.
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
செவ்வாய், 6 டிசம்பர், 2022
13வது, ஆண்டு நினைவஞ்சலி.
13வது ஆண்டு நினைவஞ்சலி,
கந்தப்பர் கண்டுமணி வேலுப்பிள்ளை.
பிறப்பு:1928-02-27 இறப்பு:2009-12-09
பதின்மூன்றாண்டுகள் பார்த்திருக்கப் பறந்து விட்டது,
பதிந்துவிட்ட நினைவுகள் பசுமரத்தாணியாய் பரந்துவிட்டது,-அதிர்ந்து!
எதிரேநிற்பதுபோல் எதிலும் ஒரு தோற்றம்,நினைவு
சதிராடும் மனத்துடன் தினம், தவிக்கின்றோம் தந்தையே.,!
#நினைவு#நாள்#என்#தந்தை#
.
லேபிள்கள்:
13வது,
ஆண்டு .நினைவஞ்சலி,
கந்தப்பர். கண்டுமணி. வேலுப்பிள்ளை.
ஞாயிறு, 4 டிசம்பர், 2022
ஞாயிறு, 27 நவம்பர், 2022
ஆறுதல் காண்பதுவும் அரிது.
மோப்பம் பிடிக்கும் பிள்ளைகள்,முடிந்த கணவுகள்- ஏப்பமிடும்
நேரமெல்லாம் எரிகின்ற நெஞ்சம், அணைக்க முடியாது,
ஆறுதல் காண்பதுவும் அரிது.
வென்றுவிட்டோம் என்று தொடைகளைத தட்டுவதும்
வென்றுவீழ்த்திவிட்டோம் என்று வீறாப்புக் கொள்வதும்-மன்றில்
ஆற்றாதவன் ஆணவத்தில் செய்யும் செயல்
போற்றாதீர்கள் பொல்லாதது இழி செயல்.
கதைப்பார்கள் ஆயிரம் பெருமைக் கதைகள்
உதைப்பார்கள் அக்கனமே,இக்கதையைக் கேட்டவனை
முறைப்பார்கள் முழுப்பெருமையும் கேட்கவில்லையென்றும்
குறையெதுவும் அவர்களிடம் கண்டுவிடக் கூடாதென்று.
லேபிள்கள்:
அரிது.,
ஆறுதல்,
காண்பதுவும்
புதன், 23 நவம்பர், 2022
சித்திரமும் கைப்பழக்கம்.....
சித்திரமும் கைப்பழக்கம்.....
ஒரு செயலை நாளும் செய்து வந்தால்
நாளடைவில் அது பழக்கமாகிப் போகும்.
பழக்கம் தொடர்ந்து நடைபெறுமானால்
அது வழக்கமாகிவிடும்.
பழக்கம் வழக்கமாகி அதுவே
பழக்கவழக்கமாகிவிடுகிறது.
நல்லதோ கெட்டதோ எல்லாமே
பழக்கத்தால் வருவதுதாங்க...
பழக்கம் என்றாலே பழகுதல் ,
பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள்.
எந்தச் செயலை செய்வதற்கும்
பயிற்சி வேண்டும்.
பழக்கம் என்பது கற்றல்
என்றுதான் கொள்ள வேண்டும்.
பழக்க வழக்கம் நாளடைவில் மரபாக
கடைபிடிக்கப்பட்டு அதுவே
ஒரு செயலாக மாறிவிடுகிறது.
நமது கலாச்சாரம், மரபு எல்லாமே
இவ்வாறு பழக்கவழக்கத்தினால்
வந்தவைதான் என்று கூறுவார்கள்.
பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும்
எளிதாகச் செய்ய முடியாது.
பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும்.
கால்கள் தடுமாறி கீழே விழும்.
எத்தனை முறை இடறினிலும்
அது தனது முயற்சியை விட்டுவிடுவதில்லை.
நடக்கும் வரை அதன் முயற்சி
தொடரும்.
அதன் பின்னர் வழக்கமாக நடக்கத்
தொடங்கிவிடும்.
சைக்கிள் ஓட்ட வேண்டுமா....?
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி
எடுத்துக் கொள்கிறோம்.
சமையல் செய்யும் கலையும் பழக்கத்தால்
வாய்க்கப் பெறுவதுதான்.
பயிற்சி என்கிறோமே அதுதான் பழக்கம்
என்பது இப்போது புரிந்து போயிருக்கும்.
நீச்சல் பழகிக் கொண்டால் எவ்வளவு
ஆழமான கிணற்றிலும் நீந்த முடியும்.
பள்ளியில் அன்னா ஆவன்னா எழுத
எத்தனைமுறை எழுதி எழுதிப்
பழகி இருப்போம்.
படம் வரைய எத்தனைமுறை
அழித்து அழித்துத் திருத்தித் திருத்தி
வரைந்து வரைந்து ஒருவழியாக
முடித்துவிட்டு நானா இப்படி
வரைந்தேன் என்று பார்த்துப் பார்த்து
ஆச்சரியப்பட்டுப் போயிருப்போம்.
தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து
அலுங்காமல் குலுங்காமல் நடப்போமே
அது பிறந்தது முதலே நமக்குத்
தெரிந்த ஒன்றா?
எல்லாம் ஒரு பயிற்சி தாங்க..
தமிழ்ச் சொற்களும் பல நேரங்களில்
பயிற்சியின்மையால் பிழையாக
உச்சரிக்கப்படுதல் உண்டு.
குளத்தைப் பார்த்து குலம்
என்பதும்
மழையைப் பார்த்ததும் மல வருது
என்பதும்
பள்ளத்தைப் பல்லம்...பல்லம்
என்று சொல்வதும் கேட்பதற்கு
வேடிக்கையாக இருக்கும்.
முறையான பயிற்சி இருந்தால்
தவறு வராது.அதனால்தான்
நாநெகிழ்ப் பயிற்சிக்கான
சொற்றொடர்களைப் பள்ளிகளில்
சொல்ல வைப்பார்கள்.
அப்படி முறையான பயிற்சியால்
வந்ததுதான் இந்தத் தமிழ்ப் பேச்சு.
கல்வியா எனக்கு வராது...
கணக்கா?
கணக்கைக் கண்டாலே நான்
காத தூரம் ஓடுவேன்.
இப்படிக் கூறுகிறீர்களா?
இனி அப்படியெல்லாம்
கூறமுடியாது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.
மனம் வைத்துப் படித்தால் கல்வியும்
பழக்கமாகிப்போகும்.
நல்லமுறையில் படிக்க முடியும்.
நம் நடைமுறைகள் யாவும்
மேற்கொள்ளுவதும் பழக்கத்தினால்
வருவதுதாங்க...
அதிகாலையிலேயே எழுந்து நடப்பது
ஆரோக்கியத்திற்கு நல்லது.
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
என்று கையைக் காலை முடக்கித்
தூங்கினால் பழக்கம் ஏற்படாது.
காலையிலேயே எழும்பி நடைப்பயிற்சி
செய்யுங்கள் .உடலினைப் பேணும்
நல்லொழுக்கம் வந்து சேரும்.
உணவில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்கப்பட
வேண்டும். பேச்சில் ஒரு ஒழுக்கம்
கடைபிடிக்க வேண்டும். நம் நடைமுறையில்
ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும்.
இந்த ஒழுக்கம் ஒரே நாளில் வந்துவிடாது.
பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் அது பழக்கவழக்கமாகி
நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.
அப்படியானால் எல்லாப் பழக்கவழக்கத்தையும்
ஏற்படுத்திக் கொள்வது நம்
கையில்தான் இருக்கிறது இல்லையா ?
தொழில்களில் பழக்கத்தை
ஏற்படுத்தி விடலாம்.
ஆனால் குணத்தில்.....
அதுதாங்க முடியாது என்கிறார் ஔவை.
இவற்றை எல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள
முடியும்.ஆனால் பிறவிக் குணத்தால்
வாய்க்கப்பெறுவனவும் சில உண்டு
என்கிறார்.
நம்மால் கூடாததும் உண்டோ?
அதுதாங்க பிறவிக் குணத்தால்
வருவதை பயிற்சியால் பழக்கப்
படுத்திக் கொள்ள முடியாதாம்.
பிறவிக்குணம் என்றால் தப்பாக
எடுத்துக்கொள்ளக் கூடாது.
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு
வருவதுதான் பிறவிக் குணம்.
நட்பு, தயை, கொடை ஆகிய மூன்றும்
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத்
தானாக வருவதாம்.
இதைத்தான் பிறவிக்குணம் என்கிறார்
ஔவை.
நம் வீட்டுக்கு வந்து போகும்
அப்பாவின் நண்பர்கள், அவர்களின்
பேச்சு இவை யாவும் நம்மையும் அறியாமலேயே
நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தும்.
அந்தக் குரல்கள் மாறிமாறி
நம் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
பெற்றோர் நல்லவர்களோடு நட்பு
கொண்டிருந்தால் பிள்ளைகளுக்கும்
நல்லவர்களோடு பழகும்
நற்பண்பு ஏற்படும்.
மாறாக தீய நட்பு பெற்றோருக்கு
இருக்குமானால் பிள்ளைகளிடம்
நல்லவர்களோடு பழகவேண்டும்
என்ற பண்பு இயல்பாகவே இல்லாமல்
போய்விடும்.
இரண்டாவதாக தயை அதாவது இரக்க குணம்.
இதுவும் பெற்றோரிமிருந்து வருவதுதான்.
பெற்றோர் கடின இதயம் உள்ளவர்களாக
இருந்தால் பிள்ளைகளிடமும் நாம்
இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது.
மாறாக பெற்றோர் இரக்க சிந்தை
உள்ளவர்களாக இருந்தால் அதனைப்
பார்த்துப் பார்த்து வளரும் குழந்தைக்கும்
இயல்பாகவே கருணை உள்ளம்
வந்துவிடும்.நம் கண்முன்னே
நடக்கும் செயலைப் பார்த்துப் பார்த்துதான்
குழந்தைகள் வளருவார்கள்.
போலச் செய்தல் என்னும் பண்பு
குழந்தைகளுக்கு நிறையவே உண்டு.
பெற்றோர் செய்வது போலவே
தாங்களும் செய்ய வேண்டும்
என்று நினைப்பார்கள்.
அதனால்தான் அவர்களின் குணநலன்கள்
அப்படியே நம்மை வந்து
தொற்றிக் கொள்கிறது.
மூன்றாவதாக கொடை.
இதுவும் பெற்றோரைப் பார்த்து
வளரும் பண்புதான்.
பெற்றோர் அறுத்த கைக்குச்
சுண்ணாம்பு வைக்காதவர்களாக
இருந்தால் பிள்ளை வள்ளலாக
இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க
முடியாது.
முன் கை நீண்டால்தான் முழங்கை
நீளும் என்பார்கள்.
நம் முன்னோர் கொடுத்துப் பழக்கப்
படுத்தி இருந்தால்தான் நமக்கும்
கொடுக்க வேண்டும் என்ற பண்பு வரும்.
"இருக்கிறதை எல்லாம் தானதருமம்
பண்ணிவிடக்கூடாது... எல்லோரும்
ஏமாற்றுக்காரர்கள்....யாரையும் நம்பி
விடக்கூடாது "என்று வீட்டிற்குள்
பேசிக் கொண்டிருந்தால் குழந்தைகள்
மனதிலும் அது அப்படியே
பதிந்துவிடும்.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம்
ஏமாற்றுக்காரர்கள் என்று ஒரு
மனக்கணக்குப் போட்டு வைத்துவிடும்.
இப்படிப்பட்ட சூழலில் வளரும்
குழந்தைகளுக்குத் தானம் செய்யும்
பண்பு எப்படி வளரும் ?
இப்படி வளரும் குழந்தைகள்தான்
பெரியவர்கள் ஆனதும் தன்
பெற்றோருக்குக் கொடுப்பதற்கும்
கணக்குப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.
பெற்றோர் பிச்சைக்காரர்களுக்குக்
கொடுத்தால் மறுநாள் அந்தவழியாக
வரும் குழந்தையின் கை தானாக
கொடுப்பதற்கு நீளும்.
இது இயல்பு.
நாம் விதைத்ததுதான் விளையும்.
இதைத்தான் ஔவை,
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் "
என்று கூறுகிறார்.
சித்திரம் வரைய வேண்டுமா..?..
நாளும் நன்றாக வரைந்து பாருங்கள்.
நல்ல தமிழ் பேச வேண்டுமா....?
சொற்களை அதன் உச்சரிப்புக்கு
ஏற்றபடி நாளும் சொல்லிச்
சொல்லிப் பழகுங்கள்.
கல்வி கற்க வேண்டுமா.... ?
திரும்ப திரும்ப படித்து மனப்பயிற்சி
எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல பழக்க வழக்கங்களைக்
கற்றுக்கொள்ள வேண்டுமா?
அவற்றைப் பழக்கப்படுத்திக்
கொள்ளுங்கள்.
ஆனால் நட்பு , இரக்கம், கொடை போன்ற
நற்பண்புகள் மட்டும் உங்கள்
பெற்றோரிடமிருந்து உங்களுக்குக்
கிடைக்கும் கொடை. அதனைப்
பெற்றோரைத் தவிர வேறு யாரும்
வலிந்து ஊட்டி விட முடியாது
என்கிறார் ஔவை
நட்பு, தயை, கொடை இதெல்லாம்
பிறவிக் குணமா?
(படித்ததில் பிடித்தது) www.mumbaitamilteacher.com
லேபிள்கள்:
ஓளவையார்,
கைப்பழக்கம்,
சித்திரம்,
செந்தமிழ்
திங்கள், 21 நவம்பர், 2022
கூடா நட்பு.
திருக்குறள். 821
அதிகாரம் 83.
கூடாநட்பு.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
உள்ளத்தால் உறவு கொள்ளாது.உலக ஒப்புக்கு, உறவு கொள்பவர்கள், சரியான
சந்தர்பங்கள் கிடைக்கும்போது,தூக்கி எறிவதற்கும் தயங்க மாட்டார்கள்.
#திருக்குறள்#.கூடா நட்பு #அதிகாரம்#
லேபிள்கள்:
#திருக்குறள்#.கூடா நட்பு #அதிகாரம்#83@
சனி, 22 அக்டோபர், 2022
எனது பிள்ளைகள்!
ஒளிப்படத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரம் கதைகள்
அளியவில்லை மனதை விட்டு அத்தனையும் சதிகள்- பழி
முடித்து பட்டம் பெற்றவர்கள்,வாழ்வார்களா பார்ப்போம்,
இடித்துரைப்பேன் இவர்கள் வாழ்க்கை இனி.
ட
செவ்வாய், 18 அக்டோபர், 2022
பதினாறு பேறு.
பெரும் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் பதினாறு பெரும் பேறுகளாவன:
- அன்பான துணை
- கபடற்ற நட்பு
- கலையாத கல்வி
- குறையாத வயது
- குன்றாத வளமை
- கோணாத செயல்
- சலியாத மனம்
- பரவசமான பக்தி
- பிணியற்ற உடல்
- போகாத இளமை
- மாறாத வார்த்தை
- தடையற்ற கொடை
- தவறாத சந்தானம்
- தாழாத கீர்த்தி
- துன்பமில்லா வாழ்வு
- தொலையாத நிதி
நன்றி விக்கிபீடியா.
சனி, 15 அக்டோபர், 2022
குலத்தளவே ஆகும் குணம்..!
நீரளவே யாகுமாம் நீராம்பல்,தான் கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு--மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் த
குலத்தளவே ஆகும் குணம். , (நல்வழி)
ஒரு குளத்திலுள்ள தண்ணிரின் மேல்மட்டம்,அது வரைதான் நீராம்பல் வளரும்.
ஒருவனது கல்வி, பாடசாலைக் கல்வி(அறிவு,அடுத்தவர்களை மதிக்கும் பண்பு. தர்மம்,விவேகம்).
அவன் படித்த புத்தகங்கள் அளவேயாகுமாம். ஒவ்வொருவரும் அனுபவிக்கும்,
செல்வம் அவரவர் தவத்தின் அளவேயாகும். தான் பிறந்த குலத்தளவே யாகுமாம்,
குணம்.
வெள்ளி, 30 செப்டம்பர், 2022
எண்ணிய எண்ணம் எங்கே?
நமது எதிர்பார்ப்புகள், தவிடுபொடியாகும் வேளைகளில், எனது மனதில் இந்த
பாடல் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கும். எழுதியவர் யார் என்றே தெரியாது.
ஆனால்,எனக்கு மிகவும் பிடித்த பாடல்,ஏன் என்றால் எதிர்பார்ப்புகளால்
கடுமையாக பாதிக்கப்படும்போதெல்லாம் இப் பாடல் மனதில்
ஓடிக்கொண்டிருக்கும். படித்துப் பாருங்கள் உங்களையும் கவரலாம்.
எண்ணிய எண்ணம் எங்கே
இலக்கண குமாரன் எங்கே
கண்ணனும் தேரும் எங்கே
கண்கொள்ளாச் சேனை எங்கே
கட்டிய கோட்டை எங்கே
காண்டிபம் எங்கே
வீரம் எங்கே தீரம் எங்கே
ஆற்றல் எங்கே அறிவு எங்கே
எல்லாமே போனதடா நம்மை விட்டு.....
லேபிள்கள்:
#எண்ணிய#எண்ணம்#எங்கே# இலக்கணகுமாரன்#
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)