ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நித்திரை வருகுதில்லை









                                                                                                                   www.tamil10.com/submit
                                                                                                                                                        

நித்திரை வருகுதில்லை ரதியே -என்
நெஞ்சமும் பொறுக்குதில்லை சகியே
சித்திரம்போலே வந்து சிரித்து-நீ
சீக்கிரம் மறைவதாலே எனக்கு


சுற்றிடும் உலகமெல்லாம் தூசியே-யுனைப்
பார்த்திடும் நேரமெல்லாம் ருசியே
கொட்டிடும் மழையுமெனக்கு இராசியே-ஆட்
கொண்டிடும் பார்வை யுனக்கில்லையே  

இட்டிடு எனக்கொரு ஈ-மெயிலே-யெந்
இதயமெல்லாம் நிறையவேனுமதிலே
கட்டிடும் ஆசை யுனக்கில்லையோ- என்
கடைசிதான் உந்தன் முடிவுரையோ

பட்டென உடைத்துவிடு முடிவை -நான்
பட்டணம் போய் எடுக்கவேணும் உடையை
சட்டென விக்கவேணும் ஒரு வளவை-தாலி
கட்டி வளர்க்கவேணும் நம்ம  உறவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள