ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

புதுக் கட்சி தொடங்கிய கருணா!

.புதுக் கட்சி தொடங்கிய கருணா! 

பிரதேச வாதம் பேசி தமிழினத்தை பிரித்து சிதறடித்த கருணா இன்று புது கட்சி தொடங்கினான்!
தனது ஊழல் குற்ற சாட்டுகளை மறைக்க பல ஆயிரம் போராளிகளின் தியாகத்தை மண்ணாக்கிய துரோகி கருணா இன்று வடக்கு கிழக்கை இணைக்க புது கட்சி தொடங்கினார்.
அண்மையில் தமிழனை அழித்த மஹிந்த புகழ் பாடிய துரோகி இன்று மீண்டும் மக்களின் முன் தோன்றி தமிழர் ஐக்கிய (ஹா ஹா ஹா ) சுதந்திர முன்னணியை தொடங்கினார்.
வடக்கும் கிழக்கும் இணைய கூடாது என்று அற்புதமான போராட்டத்தை சிதறடித்து இன்று வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று கூறுகிறான் இந்த துரோகி. கிழக்கு பிரிந்தமையால் மடடக்களப்பு உட்பட கிழக்கின் அனைத்து தமிழ் மக்களும் முஸ்லிம்களாலும் சிங்களவர்களாலும் நில அபகரிப்பு, இனப்பாகுபாடு என்று ஒதுக்கப்பட்டு விரக்தியுற்று காணப்படும் நிலையில் தனது துரோகத்தை மறைக்கவே இவ்வாறு செய்கிறான் என அறிய முடிகிறது.
கிழக்கு தமிழர்களுக்கு வடக்குடன் இணைத்திருப்பதே எமது மண்ணுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பானது என்பது அறிவுள்ள சுயநலமற்ற தனது எதிர் கால சந்ததியினரை சிந்திக்கும் மனிதர்களுக்கு நன்கு புரியும்.இவ்வாறு அன்றே கூறிய போராளிகளையும் புத்தி ஜீவிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்த இந்த துரோகி இன்று எவ்வாறு எந்த முகத்துடன் இன்று வடக்கு கிழக்கு இணைத்த கட்சியை ஆரம்பிக்க முடியும். இவரால் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு என்ன நியாயம் வழங்க முடியும் .
தனது சொந்த ஊரான கிரானிலே 5 வாக்குகளை பெற முடியாத இவரால் வடக்கு கிழக்கில் எத்தனை வாக்குகளை பெற முடியும் என பார்க்கலாம்.
அன்று மஹிந்த புகழ் பாடி மஹிந்தவின் கீழ் தேர்தலை சந்தித்து மஹிந்த தோற்றதும் மைத்திரி புகழ்பாடி அமைச்சராகிய ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கு அன்று பிள்ளையானுக்கு தமிழ் மக்கள் அழித்த 15000 வாக்குகளே கரணம் எனபது குறிப்பிடத்தக்கது.
நமக்கு நாமே மண்ணை அள்ளி போடுகின்றோம் எனபது தமிழனின் வரலாறு.
இதே மாதிரி தமிழர்களின் வாக்குகளை பிரித்து தன்னை துரோகியாக கணிக்கும் தமிழர்களை பழிவாங்க மீண்டும் களத்தில் கருணா எனும் சிங்கம் ( முன்னாள் புலி).
நகுலன்
மட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள