்தன்

சிறப்புகள்  மறந்து, சிரிக்காதே செல்.


பணம் ஒன்றுதான் பாக்கிய மென்று,

பிணமாக மாறிவிட்ட  மகா  பதரே, -குணம்

ஒன்று  குறைகின்றதே, செல்லாது

உன்வாழ்வு, சிறக்காது  பார். 


#அனுபவம் #,அவமானம்#மனம்# வெளிப்பாடு#












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள