வியாழன், 8 டிசம்பர், 2016

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா


Image result for ஞாபக சக்தி


18சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு  முன் பாடலாகச் சொன்னதை நம்பாத தமிழனுக்கு இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபித்துள்ளார்கள்,இனிமேலாவது
சித்தர் பாடல்களைப் படித்துப் பயனடையுங்கள்

உதாரணத்துக்கு ஒரு

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா

 பாடல்,யூகி முனிவர் சொல்லியது

சொல்லுவேன் மானிடருக்கு நாழி யொன்றில் 
சுவாசமது முந்நூற்றோ டறுபதாகும்
வெல்லுவேன் இருபத்தோராயிரந்தான் 
விளங்கி நிற்கும் சுவாசமது அறுநூறாக
புல்லுவேன் கலை மூன்று நாடி மூன்றாய் 
புகழான மாத்திரையும் செப்பலாகும் 
மல்லுவேன் நாடியது சரியாயோடில்
மானிடர்க்குப் பிணியுமது மருங்கிடாதே

இதன் விபரம் சுவாச பந்தனம் செய்துவந்தால் (பிராணாயாமம்) எப்போதும்
இளமையுடன் இருக்கலாம்.ஒரு நாளைக்கு ஒரு மனிதன் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு தரம் சுவாசிக்கின்றன,அதில் பதினாலாயிரத்து நானுறு  சுவாசம் மூலாதாரத்துடன் சேரும் மீதி ஏழாயிரத்து இரு நூறு சுவாசம் வீணாகி விடுகின்றது வேகமாக சுவாசிப்பதால்.   வீணாகும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி  சரியான முறையால் சுவாசித்தால் காலனையும் வெல்லலாம்
இன்னும் எவ்வளவோ கொட்டிக் கிடக்கிறது தமிழனுக்கு இவைகளை படிக்கத்தான் நேரமில்லை.

யந்திரம்,மந்திரம் எல்லாம் இதற்குள் அடக்கம்",சிவாயநம"என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சும்மா மூச்சை விடும்போது எடுக்கும் நேரத்தை விட  ,சிவாயநம"என்று மூச்சை விட்டால்
நமது சுவாசம் சரியான இடம் போய்ச்  சேரும்.இதை அன்றிருந்த மனிதருக்கு
விளங்கவைக்க உபயோகிக்கப்பட்டதுதான் கடவுள் சக்தி இவைகளை
விளக்க  இந்த பதிவு போதாது நிறுத்தி விஞ்ஞான விளக்கத்திற்குப் போவோம்.

இன்றைய தமிழ் வின் செய்தி 
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, மூக்கினூடுடாக சுவாசிக்கையில் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பயத்துக்குரிய துலங்கல் திறன் அதிகரிப்பதாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றது.
அதேநேரட் வாய்வழி சுவாசம் மேற்படி இயல்புகளை இல்லாது செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ் ஆய்வானது Neuroscience எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுவாசிக்கும் சந்தமானது மனித மூளையில் மின் செயற்பாட்டை தூண்டி, அது உணர்ச்சி சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும், ஞாபகத்தை தூண்டும் செயற்பாடுகளையும் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இவ் ஆய்வில் வெளிச்சுவாசத்தை மேற்கொண்டவர்களை விட, உட்சுவாசத்தை மேற்கொண்டவர்கள் விரைவாக பயந்த முகங்களளை பொண்டவர்களாக மாறியதை இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்தோடு இவர்கள் விரைவாக ஒரு பொருளை ஞாபகப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தனர்.
நாம் உட்சுவாசிக்கும் போது olfactory cortex, amygdala மற்றும் hippocampus இலுள்ள நரம்புக் கலங்கள் தூண்டப்படுகின்றன. அதனாலேயே மேற்படி செயற்பாடுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கருத்து.
இவ் ஆரய்வுக்கென 60 பேர் பரிசீலிக்கப்பட்டிருந்தனர். நாசி வழி சுவாசத்தை மேற்கொண்டவர்களே மேற்படி இயல்புகளை காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் வின்  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள