திங்கள், 3 ஏப்ரல், 2023

ஈனருக்கு உரைத்திடாதே

 ஈனருக்கு உரைத்திடாதே .


வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்,
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்,
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.
 (விவேக சிந்தாமணி)

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 

(கேளாமல், தகுதி பாராமல் எதையும் சொல்லாதே)
நனறி:Purnayogamp0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள