வியாழன், 12 ஜனவரி, 2017

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்-

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்-
*******************வணங்கி வழி படுவோம்..வழி நடப்போம் ************
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் அமெரிக்கா வின் சிக்காகோ மாநிலத்தில் நடந்த உலக ஆன்மீக மாநா ட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளி லிருந்து பல மதங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடி யிருந்தனர்.
இந்தியாவை பிரதிநிதியாக ஒருவர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவ தற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லா மல் காவி உடையும் தலைப்பா கையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசா ன சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர்,
வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட் டா வி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திரு ந்தவரிட ம் பேசத் தொடங்கினர்.அந்த அலட்சியத்தை யெல்லாம் பொருட் படுத்தா மல் அமைதியாக சிறிது நேரம் அனை வரையும் பார்த்த பிறகு சகோதர சகோத ரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கி னார். அவர் கூட்டத்தி னரை அவ்வாறு அழைத்த விதத்திலே யே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பி யது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்
அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.
இதை விட முக்கியமானது என்னவென்றால் நம்ம நிக்கோலஸ் டெஸ்லா தெரியுமா..அதாங்க நாம் உபயோகபடுத்துகிற அல்டர்நேடிவ் கரண்ட்டை கண்டு பிடித்தது நம்ம டெஸ்லா தாங்க.. அது மட்டுமல்லாமல் ரிமோட் கண்ட்ரோல்,லேசர் வானொலி,நியான் பல்பு என்று நிறைய கண்டு பிடித்தார்.தாமஸ் ஆல்வா எடிச னின் கண்டு பிடிப் புகளில் பாதிக்கும் மேல் டெஸ்லாவி னால் கண்டுபிடிக்கப்பட்டு எடிசனால் காப்பிரைட் வாங்க ப்பட்டது என்றுஅமெரிக்க மீடியாக்கள் இன்றும் சொல்லி க் கொண்டு இருக் கிறது.
நம்ம விவேகானந்தர் சிகாகோவில் சமய சொற்பொழிவு ஆற்றும் பொழுது நின்று கொண்டே மெய் மறந்து கேட்ட விஞ்ஜானிகளில் இந்த நிக்கோலஸ் டெஸ்லாவும் ஒருவ ர். அதன் பின் விவேகா நந்தரை வணங்கிய டெஸ்லா சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?எங்களின் கண்டு
பிடிப்புகளுக்கு இந்துமதத்தின் வேதாந்த கருத்துக்களே மூல காரணம் என்றாராம்.பார்த்தீர்களா நம்ம இந்து மதத்தின் பெருமையை..வெளி நாட்டு விஞ்ஜானிக்கு தெரிந்தது நம்ம பகுத்தறிவு மூதேவிகளுக்கு தெரிய வில்லையே..
இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங் கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற தத்தா குடும்பத்தில் உதித்தார்.
நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரி யாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.
தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார். ராமர் கதாபாத்திரின் மீது மரி யாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார்.
குழந்தையாக இருந்த போதே,நரேந்திர நாதர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரி டம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடு வார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நரேந்திர நாதருக்கு அவர்களுக்கு, தியாகம் மற்றும் துறவற உணர்வு இருந்தது
1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள் ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூ ரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கத்திய தத்துவங்களை யும், ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை யும் படித்தார்.
அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனை களின்பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவு ளை உணர்த்ததாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.
இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் பற்றி நரேந்திர நாதருக்குதெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லை யென் றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறி னார். ஒருமுறை நரேந்திர நாதர்அவரது நண்பர் களுடன் அவ ரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார்.
சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. புரிதலுக்கு பிறகே ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார். ராம கிருஷ்ணரை தனது குரு வாக ஏற்றுக் கொண்டு, இரட் டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற் கொண்டார். யோகா சனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்க ளை கற்பிக்க தொடங்கினார்
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றி லிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கன்னியா கு மாரிக்கு டிசம்பர் 24, 1892ல் வந்தார்அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவி ன் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டு விழுமின் எழுமின் என்று இந்திய இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.
உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமத த்தின் பெருமைகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார்.100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவையே மாற்றிக் காண்பிக் கிறேன் என்று அன்றே மோடி மாதிரி இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன் என்று முழங்கிய விவேகானந்தரின் பிறந்த நாள் தான் இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாக இன்று கொண்டாடப்
படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள