வெள்ளி, 29 ஜனவரி, 2010

வடகிழக்குத் தமிழர்களும் சனாதிபதித் தேர்தலும்


நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்களின் பங்கு என்ன? மஹிந்த சிந்தனையை வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? தமிழ் கூட்டமைப்புத் தலைமையை இன்னும் தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென்கிறார்களா?ஆயுதக் குழுக்கள் தொடர்ந்தும் தங்களை வழி நடத்த வேண்டும் என்கிறார்களா?இப்படி ஆயிரம் கேள்விகள்? இதற்கெல்லாம் விடை யாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றுக்கெல்லாம் விடைகளை வழங்க சம்பந்தப் பட்டவர்களே முன்வருவார்கள்.
எப்பொழுது என்கிறீர்களா? பாராளுமன்றத் தேர்தலின் போது.அதுவரை பொறுமையுடன்
காத்திருங்கள்.இந்தச் செய்தியை பதிவிடும் போது, ஒரு செய்தி அதுதான் நமது கேள்வியுடன் தொடர்புடையது.

இந்த இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள் நமது கேள்விகள் பலதிற்கு இங்கு விடை கிடைக்கும் http://ustertamil.blogspot.com/2010/01/blog-post_1659.html

வழமைபோல இந்த சனாதிபதித் தேர்தலிலும் வடகிழக்கு மக்கள் பத்து லட்சம் வாக்குகளை பயன்படுத்தாமலே விட்டு விட்டார்கள்.மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 19 ,83 ,946 ,அதில் வாக்களித்தவர்கள் 9,64 ,146 .பேர்   பேர். வட கிழக்குச் சிங்கள மக்கள்,முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குகளை 90 % -99 % பயன் படுத்தி எதோ ஒன்றை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் என் இனிய தமிழ் மக்கள் ஏதோ ஒன்றை நினைத்து
தயங்கிவிட்டார்கள்.
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்கிறார்களோ? மறக்கவும் மாட்டோம்,மன்னிக்கவும்  மாட்டோம்.பொறுத்திருந்து பார்ப்போம்.பாராளுமன்றத் தேர்தலில் எம் இனிய தமிழ்
மக்களின் எண்ணத்தில் என்ன இருக்குது என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள