திங்கள், 1 மார்ச், 2010

பனித்துளி.!









இரவின் உறவில் பிறந்து!
இதழ்கள் மடியில் விழுந்து! 
கதிரோன் வரவில் நலிந்து! 
காலை வெயிலில் கரைந்து! 
உருவம் எல்லாம் கலைந்து!
உரிமை முழுதும் இழந்து! 
பிறந்த இடத்தை அடைந்தாய்! 
பெரிதோர் உண்மை தெளிந்தேன்.!  



அன்புடன்.........
பனித்துளி.கதிரவன்,கவிதை 

4 கருத்துகள்:

  1. அருமை. வாழ்த்துக்கள். பனித்துளி மலர்ந்தது மனதில்...கவிதை பனியில் நனைந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வரவும், வார்த்தைகளும் ,எனக்குப் பெறுமதி மிக்கவை,நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு தெளிவாகப் புரியும்படி எழுதுவதால் இதைக் கவிதையெனப் பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
    மிக நன்று! பொருத்தமான படம்

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் புகழும் என் இனிய தமிழுக்கே

    "பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
    முன்னை நன் றாக முயல் தவம் செய்கிலர்
    என்னை நன் றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன் றாகத் தமிழ் செய்யு மாறே"
    -----திருமூலர் திருமந்திரம்-------------------------

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள