திங்கள், 14 அக்டோபர், 2019

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ. | Virakesari.lk

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ. | Virakesari.lk: தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ.

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ. | Virakesari.lk

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ. | Virakesari.lk: தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது  - த.தே.கூ.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற ஓல்கா டோகார்ஸுக், பீட்டர் ஹேண்ட்கே | Virakesari.lk

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற ஓல்கா டோகார்ஸுக், பீட்டர் ஹேண்ட்கே | Virakesari.lk: நோபல் பரிசின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசு ஒரே ஆண்டில்

எதிர்காலக் கணவர் எத்திசையில் இருந்து வருவார்



பெண்களின்  பிறந்த ஜாதகத்தை  வைத்து  தனது எதிர்காலக் கணவர் எத்திசையில் இருந்து வருவார் என்பதை நீங்களே அறிந்து கொள்ள  இலகுவான ஒரு முறை சோதிடத்தில் வகுக்கப்பட்டுள்ளது."ஜாதக பாலா போதினி" எனும் சோதிடப் புத்தகத்தில்  காணப்படும் இருபாடல்கள் மூலம்
சகல பெண்களும் தனது கணவன் இருக்கும் திசையை அறிந்து கொள்ளலாம்.இதில்  முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு உள்ளது. ஒன்று  சரியாகக் கணிக்கப்பட்ட  ஜாதகம்   மிக முக்கியம்.
இராண்டாவது பிறந்த இடம் நன்கு  தெரிந்து இருக்கவேண்டும், வைத்திய சாலையில் பிறந்து இருந்தால்  அதையே உங்களது பிறந்த இடமாகக் கொண்டு கணிக்க வேண்டும்.இவை இரண்டும் சரியாக இருந்தால்தான்
சரியான திசையைக் கணித்துப்  பயன் பெறலாம். ஆண்களுக்கும் இந்த விதி
சரியாகப் பொருந்தும் ,முயற்சி பண்ணிப் பாருங்கள், கீழ் வரும் பாடல்களை வாசித்து  தலை கிறு கிறுத்துப் போபவர்கள் அதன் கீழ் காணப்படும்  விளக்கத்தை கவனியுங்கள்.




மங்கையர் தனக்கு வாய்க்கும்  மனமக னிரதங் காணத்
தங்கியே  யுதித்தராசி  தனக்குமே ழிடத் தோனரியேல்
இங்கிதங்  கிழக்குமாலோ  னிசைவட மேற்குச்  சேயேல்
தங்கிடுந்  தென்பாற் புந்தித்  தனக்குஉத்  திரமென்றோதே


ஆகுமே பொன்னோனுக்கு  வமைந்தது வடகீழ்பாலில்
போகமாம்  புகருக்கேதான் பொருந்திய  தென்கீழ்மந்த
னாகமம்    மேற்கிரண்டு  அரவினுக்  குரை  தென்மேறப்பால்
பாகமாய் விளம்பலாகும்  பனிமதிக்கிது  வென்றோதே


மான்விழி மங்கையர்க்கு,மணமகன் இருக்குந் திசை  இன்னதென்று அறிய,
அம்  மங்கையர் அவனியில் உதித்த போது  கணித்த ஜாதகத்தில்  "ல " என்று
இருக்கும் கட்டத்தில்  இருந்து ஏழாவது கட்டம்  எதுவென்று பாருங்கள்,  அந்த
பாவந்தான் பெண்களின் மணவாளனைக் குறிக்கும் பாவம்  உதாரணமாக
ரிஷப, துலா  லக்கினமானால்  சுக்கிரன்  இந்த இரு ராசிக்கும் அதிபதி.அதேபோல்  மேஷ, விருச்சிக இராசியானால் செவ்வாய் அதிபதி இதை இலகுவாக பின்வரும் அட்டவணை மூலம் இலகுவாக அறிந்துகொள்ளலாம்.


ராசி அதிபதிகள்



ஜாதகத்தில் ஏழாம்  இடத்தில்  அதிபதி சூரியன்  ஆக இருந்தால்  கிழக்குத் திசையிலிருந்து  மணவாளன் அமைவார். சந்திரன் அதிபதியானால்  வட
மேற்குத்  திசை, செவ்வாய்  ஏழாம்  அதிபதியானால்  தென்திசையிலிருந்தும்
புதன்  ஏழாம்  இடத்ததிபனானால்  வடக்குத் திசையிலிருந்தும்.
வியாழன்  ஏழாம் வீட்டுக்கு அதிபதியானால்  ஈசான்ய மூலையிலிருந்தும்
(வட கிழக்குத் திசை )  சுக்கிரனின்  வீடு ஏழாம்  வீடாக வருமானால்  அக்கினி
மூலையான  தென்கிழக்கென்றும் சனியின் வீடுகள் ஏழாம்  வீடாக  வந்தால்
மேற்குத் திசையிலிருந்தும்  ராகு கேது  பலமாக ஏழாம் வீட்டை  ஆக்கிரமித்திருந்தால்  நைருதியாகிய  தென்மேற்குத்  திசையிலிருந்தும்
வரன்கள் அமையும். சந்திரனிருக்கும் ராசி பெலமடைந்திருந்தால்  அந்த
ராசியையும்  அதற்கு  ஏழாம்மிடமாக  அமையும்  ராசி நாதனையும் அனுசரித்து பலன் காண வேண்டும்.

  

சனி, 12 அக்டோபர், 2019

எல்பிட்டிய பி. சபை அனைத்து வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி






எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 ஆசனங்களை வென்றுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று (11) காலை  7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்று இத்தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதோடு, அதில் 75 வீதமானோர் வாக்களித்திருந்தனர்.
அதற்கமைய, 23,372 (56.31%) வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 வட்டார ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதோடு ஏனைய கட்சிகளுக்கு விகிதாசார ரீதியிலான ஆசனங்களையே கிடைத்துள்ளன. 
அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 (24.37%) வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 (12.7%) வாக்குகளைப்  பெற்று 03 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 (5.86%) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன











வெள்ளி, 11 அக்டோபர், 2019

இராசி வசியம்

இராசி வசியம்

திருமணப் பொருத்தத்தில் முக்கிய பொருத்தங்களில் ஒன்று."ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" கிட்டத்தட்ட  இது ஒன்றே  போதும் நமது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கட்டியம் கூற, இதையே
சோதிட நூலில் ஒன்றான "சூடாமணி உள்ளமுடையன்" என்னும் சோதிட  புத்தகத்தில் வரும்  பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.கிட்டத்தட்ட
நமது நண்பர்களுக்கும் இதே  விதி பொருந்தும். பரிசீலனை செய்து பாருங்கள்.முடிந்தால் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

பொரிந்திடு  மறிக்குச் சிங்கம் விருச்சிகம் பொரு  விடைக்கு 
விருந்து  நற்  கடகங்  கோலா  மிதுனத்துக்  கரிவை  யாகுந் 
திருந்திகற் கடகத் துக்குத்  தேட்சிலை  சிங்கத் துக்கு 
 கருஞ் சுறா வசியமாகுங்  கன்னிக்கு விடை முன் பொன்னே.

மேடத்துக்கு  சிங்கமும் விருச்சிகமும்,
ரிஷபத்துக்கு  கடகமும்  துலாமும்
மிதுனத்துக்கு கன்னியும்
கடகத்துக்கு விருச்சிகமும் தனுசும் .
சிங்கத்துக்கு மகரமும்
கன்னிக்கு  ரிஷபமும் மீனமும்  வசியம்

பொன்னாய் துலைக்குப் புல்லாய் பொருந்தே ளதற்கு நண்டாங் 
கன்னியு வசிய பாகுங் கார்முக மதற்கு மீனாஞ் 
சொன்னவில் கரத் துக்குக் கும்பமாம்  கும்பத் துக்கு 
மன்னுமீன் மீனத்  துக்கு மகரமும் வசியந்தானே.

துலாத்திற்கு  மகரமும்
விருச்சிகத்திற்குக்  கடகமும் கன்னியும்
தனுசுக்கு மீனமும்
மகரத்துக்குக் கும்பமும்
கும்பத்துக்கு  மீனமும்
மீனத்திற்கு  மகரமும் வசியம்


இதையே இந்த அட்டவணையும் சுருக்கமாக விளக்குகிறது.


இன்னும் அறிய இங்கே செல்லுங்கள் 

வியாழன், 10 அக்டோபர், 2019

பொது அறிவு-14




1.இந்தியாவில் உத்தர பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற 59வது  சிரேஷ்ட
மெய்வல்லுனர் போட்டியில் அழைப்பு நாடாக ,கலந்துகொண்டுஆண்களுக்கான  4x 400 தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றநாடு?

இலங்கை

2.இந்தியாவில் உத்தர பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற 59வது  சிரேஷ்ட
மெய்வல்லுனர் போட்டியில் அழைப்பு நாடாக ,கலந்துகொண்டுஆண்களுக்கான  4x 400 தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்ற  வீரர்கள்?

1.அசங்க ரத்ன சேன  2.டிலான் பொகோட 3.ஏரங்க லக்மல் 4.தசுன் சில்வா

3'இலங்கையின் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியின்  தேசிய
சாதனைக்குச் சொந்தக்காரர் பெயர் என்ன?
நிமாலி லியனராட்சி.

4.13வது இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டு விழாவில்,50 ஓவர் ஒருநாள்  கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற பல்கலைக் கழகம்?
ஸ்ரீ ஜய வர்த்தன புர பல்கலைக்கழகம்

5.உலகிலேயே மனிதர்கள்  வாழ்வதற்குச்  சிறந்த இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளும் நகரங்களும்
1.ஆஸ்திரியா -வியன்னா
2.அவுஸ்திரேலியா-சிட்னி
3.அவுஸ்திரேலியா-மெல்போர்ன்
4.ஜப்பான் -ஒசாகா
5கனடா -வான்கூவர்
6.கனடா -கல்காரி

6.உலகிலேயே மனிதர்கள்  வாழ்வதற்கு அருகதையற்ற (மோசமான) இடங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளும் நகரங்களும்
1.சிரியா -டமாஸ்கஸ்
2.நைஜீரிய -லாவோஸ்
3பங்களாதேஸ் -டாக்கா
4.லிபியா -திரிபோலி
5.பாகிஸ்தான் -கராச்சி

7.இலங்கை அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் விளங்கிக்
கொள்வது
1.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றங்கள்,திருத்தங்கள்.
உதாரணம் பாராளுமன்றத்தை ஒரு வருட முடிவில் ஜனாதிபதியால்.
கலைக்கமுடியும்.19வது திருத்தத்தின் பின்னர்.நாலரை வருடங்களின்
பின்னரே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

2.சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல்.

3.வேறுநாட்டின் பிரஜா உரிமையுள்ளவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.(இரட்டைப் பிரஜா உரிமை)


8.இலங்கை அரசியல் அமைப்பின் 18வது திருத்தத்தின் மூலம் விளங்கிக்
கொள்வது
ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

9.இலங்கை அரசியலமைப்பின் படி அரசகரும மொழியாக பயன்படுத்த வேண்டிய மொழிகள்?
தமிழ்/ சிங்களம்

10. இலங்கை அரசியலமைப்பின் படி அரசகரும மொழிகளுக்கு  இணைப்பு மொழியாக  பயன்படுத்த வேண்டிய மொழி?
1.அரபு  2.ஆங்கிலம் 3.சிங்களம் 4.தமிழ்

11.இலங்கை அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகிக்கிகக் கூடிய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
35

12.இலங்கை அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்து இல்லாத  அமைச்சர்களாகவும்,பிரதி அமைச்சராகவும்  பதவி வகிக்கிகக் கூடிய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
45.

13.இலங்கை அரசியல் சாசனப்படி  "தேசிய அரசாங்கம்" என்பதன்  வரையறை என்ன?

14.இராமாயணம் பின் வரும் பெயர்களால் அழைக்கப்பட்டது?
ராமகாதைராம அவதாரம்,
கம்பராமாயணம்சித்திரம் - 

15.நாலடியார் பின் வரும் பெயர்களால் அழைக்கப்பட்டது?
.வேளாண்வேதம்நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - 

16..கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்? (கம்பராமாயணம்) 
 ராமாவதாரம்.

17.குழந்தை இலக்கியம் -.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் என அழைக்கப்படுவது?
 பிள்ளைத் தமிழ்

18.தமிழரின் இரு கண்கள் ?
- தொல்காப்பியம் /திருக்குறள்

19..நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்?
 - நாலடியார்.

20.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது?
 - ஜிப்சம்.

21. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை? - டாக்டர்சாமுவேல் ஹென்மென்

22.எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் ?
- ஹாவர்ஷியன் குழாய்

23. புறாவின் விலங்கியல் பெயர்?
 - கொலம்பியா லிவியா

24. நாள் ஒன்றுக்கு மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு?
 - 1.5 - 2 லிட்டர்.

25. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்? -கிறிஸ்டோபர்

26. மஞ்சள் காமாளை  நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம்? - கீழாநெல்லி

27.எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து -  அசிட்டோதையாமிடின் AZT

28.சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்?
 புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்.

29. செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

30.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்

31.நிலவு இல்லாத கோள் வெள்ளி

32.இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன்வைரம்

33.செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர்நைலான்ரேயான்

34. நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

35.உலகின் மிகப் பெரிய வெப்ப மண்டலக் காடு? அமேசான் காடு 

36.பூமியின் 6%மான இடப்பரப்பில் அமைந்துள்ள வெப்ப மண்டலக் காடு? அமேசான் காடு 

37,ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகர்?
பாக்கீர்  மாக்கார்

38.அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் 2019 மகளீர்  ஒற்றையர் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ்சை  தோல்வியடையச் செய்தவர்?
கனடா  நாட்டைச் சேர்ந்த  பியங்கா ஆன்ட்ரீஸ் 
  
39.பூமியில் இருந்து சந்திரனின் தூரம்?
384,000.Km 

40.இந்திய விண்வெளி பயணத்தின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் 
சுகன்யான் =2022

41.சந்திராயன் -2 வில் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி  இயந்திரங்கள் ? 
1.ஆர்பிட்டர் 2.விக்கிரம் லேண்டர் 3.பிராக்கியன்  ரோவர்.

42.எட்டுத் தொகை நூல்களுள் முதன்மையானது எது?
நற்றிணை 

43.அகத்தினையும்,புறத்திணையும் இணைத்துக் கூறும் எட்டுத்  தொகை நூல் எது?
பரி பாடல் 

44.பிரித்து எழுதுக பாகல் காய் ?
பாகு +அல் +காய் 

45."செலவிட உகந்த வருமானம்" என்றால் என்ன?

46.உலகில் இயற்கை விவசாயத்தின் தந்தையாக கருதப்படுபவர்?
ஜப்பானைச்  சேர்ந்த  மகாண புகோகா 

47.உலகின் பட்டினி அட்டவணை 2019ல் இலங்கையின் நிலை?                                         
  67வது இடம்.

48. இலங்கை அரசியல் அமைப்பின்படி பிரதமருக்கான செயலாளரை நியமிக்கும் 
அதிகாரம்  யாருக்குள்ளது?
ஜனாதிபதி 

49.லண்டனில் அமைந்துள்ள மெர்ல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் (MCC)தலைவராக 
தெரிவு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான்?
குமார் சங்காக்கர 

50.ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப் பட்டதன் முக்கிய நோக்கம்?
 நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி,மனித உரிமைகள்,மற்றும் அபிவிருத்தி மேம்படுத்தல். 

51.UNOவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி?
ஹான சிங்கர் 

52.2019ஆம் ஆண்டிற்கான தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் (NCC)27வது 
வருடாந்த ஏற்றுமதி விருது பெற்ற நிறுவனம்?
osian lanka நிறுவனம் 

53.இலங்கையில் பிரித்தானியார்களால் முதன்முதலில் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட  அரசியல் அமைப்பு முறை என்ன 
1833  கோல்புறுக் கெமெரோன்   

54.சங்ககால நூல்களில் "மதுரைக்காஞ்சி" எனும்  நூலை எழுதியவர்?
மாங்குடி மருதனார் 

55.மழையை அளக்கப் பயன்படுத்தும் உபகரணம்?
புழுவியோ மீட்டர் 

56.ரீம் அலகைப் பயன்படுத்தி அளக்கப் பயன்படும் பொருள்?
கடதாசி 

57.லத்தின் மொழியில் "ஸ்னோ ஒயிட் "என்ற சொற்தொடரைக் தழுவிய பெயரைக்  கொண்ட  தோல்  பராமரிப்பு பிராண்டு யாது?
நீவியா 

58 ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்.
 இமய மலைத்தொடர்கள்

59. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது 
 குளுக்காஹான்

60.டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
 ஒலியின் அளவு

61. LCD என்பதன் விரிவாக்கம் என்ன?   
 Liquid Crystal Display

62.இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
மகாத்மா காந்தி 

63.வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்.
கறுப்பு 

64. புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு 



67.வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி.

68. இணையம் என்ற  வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் .

69. தேம்பாவணி நூலின் ஆசிரியர்  வீரமாமுனிவர்

70. கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை ? ஆறு

71 பழந்தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்

72. உலகிலேயே  அதிய மழை  பெ றும் இடம்? சிரபுஞ்சி.

73. பெயர்ச் சொ ல்லின் பொருளைச் செயப்படு பொருளாய்  வேறுபடுத்துவது?
இரண்டாம் வேற்றுமை உருபு

74. தமிழின் தொன்மையை  உலகையறிச் செய்தவர் யார்?
: கால்டுவெல்

75.) போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
 a) உலா b) பங்கு c) பரணி d) கலம்பகம்

76.நாணயக் குறியீடு JPY குறிக்கிறது.
yen

77. 2019ம் ஆண்டுக்கான .பௌதிகவியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள்?
சுவிற்சலார்ந்தைச் சேர்ந்த மைக்கல் மேயர்,மற்றும் டிடியர் கியூலசும்
கனேடிய அமெரிக்க விஞ்ஞானியுமான ஜேம்ஸ் பெப்லஸ்.

78.நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி? 
மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்

79.நோபல் பரிசு முதன் முதல் வழங்கப்பட்ட  ஆண்டு?
1901

80.புகையிலையை ஆசியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்?
போத்துக்கீசர்

81.எத்தகைய பங்களிப்பு மூலம் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்?
பிரதி நிதிதத்துவ மக்களாட்சி

82.உலக நீதிமன்றம் அமைந்துள்ள நாடு?
நெதர்லாந்து- ஹேக்

83.ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் அமைந்துள்ள நாடு?
அமெரிக்கா நியூ யோர்க்

84.சத்தியம்,சிவம்,சுந்தரம் எந்த மொழியில் இருந்து வந்தவை?
சமஸ்கிருதம்

85.இரு கட்சி முறை உள்ள நாடுகள் ?
அமெரிக்கா பிரிட்டன்

86.சொட்டு நீர் நீர்ப்பாசணத்தை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு?
இஸ்ரேல்

87.உலகில் முதன் முதல் GST யை அறிமுகம் செய்த நாடு?
பிரான்ஸ்

88.உலகம் அளாவிய வலையைக் (world wide web .WWW) கண்டுபிடித்தவர்
யார்?
டிம் பெர்னர்ஸ் லீ

89.போ-கேரோ -கீ என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாகியான்

90.தலா வருமானம் சுட்டிக் காட்டுவது?
மக்களின் வாழ்க்கைத் தரத்தை

91.பணக் கொள்கையை நடை முறைப்படுத்தும் வங்கி?
மத்திய வங்கி

92.மண் பற்றிய படிப்புக்கு பெயர் என்ன?
பீடாலஜி

93.கூகுள் நிறுவனம் அதனுடைய  கெட்டிக்காரத்தனமான குறுந்தகவல்
அனுப்பும் பயன்பாட்டை -----------------என்ற பெயரில் தொடங்கியது?
அலோ

94.இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியின் பெயர்?
சபரி அத்தப்பத்து

95.ஒரு சிறுவனின் தொண்டைப்பகுதி அகன்று குரல் மாற்றம் ஏற்படுகிறது?
மேலும் அவனுடைய முகத்தில் ரோம வளர்ச்சிகாணப்படுகின்றது .இதற்கான ஹார்மோன்  எது?
டெஸ்டோஸ்டீரோன்

96.பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பக்டீரியம்?
ஹெலிக்கோ பேக்ட்டர் பைலரி

97.பொருளாதாரத் திட்டமிடுதலை முதன் முறையாக  செயல் படுத்திய நாடு?
சோவியற் ரஷியா

98.உலகில் அதிகம் பேசப்படும் மொழி?
சீனம்

99.நீதிபதிகள் சட்டமன்றத்தால் தெரிவு செய்யப்படும் முறை பின்பற்றப்படும் நாடு?
சுவிற்சலார்ந்து

100.பின்வருவனவற்றுள் எந்த சேர்மம் ஆஸ்துமா மற்றும் கக்குவன் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது?
பென்சைல் பென்சோயட்



If you have any problem or doubt regarding  General Knowledge for Competitive Exams, you can ask me in the comment section.
Like and Share with your friends.

தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்  | Virakesari.lk

தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்  | Virakesari.lk: தெற்காசியாவில் மாத்திரமல்ல உலகிலேயே பொதுஜன பெரமுன போன்றதொரு அரசியல் கட்சி கிடையாது -  பசில்

புதன், 9 அக்டோபர், 2019

வேதியியலுக்கான நோபல் பரிசு 2019

M. Stanley Whittingham



                                                எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம்


                                                         ஜான் குட்னொஃப்,


                                                        அகிரா யோஷினோ


செல்லுலார் தொலைபேசிகள் மற்றும் மின்சார கார்களின் நமது மொபைல் மின்னணு நாகரிகத்தை சாத்தியமாக்கிய தொழில்நுட்பமான லித்தியம் அயன் பேட்டரிகளின் வளர்ச்சியில் மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்று காலை வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்னொஃப், ஆஸ்டின், பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் மீஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோர் பரிசுகளை  சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

"எங்கள் முழு உலகமும் லித்தியம் அயன் பேட்டரியால் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பாராட்ட வேண்டும்," என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் கிளேர் கிரே கூறினார், அவர் குட்நொஃப் மற்றும் வைட்டிங்ஹாம் ஆகிய இரண்டிலும் பணியாற்றியுள்ளார். "இது லித்தியம் அயன் பேட்டரி ஆகும், இது முழு போர்ட்டபிள் எலக்ட்ரானிக்ஸ் புரட்சியையும் உண்மையில் ஆதரிக்கிறது, மேலும் CO2 ஐ அதிகரிப்பதை சாத்தியமாக்குகிறது."

"உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மொபைல் சாதனத்தை வைத்திருக்கிறது, இது ஒரு ஸ்மார்ட் போன், மடிக்கணினி அல்லது டேப்லெட் மற்றும் கிட்டத்தட்ட அனைத்தும் ரிச்சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது" என்று பொருள் அறிவியல் மற்றும் உலோகவியல் பேராசிரியர் பால் காக்சன் கூறினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஒரு மின்னஞ்சலில். "அவை மொபைல் சகாப்தத்தின் மறைக்கப்பட்ட பணிமனைகள், அவை 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு நன்றி தெரிவித்தன." இன்றைய பரிசு, குட்நொஃப், வைட்டிங்ஹாம் மற்றும் யோஷினோ ஒவ்வொருவரும் அந்த உருமாறும் வேலையில் ஆற்றிய பாத்திரங்களை மதிக்கிறது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கியபோது, ​​உலகம் ஒரு ஆற்றல் நெருக்கடியையும் சுற்றுச்சூழலையும் எதிர்கொண்டது, இவை இரண்டும் பல தசாப்தங்களாக கட்டப்பட்டு வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மின்சார சகாப்தத்தின் விடியலில், பேட்டரிகள் ஆரம்பகால வாகனங்கள் மற்றும் பிற சாதனங்களின் பொதுவான சாதனங்களாக இருந்தன. ஆனால் அவை கனமானவை, திறமையற்றவை, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி தேக்கமடைந்தது. ஆட்டோமொபைல்கள் மற்றும் பிற  அமைப்புகளுக்கு சக்தி அளிப்பதற்கான முக்கிய ஆற்றல் ஆதாரமாக பெட்ரோலிய எரிபொருள்கள் விரைவாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால் 1960 களில், எண்ணெயை இவ்வளவு நம்பியிருப்பதன் ஆபத்துகள் தெளிவாகத் தெரிந்தன. யுனைடெட் ஸ்டேட்ஸில், எண்ணெய் பற்றாக்குறை, புகைமூட்டம் நிறைந்த நகரங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆபத்துகளுடன் இணைந்து, ஆற்றலைச் சேமிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்னும் நிலையான வழிகளைக் கண்டறிய ஆராய்ச்சி (விரைவாக) தேவை என்பதை தெளிவுபடுத்தியது.

எனவே, பேட்டரிகளின் வேலை மீண்டும் வந்தது. குறிப்பாக, விஞ்ஞானிகள் லித்தியத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேடினர், கால அட்டவணையில் மிக இலகுவான உலோகம் மற்றும் எலக்ட்ரான்களைக் கைவிடுவதன் மூலம் அயனிகளை உருவாக்குவதற்கு முன்கூட்டியே ஒரு பொருள். ஆனால் "ஒரு பேட்டரியில் லித்தியத்தைப் பயன்படுத்த, நீங்கள் உண்மையில் அதன் வினைத்திறனைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று லோவெலில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினருமான ஓலோஃப் ராம்ஸ்ட்ரோம் இன்று அறிவிப்பின் போது கூறினார். "பரிசு பெற்றவர்களின் பணி அதைத்தான் அடைந்துள்ளது."

பேட்டரிகள் அடிப்படையில் இரண்டு மின்முனைகளில் நிகழும் தொடர்ச்சியான ரசாயன எதிர்வினைகள் மூலம் ஆற்றலைச் சேமித்து வெளியிடுகின்றன, நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட கேத்தோடு மற்றும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அனோட். நேர்மறை அயனிகள் இரண்டிற்கும் இடையில் ஒரு எலக்ட்ரோலைட் வழியாக அனோடில் இருந்து கேத்தோடிற்கு நகர்கின்றன, இதன் விளைவாக எலக்ட்ரான்கள் இணைக்கப்பட்ட சாதனத்திற்கு சக்தி அளிக்க அமைக்கப்பட்ட ஒரு சுற்று வழியாக வேறு வழியில் செல்ல தூண்டுகிறது. பேட்டரி ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையில் இந்த செயல்முறை தலைகீழாக மாற்றப்படுகின்றது.