செவ்வாய், 27 டிசம்பர், 2016

ராஜன் செல்லையா விடுதலைப்புலி அல்ல - இலங்கை பத்திரிகை நிறுவகம்


ராஜன் செல்லையா விடுதலைப்புலி அல்ல - இலங்கை பத்திரிகை நிறுவகம்

நோர்வேயை சேர்ந்த ராஜன் செல்லையா, அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரண்டு நாள் ஊடக அமர்வில் பங்கேற்றமை தொடர்பில் இலங்கை பத்திரிகை நிறுவகம் (Srilanka Press Institute) சார்பாக கருத்தை வெளியிட்டுள்ளது.
ராஜன் செல்லையா, விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரசாரகராக கருதப்பட்டு வந்தார். அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் அவர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் ராஜன் செல்லையா ஊடகவியலாளர் என்ற வகையில் நோர்வே அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட நான்குபேர் கொண்டு ஊடகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
அவர், ஒஸ்லோவில் உள்ள அரச ஒலிபரப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்தநிலையில் அவரை புலியாக காட்டுவது நியாயமற்ற செயல் என்று இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் சுகுமார் ரொக்வூட் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் நிபுணர்களும் இந்த ஊடக அமர்வில் பங்கேற்றனர். ராஜன் என்று அழைக்கப்படும் ராஜகுலசிங்கம் செல்லையா, பிரான்ஸில் இருந்து செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி அலைவரிசையுடன் தொடர்புப்பட்டிருந்ததாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள