பிறப்பிக்கும் இ
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 18 ஆகஸ்ட், 2025
வியாழன், 27 ஜூன், 2024
பிறந்த நாள் வாழ்து!..
சனி, 18 மே, 2024
இனத்துவேசமும் பிக்குகளும்
இனத்துவேசமும் பிக்குகளும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ராஜபக்சவின் இனத்துவேசமும் பிக்குகளும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ராஜபக்சவின் தந்தையார் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார்
ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தவரே .
ரனில் கூட ஒரு கிரித்தவரே
ஆட்சி அமைக்க வேண்டின் பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மகாநாம தேரர் துட்டகைமுனு மன்னனை நாயகனாகக் கொண்டு இந்நூலை எழுதியிருந்தார்.
எழுதப்பட்ட காலத்திலும் பார்க்க 1000 ஆண்டுகள் முன்னோக்கிய வரலாற்றைக் கூறத் தொடங்கும் இந்நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த துட்ட கைமுனு என அறியப்பட்ட துஷ்ட காமினி அல்லது காமினி அபய என்ற மன்னன் வரலாற்றையே முக்கியமாகக் கூறுகிறது. காரணம், திஸ்ஸமகரகம (இன்றைய அம்பாந்தோட்டை) இராச்சியத்தை ஆட்சி செய்த இவன் வடக்கில் - அனுராதபுரத்தில் ஆட்சி செய்த எல்லாளனை போரில் சூழ்ச்சியால் வென்றே ஆட்சியைக் கைப்பற்றினான் எனக் கூறுகிறது. மேலும் 32 தமிழ் மன்னர்களை போரில் வென்று இலங்கையை ஒருங்கிணைத்தான் எனக் கூறுகிறது.
போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்த மன்னன் மனங்கலங்கியபோது, “ஒருவர் பௌத்த தர்மத்தை சரணந்து விட்டார் இன்னொருவர் மும்மணிகளை ஏற்றுள்ளார். ஆகவே நீ கொன்றது ஒன்றரைப் பேரைத்தான். மற்றவர்கள் எமது மார்க்கத்தை ஏற்காதவர்கள். அவர்கள் மிருகங்களை விடக் கீழாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என பிக்குகள் தேற்றினர்” எனக் கூறுகிறது. மகாவம்சம் கூறும் இந்தக் கருத்து இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஒத்தது. ஆனால், இங்குதான் பௌத்த அடிப்படைவாதம் தோற்றம் பெறுகிறது. காலாகாலமாக மகாவம்சத்தின் இந்த அடிப்படையையே சிங்கள - பௌத்த ஆட்சியாளர்கள் அது மன்னர்களாயினும் - ஜனநாயக வழிவந்த ஆட்சியாளர்களாயினும் சரி ஏற்றுக் கொ்ண்டே ஆளத் தொடங்குகிறார்கள்.
மகாவம்சத்தின் அடிப்படை அம்சங்கள் முற்றுமுழுதாகக் கற்பனைக் கதைகளே. உதாரணம் சிங்கத்தின் வழிவந்தவர்களே தங்கள் இனம் என்பதைக் கூற சிங்கமும் - இளவரசியும்கூடியே சிங்கபாகு பிறந்ததாகவும் அவனுக்குப் பிறந்தவனே விஜயன் என்றும் அவனும் அவனது 700 தோழர்களும் உருவாக்கிய இராச்சியமே இலங்கை - அவன் வழிவந்தவர்களே சிங்களவர்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. இயக்கர் குலப் பெண்ணான குவேனியே இவன் இராச்சியம் அமைக்க உதவினான் என்றும் அவளைத் துரத்தி விட்டு, பாண்டிய நாட்டில் இருந்து இளவரசியை அழைத்து வந்து திருமணம் செய்கிறான். விஜயனுக்கும் தமிழ் இளவரசிக்கும் பிறந்த வம்சமே சிங்களவர்களாகத் தங்களை அடையாளம் காட்டுகிறது.
தவிர, சிங்கள ஆட்சியாளர்களாக வேண்டுமானால், அவர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. இன்றிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் தந்தையார் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார். இதுபோல ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ வழிவந்தவர்களே. பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
ஆக, இனத்துவேசத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கக் காரணம் பௌத்த பிக்குகளும் - அவர்களின் வரலாற்றுக் கற்பனை நூலான மகாவம்சமுமே.
மகாவம்சம் என்பது கி.பி 3ம் ஆண்டளவில் இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைபெற்றப் பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில் இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பௌத்தப் பிக்குகளும், அப்போதைய அனுராதபுர இராசதானியப் பௌத்தப் பிக்குகளும், ஏனைய விகாரைகளில் இருந்த பௌத்தப் பிக்குகளும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகஞ்செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வடயிந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகள் அட்டக்கத்தா எனும் பெயரில், பௌத்தத்துடன் வருகைத் தந்த வடயிந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்டு வந்தன.
அவை ஒருகட்டத்தில் காலவரிசையாக ஒருங்கிணைக்கப்பட்டு அட்டகத்தா-மகாவம்சம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டது. அந்த அட்டகத்தா-மகாவம்ச செய்யுள்களை ஆதாரமாகக் கொண்டு இரண்டு பழம்பெரும் நூல்கள் தொகுப்பாக்கம் பெற்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சமும் அவைகளாகும். இதில் மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாநாம தேரர் எனும் பௌத்தப் பிக்குவாவார்.
அவரும் அத்தொகுப்பு நூலை பாளி மொழியிலேயே தொகுத்தார். எனவே மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் எனக்கொள்ளப்படுகிறது.
இந்த நூலை வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
அதன் பின்னர் 1912ம் ஆண்டில் மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்தார். இதன் தமிழாக்க வடிவமே இந்த நூலாகும்.
மகாவம்சம் பௌத்த சிந்தனைகளுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, தற்கால அறிவியலுடன் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனைகள், கட்டுக்கதைகள், தொன்மங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ள போதும்; பௌத்தத்தின் வரலாறு, இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைப்பெற்றதன் காலவரிசை, பௌத்ததிற்கு மன்னர்கள் ஆற்றிய பணிகள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்களை ஆதரித்து; இலங்கையில் பௌத்தம் தோன்றுவதற்கு முன்னர் கி.மு. 6ம் நூற்றாண்டு வரையான நம்பகமற்ற தொன்மக் கதைகளை உள்ளடக்கி, இலங்கையின் முதல் மன்னனான விஜயன் முதல், கி.பி. 4ம் நூற்றாண்டு ஆட்சி செய்த மகாசேனன் வரையான வரலாற்றையும் கொண்டுள்ளது.
இதனால் இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்ய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும், பௌத்தமத வரலாற்றை அறிய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் மகாவம்சம் எனும் நூலை மீளாய்வு செய்தல் அவசியமாகின்றது. அதேவேளை இலங்கையின் வரலாற்றை அறிய முற்படும் எவருக்கும் மகாவம்சம் குறித்த போதிய தெளிவு இருத்தலும் முக்கியமாகின்றது. மகாவம்சம் இலங்கையின் பௌத்த பிக்குகளால், பௌத்தம் சார்ந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதால், அது இலங்கை பௌத்த சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை தமிழரின் வரலாற்று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அதைத் தேடி வாசித்தல் அவசியம்
வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.அல்லவா ?அதை பெர்லின் நூலகத்தில் தேடி வாசியுங்கள் .வரலாறு புரியும் .
மகாவம்சம் மறைமுகமாகத் தருகின்ற மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.அது சிங்களவருக்கு ஆங்காங்கே முன்னுரிமை கொடுக்க முயலுகிறது
மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற பௌத்த தேரோவால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பௌத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்டகைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.
இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்ததேரோவால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).
பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 – 77) புகழப் ப்படுகிறான்.
துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
கி.மு 2௦7-247 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேசியும் வந்துள்ளனர். அவை அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப் பட்டுள்ளன.
தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம் 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் “விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்” தீபவம்சத்தில் இல்லை
மகாவம்சத்தின் மூன்றில் ஒரு பாகம் துட்ட கைமுனு மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 – 137
.
று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருந்த போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது என்ற கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளது.
இதுவே இனத்துவேசத்திற் கான காரணம்
Manikkavasagar Vaitialingam
அன்பே சிவம் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார்
ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தவரே .
ரனில் கூட ஒரு கிரித்தவரே
ஆட்சி அமைக்க வேண்டின் பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மகாநாம தேரர் துட்டகைமுனு மன்னனை நாயகனாகக் கொண்டு இந்நூலை எழுதியிருந்தார்.
எழுதப்பட்ட காலத்திலும் பார்க்க 1000 ஆண்டுகள் முன்னோக்கிய வரலாற்றைக் கூறத் தொடங்கும் இந்நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த துட்ட கைமுனு என அறியப்பட்ட துஷ்ட காமினி அல்லது காமினி அபய என்ற மன்னன் வரலாற்றையே முக்கியமாகக் கூறுகிறது. காரணம், திஸ்ஸமகரகம (இன்றைய அம்பாந்தோட்டை) இராச்சியத்தை ஆட்சி செய்த இவன் வடக்கில் - அனுராதபுரத்தில் ஆட்சி செய்த எல்லாளனை போரில் சூழ்ச்சியால் வென்றே ஆட்சியைக் கைப்பற்றினான் எனக் கூறுகிறது. மேலும் 32 தமிழ் மன்னர்களை போரில் வென்று இலங்கையை ஒருங்கிணைத்தான் எனக் கூறுகிறது.
போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்த மன்னன் மனங்கலங்கியபோது, “ஒருவர் பௌத்த தர்மத்தை சரணந்து விட்டார் இன்னொருவர் மும்மணிகளை ஏற்றுள்ளார். ஆகவே நீ கொன்றது ஒன்றரைப் பேரைத்தான். மற்றவர்கள் எமது மார்க்கத்தை ஏற்காதவர்கள். அவர்கள் மிருகங்களை விடக் கீழாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என பிக்குகள் தேற்றினர்” எனக் கூறுகிறது. மகாவம்சம் கூறும் இந்தக் கருத்து இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஒத்தது. ஆனால், இங்குதான் பௌத்த அடிப்படைவாதம் தோற்றம் பெறுகிறது. காலாகாலமாக மகாவம்சத்தின் இந்த அடிப்படையையே சிங்கள - பௌத்த ஆட்சியாளர்கள் அது மன்னர்களாயினும் - ஜனநாயக வழிவந்த ஆட்சியாளர்களாயினும் சரி ஏற்றுக் கொ்ண்டே ஆளத் தொடங்குகிறார்கள்.
மகாவம்சத்தின் அடிப்படை அம்சங்கள் முற்றுமுழுதாகக் கற்பனைக் கதைகளே. உதாரணம் சிங்கத்தின் வழிவந்தவர்களே தங்கள் இனம் என்பதைக் கூற சிங்கமும் - இளவரசியும்கூடியே சிங்கபாகு பிறந்ததாகவும் அவனுக்குப் பிறந்தவனே விஜயன் என்றும் அவனும் அவனது 700 தோழர்களும் உருவாக்கிய இராச்சியமே இலங்கை - அவன் வழிவந்தவர்களே சிங்களவர்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. இயக்கர் குலப் பெண்ணான குவேனியே இவன் இராச்சியம் அமைக்க உதவினான் என்றும் அவளைத் துரத்தி விட்டு, பாண்டிய நாட்டில் இருந்து இளவரசியை அழைத்து வந்து திருமணம் செய்கிறான். விஜயனுக்கும் தமிழ் இளவரசிக்கும் பிறந்த வம்சமே சிங்களவர்களாகத் தங்களை அடையாளம் காட்டுகிறது.
தவிர, சிங்கள ஆட்சியாளர்களாக வேண்டுமானால், அவர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. இன்றிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் தந்தையார் டி. எம். ராஜபக்ச கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்தத்தைத் தழுவினார். இதுபோல ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆகியோர் அடிப்படையில் கிறிஸ்தவ வழிவந்தவர்களே. பின்னாளில் ஆட்சியைப் பெறும் நோக்கிலேயே பௌத்தத்தை தழுவினர்.
ஆக, இனத்துவேசத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கக் காரணம் பௌத்த பிக்குகளும் - அவர்களின் வரலாற்றுக் கற்பனை நூலான மகாவம்சமுமே.
மகாவம்சம் என்பது கி.பி 3ம் ஆண்டளவில் இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைபெற்றப் பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில் இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பௌத்தப் பிக்குகளும், அப்போதைய அனுராதபுர இராசதானியப் பௌத்தப் பிக்குகளும், ஏனைய விகாரைகளில் இருந்த பௌத்தப் பிக்குகளும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகஞ்செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வடயிந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும், மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகள் அட்டக்கத்தா எனும் பெயரில், பௌத்தத்துடன் வருகைத் தந்த வடயிந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்டு வந்தன.
அவை ஒருகட்டத்தில் காலவரிசையாக ஒருங்கிணைக்கப்பட்டு அட்டகத்தா-மகாவம்சம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டது. அந்த அட்டகத்தா-மகாவம்ச செய்யுள்களை ஆதாரமாகக் கொண்டு இரண்டு பழம்பெரும் நூல்கள் தொகுப்பாக்கம் பெற்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சமும் அவைகளாகும். இதில் மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாநாம தேரர் எனும் பௌத்தப் பிக்குவாவார்.
அவரும் அத்தொகுப்பு நூலை பாளி மொழியிலேயே தொகுத்தார். எனவே மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் எனக்கொள்ளப்படுகிறது.
இந்த நூலை வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
அதன் பின்னர் 1912ம் ஆண்டில் மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்தார். இதன் தமிழாக்க வடிவமே இந்த நூலாகும்.
மகாவம்சம் பௌத்த சிந்தனைகளுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, தற்கால அறிவியலுடன் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனைகள், கட்டுக்கதைகள், தொன்மங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ள போதும்; பௌத்தத்தின் வரலாறு, இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைப்பெற்றதன் காலவரிசை, பௌத்ததிற்கு மன்னர்கள் ஆற்றிய பணிகள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்களை ஆதரித்து; இலங்கையில் பௌத்தம் தோன்றுவதற்கு முன்னர் கி.மு. 6ம் நூற்றாண்டு வரையான நம்பகமற்ற தொன்மக் கதைகளை உள்ளடக்கி, இலங்கையின் முதல் மன்னனான விஜயன் முதல், கி.பி. 4ம் நூற்றாண்டு ஆட்சி செய்த மகாசேனன் வரையான வரலாற்றையும் கொண்டுள்ளது.
இதனால் இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்ய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும், பௌத்தமத வரலாற்றை அறிய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் மகாவம்சம் எனும் நூலை மீளாய்வு செய்தல் அவசியமாகின்றது. அதேவேளை இலங்கையின் வரலாற்றை அறிய முற்படும் எவருக்கும் மகாவம்சம் குறித்த போதிய தெளிவு இருத்தலும் முக்கியமாகின்றது. மகாவம்சம் இலங்கையின் பௌத்த பிக்குகளால், பௌத்தம் சார்ந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதால், அது இலங்கை பௌத்த சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை தமிழரின் வரலாற்று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அதைத் தேடி வாசித்தல் அவசியம்
வில்ஹெம் கெய்கர் என்பவர் 1908ல் ஜேர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.அல்லவா ?அதை பெர்லின் நூலகத்தில் தேடி வாசியுங்கள் .வரலாறு புரியும் .
மகாவம்சம் மறைமுகமாகத் தருகின்ற மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.அது சிங்களவருக்கு ஆங்காங்கே முன்னுரிமை கொடுக்க முயலுகிறது
மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற பௌத்த தேரோவால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பௌத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்டகைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.
இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்ததேரோவால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).
பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 – 77) புகழப் ப்படுகிறான்.
துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
கி.மு 2௦7-247 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேசியும் வந்துள்ளனர். அவை அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப் பட்டுள்ளன.
தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம் 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் “விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்” தீபவம்சத்தில் இல்லை
மகாவம்சத்தின் மூன்றில் ஒரு பாகம் துட்ட கைமுனு மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 – 137
.
று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருந்த போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது என்ற கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளது.
இதுவே இனத்துவேசத்திற் கான காரணம்
Manikkavasagar Vaitialingam
அன்பே சிவம்my iPad
வைரமுத்து வரிகள்.
ஒவ்வொருத்தருக்கும்,ஒவ்வொரு பிரச்சனை,
அவர்கள் பிரச்சனை நமக்கெதற்கு,
கோழி முடமென்றால் குழம்பு ருசிக்காதா என்ன?.
பழித்தாரும். வாழ்க;-எனைப்
பகைத்தாரும் வாழ்க;
மன்றில் இழித்தாரும் வாழ்க;
வாழ்வில் இல்லாத பொம்மை கூட்டிச்
சுழித்தாரும் வாழ்க;
என்னைப் சுற்றிய வெற்றி வாய்ப்பைக்
கழித்தாரும் வாழ்க;
நானோ காலம் போல் கடந்து செல்வேன்.
வெள்ளி, 10 நவம்பர், 2023
விவேக சிந்தாமணி. பாடலும் கருத்தும்.
புதன், 13 செப்டம்பர், 2023
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!
சனி, 26 ஆகஸ்ட், 2023
6வது வருட திருமண நினைவு நாள்
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
(இல்லறவியல் 5.இல்வாழ்க்கை,குறள் 49)
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்
மு. வரதராசன்
#BOSTON#US#Wedding #Aniversary#Lavanya#Sajeev#
திங்கள், 17 ஜூலை, 2023
தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா!
தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா!
- கா. மாணிக்க வாசகர் -
[தமிழ்த் தட்டச்சுத்துறைக்கு அன்று ஈழத்தமிழரொருவரான ஆர்.முத்தையா ஆற்றிய பங்களிப்பினை சரஸ்வதியில் வெளிவந்த இக்கட்டுரை புலப்படுத்தும். இக்கட்டுரையினை எமக்கு அனுப்பி வைத்த இலண்டனில் வசிக்கும் விசாகப்பெருமாள் வசந்தன் அவர்களுக்கு எம் நன்றி. -ஆசிரியர்]
ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலகமொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் "ரெம’ங்டன்" தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு யந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.
பெரு எண்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே,
பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில்
இறங்கினார் ஒரு தமிழர்.
ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம்
அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு
அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற
ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.
முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார்.
இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர்,
பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக
இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு
பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா.
இவர் ஏழு வயதாயிருக்கும்பொழுது, இவருடைய தந்தையார்
இறந்துவிட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து
கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய்
வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக
எண்ணியபொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே
இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை
ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில்
அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற
பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார்.
இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து,
1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர்
உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து
ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன்
சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக்
கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்
தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு
திறமை வாய்ந்தவராயிருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர்
நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர்,
அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன்
இவர் எடுத்துச் சொல்வார்.
இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத்
திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன்
இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக்
குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில்
ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை
ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.
முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்"
பெரிய தட்டச்சு என்று குறிப்ப’ட்டார். அது சிறப்பான பல அம்சங்களை
உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும்
நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது.
எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத்
தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான
எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க
வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே
அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக
நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "ந“" என்ற எழுத்திலுள்ள
விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "ந"வை
அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே
அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும்
தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.
ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின்
விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில்
பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது.
ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம்
ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய
ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில்
ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின்
கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை.
புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய
தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது
க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின்
மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப்
பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில்
க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்
தக்க சிறப்பாகும்.
இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும்
சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில்
இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட,
ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன
என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய
விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன.
முத்தையா அவர்களின் விசைப்பலகையமைப்பும் இதையொட்டியே
இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை
உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.
முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த
விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற
வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார்.
பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார்.
இதோடு இவருடைய முயற்சி முற்றுப்பெறவில்லை. தாம் அமைத்த
விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை
நீக்க’, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை
உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ’", "எரிகோ",
"யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.
முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார்.
காலஞ்சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக்
கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில்
நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று
எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.
நன்றி: சரஸ்வதி இதழ், 1959
அனுப்பி உதவியவர்: விசாகப்பெருமாள் வசந்தன்
திங்கள், 26 ஜூன், 2023
பிறந்த நாள் வாழ்த்துகள்.!,
அன்பு நிறை மகள்,இலாவண்ய சஜீவ்.!
ஆண்டுகள் ஆயிரம்,அன்புடன் வாழ.!
எல்லாம் வல்ல,எமையாளும் இறைவன்.!
அல்லும் பகலும், அருள்மழை பொழியட்டும்.,!!
அன்புடன்.அப்பா,அம்மா.
Bostan #US#Happy birthday.#Arulmoli#Rudra#
வெள்ளி, 23 ஜூன், 2023
ஓரம் சொன்னால் உதிர்ந்து போவாய்!
செவ்வாய், 20 ஜூன், 2023
. பயனில்லாதன
சனி, 17 ஜூன், 2023
ஞாயிறு, 11 ஜூன், 2023
87வது பிறந்த தின,நினைவு நாள்.
87வது பிறந்த தின,நினைவு நாள்.
திருமதி. வள்ளியம்மை தெய்வநாயகம்.
(11-06-1936) (11-06-2023)
காலங்கள் தோறும் உன் மடி தேடி!
கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்!திங்கள், 5 ஜூன், 2023
நல்லவர்களும் கெட்டவர்களும்.
நல்லவர்களும் கெட்டவர்களும்.
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
பாலைக்காய்ச்சினாலும் தனது சுவையால்,இம்மியளவும் குறையாது.காய்ச்சக்காய்ச்ச சுவை அதிகமாகும்.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.மேலும் சுட்டாலும் மிகுந்த வெண்மை தரும்.இன்னும் அதிகமாகச் சுட்டால்சங்கானது இன்னும் அதிக வெண்மையாகி நீறாகிப் போகும். இவை போலத்தான் நல்லவர்களை கெட்டவர்களாக (கெட்டவர்களாகக் காட்ட முற்பட்டால்) இன்னும் அவர்கள் நல்லவர்களாகவே காணப்படுவார்கள்,இன்னும் அவர்களால் நன்மையே நடக்கும். கெட்டவர்கள் இன்னும்,கெட்டு அழிந்து போவார்கள்.
#வாக்குண்டாம்#ஒளவையார்#
வியாழன், 1 ஜூன், 2023
புத்திரருக்குப் பகை
திங்கள், 22 மே, 2023
K.V.Rudra is a blog dedicated to exploring the spiritual, psychological and philosophical aspects of Hinduism and its various forms. The blog is written by K.V.Rudra, a Hindu spiritual teacher and practitioner who has been studying Hinduism for over 25 years. The blog is a platform for sharing his thoughts, insights and advice on various aspects of Hinduism, including its spiritual, psychological and philosophical aspects. K.V.Rudra also shares his personal experiences and insights on various topics related to Hinduism, such as meditation, yoga, mantra chanting, and other forms of spiritual practice. The blog also provides resources for those interested in learning more about Hinduism and its various forms.














