வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கடத்­திய தமி­ழர்­களை கொன்­ற­பின்னர் வேன் துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்­டுள்­ளது

அகதி முகாம்களுக்குள் 28 வருடங்களாக வாழ்வது எமக்குத் தெரியாது !

   



வியாழன், 9 பிப்ரவரி, 2017

6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்:


6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவச படவைக்கும் ...
சம்பவம்-1 👇👇👇👇👇👇
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇👇
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...
முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....
தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...
அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.
ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.
ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.
நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.
மனம் சற்று நிம்மதி அடைந்தது.
அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..
அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.
சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...
இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...
அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??
காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.
உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.
சம்பவம்-5 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம்-6 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

எம்.எல்.ஏ.-க்களுக்கு மிரட்டல்



அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை
VikatanExclusive
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' தமிழகத்தில் நிலவும் சூழல்களை பா.ஜ.க மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வகையில் அரசியல் காட்சிகள் அரங்கேறுவதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை' என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.
' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்; போயஸ் தோட்ட இல்லம் நினைவுச் சின்னமாக்கப்படும்' என மன்னார்குடி உறவுகளை கலங்கடிக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு வந்த எம்.எல்.ஏக்களை எங்கும் நகர விடாமல், அரண் அமைத்தார் சசிகலா. ' உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தும் வழங்கப்படும். மாத்திரை, மருந்து என எதற்கும் நீங்கள் தவிக்க வேண்டாம்' என உறுதி கொடுத்துவிட்டு, அனைவரையும் கல்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஓட்டலிலும் வேறு சில இடங்களிலும் தங்க வைத்தனர். முதலமைச்சர் பன்னீர்செல்வமும், ' என்னுடைய பலத்தை சட்டசபையில் நிரூபிப்பேன்' என உறுதியாகக் கூறிவிட்டார்.
" சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் சென்னை வரும் முடிவில் ஆளுநர் இல்லை. ' பன்னீர்செல்வத்தை பா.ஜ.கதான் இயக்குகிறது. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு ஏன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தயங்குகிறார்?' என சில அரசியல் கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டனர். கூடவே குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவும் அ.தி.மு.க எம்.பிக்கள் விமானத்தில் ஏறினர். மத்திய அரசுக்கு எதிராக பேசப்படும் தகவல்களை அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள், ஆளுநரை உடனடியாக தமிழகம் செல்ல அறிவுறுத்தினர். இன்று பிற்பகல் சென்னை வரும் ஆளுநரை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேச உள்ளனர். பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்துப் பேச இருக்கிறார்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
" தமிழ்நாட்டில் நடக்கும் சூழல்களைப் பற்றி விரிவாக ஆலோசித்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை சசிகலா சிறைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களில் சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்றதையும் கவனித்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் விலை பேசப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களுடன் பேசுவதற்குக்கூட எம்.எல்.ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பேசிய சசிகலா உறவினர் ஒருவர், ' உங்களுக்குத் தேவையான அனைத்தும் வந்து சேரும். எங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டோம். உங்களுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்' என அச்சுறுத்தியிருக்கிறார். இதுகுறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளது பா.ஜ.க தலைமை. நேற்று மாநிலத்தில் பல மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் திரண்டனர். பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் சசிகலா ஆதரவாளர்கள் உருவ பொம்மை கொளுத்தினர். சுவரொட்டி கிழிப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என சட்டம் ஒழுங்கு சூழல்கள் கட்டுக்குள் இல்லை. இதைப் பற்றி நேற்று அமித் ஷாவிடம் விவரித்த தமிழகப் பிரமுகர் ஒருவர்,
' கிரிமினல் வழக்கில் உள்ளவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்பதற்கு பல சட்ட உதாரணங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவி வருகின்றன. ' எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்' என சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியவில்லை. அவர்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதே சிறந்தது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொள்ளும். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சிதம்பரம் இருக்கிறார். நம்முடைய முடிவை அவரும் வரவேற்பார். அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தினால், தி.மு.கவும் ஆதரிக்கும். தற்போதுள்ள சூழலில், 'தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெறுவோம்' என ஸ்டாலின் நம்புகிறார். தேர்தலில் நமக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால், 15 சதவீத வாக்குகளைப் பெறுவோம். சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் பொதுமக்கள் இருக்கின்றனர். அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நாம் பயன்படுத்திக் கொண்டால், சட்டசபையில் பலம் பெறுவோம்' என விவரித்திருக்கிறார். இந்த முடிவை அமித் ஷாவும் ஏற்றுக் கொண்டார். தமிழக அரசைக் கலைக்கும் வேலைகள் வேகம் பெறத் தொடங்கிவிட்டன" என விரிவாகவே நம்மிடம் தெரிவித்தார்.
" அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கும்போது, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆதரவு கடிதங்களைக் கேட்கும் முடிவில் இருக்கிறார் வித்யாசாகர் ராவ். ' உண்மையிலேயே, அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்களா? நிர்பந்திக்கப்பட்டு கையெழுத்து போட்டார்களா?' என்பதை அறியும் வகையில் இப்படியொரு முடிவை எடுக்க இருக்கிறார். இதன்பிறகு, பன்னீர்செல்வத்திற்கு உள்ள ஆதரவு குறித்து கேட்டறிய இருக்கிறார். ஒருவேளை சசிகலாவுக்கு மெஜாரிட்டி ஆதரவு என வந்துவிட்டாலும், ஒரு வாரத்திற்கு அந்த ஆட்சி நீடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான். அந்தளவுக்கு டெல்லி அரசியல் தமிழகத்திற்குள் கோலோச்சிவிட்டது.
சசிகலா மீதான வழக்குகளை மையமாக வைத்துக் கேள்வி எழுந்தாலும், அடுத்தபடியாக, வேறு சிலர் பெயரையும் முன்வைக்கும் முடிவில் இருக்கிறார் சசிகலா. ஆளும்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர். நேற்று இரவு எம்.எல்.ஏக்களையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அணிவகுப்பு நடத்தும் வேலைகள் தொடங்கின. ஆளுநர் வரும் தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சசிகலா. அப்போலோவில் சிகிச்சை பெறும் நடராசன், அரசியல் சூழல்கள் முடிவுக்கு வந்த பிறகே வெளியில் வருவார். அங்கிருந்தபடியே, சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே, டெல்லி லாபியை நடத்தி வருகிறார். ஆனால், சுவாமியின் செயல்களை பா.ஜ.க மேலிடம் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக ஆடிட்டர் ஒருவரிடமே கலந்து ஆலோசிக்கிறது பா.ஜ.க மேலிடம். ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
' 356 விதியைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?' என சட்ட வல்லுநர் ஒருவரிடம் கேட்டோம். " மாநில அரசு கலைக்கப்படுவது குறித்து, அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356 வரையறுக்கிறது. இதன்படி, மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகள் இயங்காமல் இருக்கும்போது, மாநில அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. கூடவே, சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது அதனைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கட்டுக்குள் கொண்டு வரவும் சட்டப் பிரிவு 356 பயன்படுகிறது. சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரலாம். இதற்கான பரிந்துரையை ஆளுநர் அளித்தால், ஆறு மாதங்கள் சட்டப் பேரவை இடை நிறுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லையென்றால், பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதுவரையில், நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநருக்கு மாற்றப்படும். ' எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக 356 பயன்படுத்தப்படுகிறது. மாநில சுயாட்சிக்குப் பொருத்தமற்ற விதி' என காலம்காலமாக குரல் கொடுத்து வருகின்றன' எதிர்க்கட்சிகள். இதைப் பற்றியெல்லாம் மத்தியில் ஆளும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்கிறார்.
'அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும்போது, அரசியல் சூழல்களை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்பது பற்றித்தான் பா.ஜ.க வட்டாரத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. ' பன்னீர்செல்வமா? சசிகலாவா?' என்ற விவாதம் மட்டும்தான் அ.தி.மு.க தொண்டர்களின் கண்களுக்குத் தெரிகின்றன. அதையும் தாண்டிய அரசியல் நகர்வுகளை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை.
VikatanExclusive

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ட்ரம்பை வீழ்த்தி வெற்றிபெற்ற முதல் தமிழன்..! ஒபாமாவின் நட்பு எப்படிக் கிடைத்தது..?


ட்ரம்பை வீழ்த்தி வெற்றிபெற்ற முதல் தமிழன்..! ஒபாமாவின் நட்பு எப்படிக் கிடைத்தது..?

ட்ரம்ப் அலையையும் மீறி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் முதல் தமிழர்.
பராக் ஒபாமாவின் தொகுதியான இல்லினாய்ஸ் மாகாணத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இவர், ராஜபாளையத் தமிழர் ஒபாமாவின் நண்பர்.
அமெரிக்க காங்கிரஸில் பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், தன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு வந்திருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தேன்.
``என் அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். மனைவியும் தமிழ்நாடுதான். அப்பா சுப்பிரமணியம் டெல்லியில் வேலை பார்த்தவர்; அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க, அங்கேயே செட்டிலாகிவிட்டோம்.
என் பெயரில் உள்ள `ராஜா' ராஜபாளையத்தைக் குறிக்கும். இன்றைக்கும் என் தொகுதி மக்களுக்கு ராஜா என்பது மிகவும் பிடித்த செல்லப்பெயர்.
குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் தரமான கல்வி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வளர்ச்சி, மக்களைக் காக்கும் வகையில் மருத்துவ வசதி என்பதை எல்லாம் வலியுறுத்தி மக்களிடம் வாக்குக் கேட்டேன். இனி என் பகுதி மக்களுக்கு, அவை அனைத்தையும் கொண்டுவரப்போகிறேன்.
மீடியா, சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எல்லோரின் கணிப்புகளையும் மீறி ஹில்லரி தோல்வி அடைய என்ன காரணம்?''
வெற்றிபெறுவோம் என்ற பெரிய நம்பிக்கை இருந்தது. இனவாதம் பேசியும் வெளிநாட்டு மக்களையும் வேற்று மதங்களையும் ஏடாகூட விமர்சனங்களும் செய்தார் ட்ரம்ப்.
இந்த விஷயங்கள் ஹில்லரிக்குச் சாதகமாக இருந்தன. ஆனால், இவை அவரது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. ட்ரம்ப் உளறினாலும் அவரைத் தைரியமான தலைவராக மக்கள் பார்த்தார்கள்.
தொழிலாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது அவர் பேசிய பேச்சுகளில் இருந்து பல்டி அடிக்கிறார். ட்ரம்ப், இந்திய அமெரிக்கர்களிடம் நல்ல மதிப்பு கொண்டிருக்கிறார்.
இந்திய அமெரிக்க வர்த்தகம் வளர உதவுவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர் பேசிய பேச்சில் இருந்து நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்வாரா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒபாமாவின் நட்பு எப்படிக் கிடைத்தது?
இல்லினாய்ஸ், ஒபாமாவின் தொகுதி. 1999-ம் ஆண்டில் பராக் ஒபாமாவைச் சந்தித்தேன். அப்போது நடந்த தேர்தலில் தோற்றுவிட்டார்.
அதற்கு அடுத்து 2002-ம் ஆண்டு தேர்தலில் பராக் நின்றபோது, நான் தேர்தல் பணியாற்றினேன். அப்போது என்னைப் பிரசார இயக்குநராக நியமித்தார். அவர் செனட் உறுப்பினராக வெற்றிபெற்றார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிபர் தேர்தலில் அவருடன் இணைந்து பணியாற்றினேன். நல்ல நண்பர். இந்த முறை இல்லினாய்ஸ் தொகுதியில் நிற்க, பராக் ஒபாமாதான் என்னை வழிமொழிந்தார்.
எனக்காக வீடியோவில் பேசி மக்களிடம் ஓட்டுகேட்டார். மக்களின் மனதில் உள்ள பிரச்னைகளை முன்வைத்து வாக்குகள் கேட்டோம். வெற்றி பெற்றிருக்கிறேன்.''
உங்கள் பார்வையில் தமிழ்நாடு எப்படி இருக்கிறது?
அமெரிக்கர்கள், தமிழர்களைப்போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழர்களோ, அமெரிக்கர்களைப்போல் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
அமெரிக்கர்களுக்கு இந்திய உணவும் கலாசாரமும் மிகவும் பிடித்திருக்கின்றன. அவர்கள் பீட்சா போன்ற உணவுகளைத் தவிர்த்து, காய்கறி உணவுகளை விரும்புகிறார்கள்.
கூட்டுக்குடும்பம் இல்லையே என ஏங்குகிறார்கள். ஆனால், நம் மக்கள் வேறு எதையோ பார்த்து மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.''
உங்கள் பொழுதுபோக்கு?
ரஜினி படங்கள் பார்ப்பேன். அவருடைய ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். என் பையன்களுக்கு விஜய், விக்ரம் என்றும், மகளுக்கு சோனியா லட்சுமி என்றும் பெயர் வைத்திருக்கிறேன்.
அமெரிக்க வாழ்க்கை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், ஒபாமாவின் ஆலோசகர் எனப் பல விஷயங்கள் இருந்தாலும், `தமிழன்’ எனச் சொல்லிக்கொள்வதில்தான் எனக்கு எப்போதும் பெருமை.''
tamilwin

திங்கள், 6 பிப்ரவரி, 2017

“என்னை முட்டாள் என்பீர்கள்... சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” - 20 ஆண்டுகளுக்கு முந்தைய குரல்.

“என்னை முட்டாள் என்பீர்கள்... சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” - 20 ஆண்டுகளுக்கு முந்தைய குரல்.
Image result for valampuri john
பிரபல ஜோதிடர் அவர். எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கும் எதிர்காலத்தை கணித்துச்சொன்னவர். திரைத்துறையில் ஈடுபட்டு பெரிய நடிகரான எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் பொருளாதார ஏற்றம் கண்ட அவர் பின்னாளில் சில படங்களில் கையை சுட்டுக்கொண்டார்.
சினிமாத்துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சி. பலரது எதிர்காலத்தை சரியாக கணித்துச் சொன்னவர், தனது எதிர்காலத்தை கணிப்பதில் கோட்டை விட்டது ஏன்... இந்த கேள்வியை அவரது சக தயாரிப்பாளர் ஒருவர் மனம் கேட்காமல் அவரிடமே ஒருநாள் கேட்டுவிட்டார். பெருமூச்சை இழுத்து விட்டபடி இப்படி சொன்னார் தயாரிப்பாளர். “ஜோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான் பலிக்கும். ஏதோ பெரிய நட்டத்தில் இருந்து சுதாரித்துக்கொள்ளலாமே தவிர...எல்லாவற்றையும் தவிர்த்துக்கொள்ளமுடியாது. எவ்வளவுதான் எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் நடந்துகொண்டாலும் ஒரு மனிதனுக்கு கெட்டநேரம் என்று வந்துவிட்டால் காலம் அவனது கண்ணைக் கட்டி நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடும்” என்றார் வேதனையான குரலில்.
அவர் சொன்னது நிஜம்தான் என்பது தமிழக அரசியல் நிலவரம் நமக்கு இன்று புரியவைக்கிறது. தமிழகத்தின் கண்களை காலம் கட்டிவிட்டு சில சம்பவங்களை அரங்கேற்றத்துவங்கியிருக்கிறது இப்போது. சசிகலா இன்னும் சில தினங்களில் கோட்டையில் குடியேற இருக்கிறார்.!
தமிழகம் சந்திக்கப்போகும் இந்த அபாயத்தை ஜோதிடங்களை கற்றுத்தேர்ந்த நிபுணர்களும், ஜாதக பலாபலன்களை ஆய்ந்து அதில் ஜல்லிக்கட்டு விளையாடும் பண்டிதர்களே கூட நேற்றுவரை சொல்ல முடியாத நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரிஜான் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். வார்த்தைச் சித்தரான வலம்புரிஜான் தமிழக மெத்தப் படித்த மேதைகளின் வரிசையில் இடம்பெறத் தகுதிபெற்றவர். ஜெயலலிதாவுக்கு அவரது அரசியலின் ஆரம்பநாளில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா இவர்களுக்கிடையேயான மூன்று முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக பல கட்டுரைகளை 90 களின் மத்தியில் விறுவிறுப்பாக எழுதியவர்.
சசிகலா, ஜெயலலிதாவின் தோழி என்ற பிம்பத்தில் மட்டுமே தமிழக மக்களால் பார்க்கப்பட்டுவந்த 90 களின் மத்தியில் பிரபல வார இதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி சொல்லியிருந்தார் வலம்புரிஜான். “ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!...
நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல் அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்” - 'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.
வலம்புரிஜான் அன்று சொன்னது அச்சு பிசகாமல் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப்பின் நடந்தேறியதை பார்க்கிறபோது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றே சொல்லத்தோன்றுகிறது. ஆனால் ஒரே குழப்பம், வலம்புரிஜான் இப்படி கணித்தது, சசிகலாவின் சாதுர்யத்தை அடிப்படையாக கொண்டா...அல்லது, தமிழகத்தின் விதி இப்படித்தான் இருக்கும் என கடந்தகாலத்தை கணக்குப்போட்டா என்று தீர்க்கதரிசி வலம்புரிஜானுக்கு மட்டுமே வெளிச்சம்!
- எஸ்.கிருபாகரன்
© COPYRIGHT VIKATAN.COM 2016. ALL RIGHTS RESERVED

Iகவிதை தமிழாவது உண்டுSAI DEIVAM TMS SONGS ONLY SONG MADURAIYIL PARANTHA


கவிதை தமிழாவது உண்டு ,அந்தத் தமிழே கவிதையாவது கண்டு,சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதுமுண்டு
 மதுரையில் 


கவிதை வரிகள் ,வாலி,கானவரிகள் T .M .சௌந்தரராஜன் ,இசைப் பொழிவு
மெல்லிசை மன்னர்  எனக்குப் பிடித்திருக்கிறது,உங்களுக்கும் திரும்பி ஒருதரம் கேட்கப் பிடிக்கும்.

Reasoning Ability: Number Series Tricks with Exercises

Reasoning Ability: Number Series Tricks with Exercises


Number series is part in which many questions are asked in competitive exams. The number series will be asked in two ways
  • Finding odd one out
  • Find the missing number


In both the ways we have to find out that one particular number. To find that number we have to see the previous or next number pattern in that question and work on the same to get the required number. First we have to see the given number is prime, even, odd, perfect square, cube, particular multiply or division. In this article we are going to see some of the major patterns followed the number series questions with examples as follows


Difference between numbers

In this we have to see the difference between the numbers 

Example 1

11, 14, 19, 22, ?, 30 
In the above: 11+3=14, 14+5=19, 19+3=22, 22+5=27, 27+3=30
So we have the answer by adding alternate numbers with 3 and 5 is 27

Example 2

4, 7, 12, ?, 28, 39 
In the above: 4+3=7, 7+5=12, 12+7=19, 19+9=28, 28+11=39
So the answer by adding the series with the odd numbers 3,5,7,9,11 is 19

Squares/cubes

In this we have to see the difference with respect to squares or cubes

Example 1

125,?,343,512,1331 
In the above: 5³=125, 6³=216,7³=343,8³=512
So we have the answer by the cube of 6=216

Example 2

121,144,169,?,225 
In the above series: 11²=121,12²=144,13²=169,14²=196,15²=225
So we have the answer by the square value of 14=196

Prime numbers

In this we have to see the difference for having prime numbers

Example 

2,3,?,7,11 
In this series we see the order is prime number, so the missing number is 5

Pattern change

In this pattern change we will see that in a single series two parts present

Example

2,9,?,1,8,4 
In the above series 1st term 4th term is linked because 4th term ‘1’ is present and number next is ‘2’ which is present in 1st position2___1, 9___8, 5___4
So the answer is 5

Odd man out series

In this we have to find the number which does not belong to that particular series

Example 1

2,4,6,8,10,11,12 
In the above series 11 does not belong to that series as the series follow even number order

Example 2

3,5,7,12,17,19 
In the above series follows prime number series but 12 is not a prime number
So the wrong number/ odd man out is 12

Multiplication/division

In this we have to check the difference with respect to multiplication or division

Example 1

73205,6655,605,?,5 
In this we can see that it is multiplication of 11

⇒5*11=55, 55*11=605, 605*11=6655, 6655*11=73205
So the answer for the series is 55

Example 2

40960,10240,2560,200,160,40 
In this question we have to find the odd number or wrong number
The above series is divisible by 4
⇒40960÷4=10240,
⇒10240÷4=2560,
⇒2560÷4=640,
⇒640÷4=160,
⇒160÷4=40
So the answer is 200 as that number is the wrong and value that should come in its place is 640

Multiple functions series

In this series will have many functions to solve the series to get the required answer

Example 1

11,24,50,?,206 
In this series we need to multiply and add 11*2=22+2=24
⇒24*2=48+2=50
⇒50*2=100+2=102
⇒102*2=204+2=206
So the answer for the above series is 102

Example 2

10,26,74,?,650 
In this series we have to multiply and subtract 10*3=30-4=26
⇒26*3=78-4=74
⇒74*3=222-4=218
⇒218*3=654-4=650
So the answer for the series is 218


Exercises For Practice


Exercise 1: Find the odd /wrong number:


  1. 253,136,352,460,324,631,244
  2. 52,51,48,43,34,27,16
  3. 125,123,120,115,108,100,84
  4. 4,6,8,9,10,11,12
  5. 8,13,18,25,30,37,40
  6. 8,29,125,343,1331
  7. 2,5,10,17,26,37,50,64
  8. 16,25,36,72,144,196,225
  9. 46080,3840,384,48,24,2,1
  10. 5,16,6,16,7,16,9,16,9.


Exercise 2: Find the missing number:



  1. 41,43,47,___,61,71
  2. 4,5,7,10,14,___,25,32
  3. 4,-8,16,-32,64,___
  4. 4. 5,10,13,26,___,58,61,122
  5. 8,7,11,12,14,17,17,22,___
  6. 1,2,6,15,___,56
  7. 1,3,10,21,64,129,___,777
  8. 5,8,___,42,124,246,736
  9. 6,12,48,___,384,768,3072
  10. 32,36,___,61,86,122,171,235


Answers

Exercise 1


  1. Sum of the digits in each number except 324 is 10
  2. Subtract 1,3,7,9,11, from successive numbers. So 34 is wrong
  3. Prime numbers 2,3,5,7,11 from successively been subtracted so 100 is wrong
  4. Each number is a composite number except 11.
  5. The difference between two successive terms from the beginning are 7,5,7,5,7,5,. So 40 is wrong
  6. Each number is cube except 29. So 29 is wrong
  7. The pattern is x²+1, where x=1,2,3,4,5,6 etc, but 64 is wrong
  8. Each number except 72 is a perfect square
  9. The terms are successively divided by 12,10,8,6,… so 24 is wrong
  10. Terms at odd places are 5,6,7,8,.. and even place is 16. So 9 is wrong


Exercise 2


  1. Each number is a prime number answer is 53
  2. 2nd=(1st+1); 3rd=(2nd+2);4th=(3rd+3).. so answer is 19
  3. Each number is the preceding number multiplied by -2. So 136 is answer
  4. Numbers are alternatively multiplied by 2 and increased by 3. So answer is 29
  5. There are two series (8,11,14,17,20)and (7,12,17,22) increasing by 3 and 5 respectively
  6. Add 1²,2²,3²,4²,5².., so answer is 31
  7. A*2+1, B*3+1, C*2+1, D*3+1and so on. So the answer is 388
  8. 8.2nd=(1st*2-2)=8 
⇒3rd=(2nd*2-2)=22
⇒4th=(3rd*2-2)=42 and so on ,so the answer is 22
    9. 2nd=(1st *2); 3rd=(2nd *4);4th=(3rd *2).. so answer is  96
   10. 2nd=(1st +2²)=32+4=36
        ⇒ 3rd=(2nd+3²)=36+9=45
        ⇒ 4th=(3rd+4²)=45+16=61 and so on. So answer is 45.


Smart Prep Kit by Ramandeep Singh