புதன், 9 அக்டோபர், 2019

கோட்டாபயவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு



ஜனாதிபதி இன்று  உத்தி​ேயாகபூர்வமாக  அறிவிப்பார்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளதாகவும் இதுபற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும்
ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதன் பிரகாரமே இன்றையதினம் சு.கவின் இறுதி நிலைப்பாடு வெளியாகுமெனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் சு.க வெளிப்படையாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
இருதரப்புக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது தொடர்பில் இதுவரை எட்டு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
பொது சின்னம் தொடர்பிலான இணக்கப்பாட்டுக்கு வந்ததால் ஒன்றாக தேர்தலை எதிர்கொள்வதில் எவ்வித தடையும் இல்லையென சு.கவின் தரப்பில் அறிவிக்கப்பட்டுவந்த பின்புலத்திலேயே இன்று தமது இறுதி நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக தயாசிறி ஜயசேகர நேற்று அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள