சனி, 20 பிப்ரவரி, 2010

ஆளத்தான் சான் பூமியில்லை!



வேண்டாம் இன்னும் ஒரு பிறவி--எனக்கு 
மீண்டும் இப்புவியில் இறைவா !
தாண்டும் பலம்  இல்லையே--தினம் 
மாண்டு போகிறேன் அடையாளத் தொல்லையாலே!

அண்டவெளியில் ஆவியாய் அலைந்தாலும்-கூவி  
என் அடையாளம்  கேட்பார் யாரு மில்லை 
சண்டைபிடியாமல் சாகிறோம், கைதாகிறோம்-சாமி  
வான் வெளியில் வாழ வளி விடுவாய் 

வேண்டும் வரம் எனக்களித்தால் --தமிழனாய் 
மீண்டும் தோன்றமட்டும் எனக்கருளாதே!
கண்டுவிட்டேன் கடும் நரகத்தை --வீணாகக் 
கொன்றுவிடுகிறார்கள் என்ன கொடுமையிது!

என்னவென்று கேட்க நாதியில்லை---சாமி 
என்னையடித்தவன் வேறு சாதியில்லை!
ஆண்ட பரம்பரையில் பிறந்தெனக்கு--யாம்  
ஆளத்தான் சான் பூமியில்லை! 

ஆண்டியாக்கியும் ஆளை விடவில்லை --பூச் 
சாண்டிகாட்டிப் புரட்டிப் பிரட்டுகிறார்கள்!
வேண்டாம் சாமி ஆமி  வாழ்க்கை--யான்  
வேண்டியது போதும் இந்த யாக்கைக்கு!



2 கருத்துகள்:

  1. kavithai valikkirathu. thamilan nilai kuriththu vetkamataikiren. aaluvom naalkal kaththirukku.

    பதிலளிநீக்கு
  2. தங்களது வரவுக்கும் ,பொன்னான கருத்துரைக்கும்,-யென்
    பாங்கான வணக்கமும்,பெருமையான நன்றிகளும்.
    நம்மவரின் திகிடு தத்தங்கள் நிறையவே இருக்கிறது -அனுபவமாய்
    சும்மா சொல்லக்கூடாது ,சுவையுடன் பின் சொல்வேன்

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள