செவ்வாய், 9 மார்ச், 2010

கலைஞரின் சாதனை.!

கலைஞரின் சாதனை.!



 நன்றி:-வீரகேசரி 


இதை விட வேறென்ன வேண்டும்.-என்
இனிய தமிழ் மக்களுக்கு யாண்டும்
பாதை சொல்லி விட்டிருக்கிறார்-கலைஞர்
பழி முடித்து விட்டார் மகிந்தர்,

ஆடு புலியாட்டம் அவர்களுக்குள்ளே -சாமி
ஆடி முடிந்ததெல்லாம் அப்பாவிகள் மேலே,
சூடு சொரனையற்ற துண்டுக்கார மாமா -நீ
ஆடியதும் பாடியதும் தமிழனைக்  கொல்லத்தானா?

மனமது பொறுக்குதில்லை யுன் வஞ்சகத்தை-அது 
மறுபடி எதையும் நினைக்கிதில்லை 
திருவடி சரணம் என்று இருந்தபேர்க்கு-நல்ல 
ஒருவழி பண்ணிவிட்டாய் ஓரகத்தாலே

வீரபாண்டிய கட்டப் பொம்மனை மாட்ட  -வெகு  
துரமா இருந்து வந்தான் எட்டப்பன் எதிரி 
தன்குடும்பம்,தனதாட்சி நிலைக்க -சொந்த
தமிழனையே பலி கொடுத்தான்  முதல் மந்திரி  

அன்புடன்!...

1 கருத்து:

உங்களின் கருத்துரைகள