சனி, 19 நவம்பர், 2016

பொது அறிவு தொடர்


01.பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக 2016 நவம்பர் 01  முதல் தொலைபேசிக் கட்டணங்கள் மொத்தமாக எத்தனை சத வீதம் உயர்த்தப்பட்டுள்ளது?
 27 வீதத்தில் இருந்து  49.73 வீதத்திற்கு உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
02. தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்?

03.இலங்கையின்  முதலாவது பொலிஸ்மா அதிபராக இருந்தவர் பெயர்?
 வில்லியம் ரொபர்ட் கெம்பெல் .

03.அமெரிக்க நாட்டின்  ஜனாதிபதித்தேர்தலில்  ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர்?
ஹிலாரி கிளிண்டண். ,

04.2016ல்  பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
 தெரசா மே 
இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ?சீ.டி.விக்ரமரத்ன
05.ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை ஒருவர் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.அவரின் பெயர் என்ன?
ஜேர்மனியில் உள்ள Marburg என்ற நகரை சேர்ந்த Nathalie Pohl(21) என்ற இளம்பெண்ச
06.சர்வதேச அளவில் மாமிச உணவை குறைவாக எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இலங்கைஎத்தனையாவது இடம் வகிக்கிறது?
11-வது இடம் பிடித்துள்ளது.ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபர் 7.1 கிலோ மாமிசம் சாப்பிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
07.உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தும் முக்கிய பிரச்சனைகளில் முன்னணியில் இருப்பது?தீவிரவாதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
அமெரிக்க நாட்டின்  ஜனாதிபதி தேர்தலில்  குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் ?
 டொனால்டு டிரம்பு

08.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முறைப்பாடு அவசரத் தொலைத் தொடர்பு இலக்கம்  என்ன?

 09.இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபர்?
 பூஜித் ஜயசுந்தர


10.ஐக்கிய அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார்?

டொனால்ட் ட்ரம்ப் 

11.தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் பெயர் என்ன?
ஆனந்த சமரக்கோன் 

12.இலங்கையின் தேசிய கீதத்தை வங்க மொழியில் யாத்தவர் யார்?
ரவீந்திர நாத் தாகூர் 


13.நல்லாட்சி நடைபெறும் 10 நாடுகளின் தரவரிசை பட்டியல்:
  1. பின்லாந்து
  2. நியூசிலாந்து
  3. நோர்வே
  4. நெதர்லாந்து
  5. ஸ்வீடன்
  6. சுவிட்சர்லாந்து
  7. டென்மார்க்
  8. லக்சம்பர்க்
  9. கனடா
  10. ஜேர்மனி


14.கடந்த 2014 மார்ச் 8ம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானத்தின் பெயர் என்ன?
 எம்.ஹெச்.370 விமானம்

15.இலங்கையில் தற்பொதுபல்கலைகலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படுகின்றமாணவர்களின் எண்ணிக்கை?
 சுமார் 27500 மாணவர்கள் 

16.இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது   2016 நவம்பர் 01  முதல் மொத்தமாக எத்தனை சத வீதம் உயர்த்தப்பட்டுள்ளது?
 10 வீதத்தில் இருந்து 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
17. தொலைதொடர்பு கட்டுப்பாட்டு த் தொலைத்தொடர்பு சட்டத்தின் அடிப்படையில் தொலைதொடர்பு ஆணைக்குழு நிறுவப்பட்டது.

18. மகளிர் விவகார மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர்? 

சந்திரானி பண்டார 

19.2016 நவம்பர் 1    முதல் வற்வரி எவ்வளவு சத வீதம் அதிகரிக்கப் பட்டது?


முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


20.வற்வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட எல்லை,எவ்வளவு?

  மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட எல்லைகாலாண்டில் 12.5 மில்லியன் ரூபாவும், முழு ஆண்டில் 50 மில்லியன் ரூபாவுமாகும். அத்தோடு ஏனைய விநியோகங்களுக்கான வற்வரி பதிவு, காலாண்டில் 3 மில்லியன் ரூபாவிலும், வருடத்தில் 12 மில்லியன் ரூபாவிலும் பதிவாகும்


21.இலங்கையின் செஸ் வரலாற்றில் உலக செஸ் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட அரினா கிராண்ட் மாஸ்டர் (AGM - Arena Grand Master) பட்டத்தை வென்ற முதல் வீரர்

 Kulisa Saranath Nanayakkara  .


22.சீன பெருஞ்சுவருக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெருஞ்சுவராக உள்ள இந்த கோட்டை, உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது?
 கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) ராஜஸ்தான் மாநிலத்தில்
23.இந்தியாவின் இறுதிக்கிராமமென அழைக்கப்படும் கிராமத்தின் பெயர்  என்ன?

24.19வருடங்களுக்குப் பிறகு இலங்கையுடனான விமானப் போக்குவரத்தை மீள ஆரம்பித்த நாடு எது?
நோர்வெ 

25.காலி கரபிட்டியவில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் முகமாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் பருத்தித்துறையில் பாதயாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.எந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந் நிகழ்சசி ஆரம்பிக்கப்பட்டது?

கலர்ஸ் ஒப் கரேஜ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து


26.மாலைதீவு தேசிய கீதத்திற்கு இசை அமைத்த இலங்கையர் யார்?  
டபிள்யூ. டி. அமரதேவா

  27.    பிலிப்பீன்சின் ரமோன் மெக்சைசே விருது (2001), இந்திய அரசின் அதி உயர் ருதுகளில் ஒன்றாகிய பத்மசிறீ விருது (1986), இலங்கை அரசின் கலாகீர்த்தி (1986), தேசமான்ய (1998) ஆகிய விருதுகளும் இவரின் திறமைகளுக்கு கிடைத்த விருதுகள் ஆகும்.இவ்வளவு விருதுக்கும் சொந்தக்காரரான இலங்கையர் யார்?
டபிள்யூ. டி. அமரதேவா

28.வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா இயற்பெயரைக் கொண்ட 

இலங்கையின் பாடகர் இசையமைப்பாளர் யார்? 
 தமது புனைப்பெயராக அமரதேவ என்ற பெயரை பயன்படுத்தி வந்தார்.



29.தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்  எத்தனையாவது உறுப்புரை  தடையாக இருப்பதாக குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



6வது உறுப்புரை

30.உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எது?
 1945 ல் பதிவான ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் 

31.லிட்டில் போய் எனப்படும் அமெரிக்காவின்  அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப் பட்ட நாடு?
ஜப்பான் 


32.ஜப்பான் தாக்கிய அமெரிக்கக் கடற் படைத்தளம் எது?
அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது.

33.அமெரிக்கா  உலகப்போரில் ஈடுபட முக்கிய காரணமாகஇருந்த ஜப்பானின் நடவடிக்கை என்ன?
அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது

34.உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல்  1945 ல் பதிவான ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் இந்த அணுகுண்டை வடிவமைத்த அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் என்ன?

ராபர்ட் ஜே ஆப்பன்ஹைமர் தலைமையில்

35.பயன்படுத்தப்பட்ட கனிமங்கள்  யூரேனியம்-235, ப்ளுட்டோனியம் போன்ற கனிமங்களை பிளந்து சங்கிலித் தொடர் வினைகளின் மூலம் எண்ணி பார்க்க முடியாத அளவு சக்தி உண்டாக்க முடியுமென கண்டறிந்தனர்.


36.ஜப்பானில் அணுகுண்டுகளை வீச அனுமதியளித்த அமெரிக்க அதிபர்? 
A .அதிபர் ட்ரூமென்
B. அதிபர் நிக்சன் 
C. அதிபர் ரீகன் 
D .அதிபர் கிளின்டன் 



37.மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில்  முஸ்லிங்களின் சத வீதம்? 

27%

38.லிங்கன் கெனடி இருவருமே கொலைகள் மூலம் தான் மரணித்தனர்.இதில் லிங்கனை கொலை செய்த நபரின் பெயர்?

“ஜான் வில்கெஸ் பூத்” 1839 வருடத்தில் பிறந்திருந்தான் மற்றும்

39.லிங்கன் கெனடி இருவருமே கொலைகள் மூலம் தான் மரணித்தனர்.இதில் கென்னடியை  கொலை செய்த நபரின் பெயர்?

 கெனடியை கொலை செய்த “லீ ஹார்வே ஆஸ்வால்ட்” 1939 ம் வருடத்தில் பிறந்திருந்தான்.


40.மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு என்ன?

மட்டக்களப்பு மாவட்டம் 2633 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டது. இவற்றில் 229 சதுரக்கிலோமீற்றர் நீர்தங்கிய பகுதி காணப்படுகின்றது.


41.ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டம் என்ற அமைப்பின் தலைவராக செயல் படுபவரின் பெயர் என்ன?
யாஸ்மின் சூக்கா 


42.ஒட்டு மொத்த உலகில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 17ம் இடத்தைப் பெற்ற ஆசிய நாடு எது?
ஜப்பான் 

43இலங்கை சிங்கள சினிமா நடிகரில் சிறந்த நடிகராக 2015ல் ஜனாதிபதி விருது பெற்ற நடிகர்?
 ஷியாம் பெர்ணாந்து  

44.யுனெஸ்கோ-🌻
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945 ம் வருஷம் இதே நவம்பர் மாதம் 16 ம் தேதிதான் உருவாக்கப்பட்டது.
அதனோட உறுப்பு நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே யுனஸ்கோ நிறுவனத்தின் பிரதான பணியாகும். இதன் மூலம் உலகின் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி என்பதை உறுதிப்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்

45.எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள்?

  
1) 
2) 
3) 
4) 
46.இலங்கையில் விஜயனின் வருகைக்கு முதல் இருந்த கல்விமுறைமை எது?முறைசாராக் கல்வி முறை 

47.விஜயனின்   வருகையின் பின் கல்வியில்   மாற்றம் என்ன?
குருகுலக் கல்விமுறை

48..இலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் யார்  வருகையுடன் ஆரம்பமாகியது?
மகிந்தன் 

 49.இலங்கையின்முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் எங்கு  அமைக்கப்பட்டது.?
அநுராதபுர 

50.இலங்கையின்அநுராதபுர ஆடசிக் காலத்தின் பின் ஆரம்பக்கல்வியை வழங்கியவை
விகாரைகள் 

51. போத்துக்கீசர்  ஆட்சிக் காலத்தில்  கல்விக்கான பொறுப்புகள் 
 யாரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது?
  • பரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை
  • ஆரம்பப் பாடசாலை
  • கல்லூரிகள்
  • யேசுயிட்சு கல்லூரிகள்
  • னாதைப்பாடசாலைகள்

52.கட்டாயக் கல்வியை இலங்கைக்கு அறிமுகப் படுத்தியவர்கள்?
ஒல்லாந்தர

53.ஒல்லாந்தரின் கல்வி நிறுவனங்கள்என்ன பெயர் கொண்டு 
அழைக்கப்பட்டது?
  • பரிஸ் பாடசாலை
  • தனியார் பாடசாலை
  • செமினறி பாடசாலை
  • நோமல் பாடசாலை
  • சிஸ்கமிர் அல்லது அறமென்கசுப் பாடசாலை
  • லேடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி


54.இலங்கையின் சுதேசக் கல்வி முறை எத்தனையாம் ஆண்டில் இருந்து ஆரம்பமானது?
1930 

55.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில் இடைநிலைக் கல்வியை வழங்கிய மத ஸ்தாபனங்கள்? 
பிரிவேனாக்கள்,இந்து சமய மடங்கள் 

 56.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில்உயர்கல்வியை  வழங்கிய ஸ்தாபனங்கள்? .
 மகாவிகாரைகள் தங்குமிடம்,நூலகம் முதலான வசதிகளுடன் காணப்பட்டன. 

57.அந்நிய ஆட்ச்சிக்கு முற்பட்ட காலத்தில்உயர்கல்வியை  வழங்கிய
முதல் பிரதான கல்வி நிலையம்?
 அனுராதபுரம் மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது

58.பிரித்தானியரின் கல்விமுறை (1798-1930)

அரசின் நேரடிப் பங்கேற்புடன் மிசனறிகள் கல்வி வளர்ச்சியில் பங்காற்றின.பல்வேறு மிசனறிகள் தொழிற்பட்டன. புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திறமையான மாணவர்களுக்கு கொழும்பு அக்கடமியில் கற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன

59."இலங்கையில் அனைவருக்கும் கல்வி" என்ற கருப்பொருளுடன் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள ஐக்கிய நாட்டு நிறுவனம் எது?
யுனெஸ்கோ

 60.இலங்கை பற்றி மகா வம்சத்துக்குமுதல் எழுதிய இரு தமிழ் நூல்கள்?
இராமாயணம்,சிலப்பதிகாரம்

61.2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரின் கல்விக்கான பரிந்துரைகள் என்ன?
01.தொழில் நுட்ப வசதி கொண்ட வகுப்பறைகளை அமைத்தல்.
02.10ம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணனி  வழங்கல் 
03.உயர்தர பாடத்திட்டத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவம்,தொழில் நுட்பம்,ஆடை வடிவமைப்பு ,மேலாண்மை போன்ற புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

62.அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் பெயர் என்ன?
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் 

63 ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? 

ஜே. கே. ரௌலிங்.

64.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப்புகை வெளியகிறது.

65.திரை அரங்குகளே இல்லாத நாடு 
பூட்டான்.

66.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்  உள்ள நாடு ?
 மாஸ்கோவில்லெனின்நூலகம்.

67. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு?
 சான்மரீனோ.

68.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு?
சுவீட்சர்லாந்து.

69.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டுவெளியிட்ட நாடு?
 சீனா.

70..உலகிலேயே வெப்பமான இடம்?
 அசீசீயா (லிபியா).

  • 71.ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- கூறியவர் யார்?
  • காந்தியடி
.72.உலகிலேயே குளிந்த இடம்?
 சைபீரியா (ரஷ்யா)..

74.நதிகள் இல்லாத நாடு எது ?                                                                                
 சவூதி அரேபியா

75.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?                                     
   மீத்தேன் 

76. .தங்கப்போர்வை நிலம் எது ?                                                         

ஆஸ்திரேலியா

77.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?             

   மூன்று

78கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?               

   வில்லோ மரம்.

79. .போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?                         

  நீயூசிலாந்து

80. .சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?                          

 பிட்மேன் 

81திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?குறிப்பறிதல்.


82. முதல் தமிழ் பத்திரிகை எது ?                                                                    

 சிலோன் கெஜட்

83. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?                                                        

 Postal Index Code

84..கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?                                          

 இந்தியா

85. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?                                     


 வன்மீகம்

86. .டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?                                     

 வானம்பாடி

87. .பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?                                 

 விக்டோரியா மகாராணி

88.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?                      

   அல்பேனியா


89.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?  
 அமெரிக்கா

90.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?                     

சுவிட்சர்லாந்து                                                                                                             

91.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?                                                        

  மெக்கா

92.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?                                                  

   மூன்று


93.சர்வதேச உணவுப்பொருள் எது ?                                                 
 முட்டைகோஸ்
94.காகமே இல்லாத நாடு எது ?                                                                   
  நீயூசிலாந்து
95.எரிமலை இல்லாத கண்டம் எது ?                                                
ஆஸ்திரேலியா
96.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?                                                  
 SPRUCE
97.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?                                                   

 கருவிழி   

98 .தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?                                                          

   லேண்ட் டார்ம்

99.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?                                                               

 சயாம் 

100. .கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார்?                   

 1593

101.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தைகடப்பதாகும்

 26 மைல்  

102. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?                                        


  சிக்காகோ


103.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?                                        
1920

104.
தடுக்கப்பட்ட நகரம் எது ?                                                                                    
லரசா
105.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?                                
 420 மொழிகள்                                                                                                    
106.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?                                                   
  பாரத ரத்னா
107.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?                            
  ஜப்பான்
108.ஒமன் தலைநகரம் எது ?                                                                                        
  மஸ்கட்
109.பள்ளிக்கூடத்தைமுதன்முதலில்உருவாக்கியவர்கள்யார்?            
  ரோமானியர்கள்
110.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?                         
   15 ஆண்டுகள்
111.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?                                                            
 ஏப்ரல் 29
1112.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?                   1752-ல்
113.இத்தாலியின் தலை நகர் எது ?                                                                                 ரோம்
114.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?                                         ஜீ.வீ.மாவ்லங்கர்

115.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?                                                ஆனை முடி 


116. ஒரு குதிரை திறன் என்பது

746 வாட்  

117.கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் 

. ஜெயங்கொண்டார்  


118. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

119. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

உதடு.                                                                                                                                                                                                                                            

120.நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்

 விஜயதாச ராஜபக்ஸ 

121.பிரேசில் நாட்டின் அரசகரும மொழி என்ன?
போர்த்துகீஸ்


60.இலங்கையில் செயற்பட்  பிரித்தானியரின் மிசனறிக் குழுக்கள்

மிசனறிக் குழுவருகைதந்த ஆண்டுசெயற்பாடும் பிரதேசமும்
லண்டன் மிசனறிக்குழு18052017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரின் கல்விக்கான பரிந்துரைகள் என்ன?
01.தொழில் நுட்ப வசதி கொண்ட வகுப்பறைகளை அமைத்தல்.
02.10ம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணனி  வழங்கல் 
03.உயர்தர பாடத்திட்டத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவம்,தொழில் நுட்பம்,ஆடை வடிவமைப்பு ,மேலாண்மை போன்ற புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்     
காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்
பப்டிஸ்ட் மிசனறிக் குழு1812கொழும்பில் பாடசாலை, சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை
வெஸ்லியன் மிசனறிக்குழு1804சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை,வெஸ்லியன் அகடமி(காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,கொழும்பு, நீர்கொழும்பு ,களுத்துறை)
அமெரிக்கன் மிசனறிக் குழு1816இலவசக்கல்வி,விடுதிப் பாடசாலை
கிறித்தவத் திருச்சபைகுழு1818கிராமப் பாடசாலை, விடுதிப் பாடசாலைகளின் உருவாக்கம், மலையகப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம், ஆசிரியர் பயிற்சிக்கு கோட்டையில் கிருத்தவக் கல்லூ



























































உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர்நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும்.
இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபா ஆகும்.
மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலன்டே உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபாவாக காணப்படுகின்றது.
4 ஆவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபா ஆகும்.
இவர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை, இந்தியாவின் அரச தலைவர்களின் சம்பளங்கள் மிகக் குறைவே காணப்படுகின்றது.












.
















வியாழன், 17 நவம்பர், 2016

சிக்கனமாகச் சில சொற்கள்....





சிக்கனமாகச் சில சொற்கள்.... 

இவ்வுலகில் எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது, ஆனால் பெரும்பாலானவற்றை வாங்க முடியும். சிக்கனமாக இருக்க முடிந்தால் , ஒரு கதையுடன் தொடங்குவோமா?

ஒருவர் முகமது நபியிடம் வந்தார். ஊரில் ஒரு பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மீதமிருக்கும் கட்டடப்பணியை முடிக்க ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. முகமது நபியிடம் செய்தியைச் சொன்னார்.

முகமது நபி கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு பெரிய பணக்காரரைப் பற்றிச் சொல்லி அவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். கண்டிப்பாக அவர் உதவி செய்வார் என்று நம்பிக்கை ஊட்டினார். வந்தவர் மகிழ்ந்து போனார். வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உடனே பக்கத்து ஊருக்குப் பயணமானார்.

இவர் பக்கத்து ஊருக்குப் போனபோது, அந்தப் பணக்காரர் தன்னுடைய வேலைக்காரனின் முகத்தில் ஓங்கி ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தார். சரியாகப் பத்து குத்துகள். பணக்காரர், வேலைக்காரனைப் போட்டுக் குத்துவதைப் பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார் இவர். இந்த நேரத்தில் போய் இவரிடம் எப்படி உதவி கேட்பது? என்று அச்சமாகவும் இருந்தது. வேலைக்காரன் வெளியே வந்ததும் அவனிடம் விசாரித்து விட்டு, பணக்காரனிடம் போவது என்று முடிவு செய்து கொண்டு, வெளியே காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த வேலைக்காரன் வெளியே வந்தான். அவனிடம், பணக்காரர் அவனை அடித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அது ஒண்ணும் இல்லீங்க. கடையில போய் துவரம்பருப்பு வாங்கி வரச் சொன்னாரு. வர்ற வழியில பத்துப் பருப்புங்க கீழ விழுந்துடுச்சு. அதுதான் பத்து குத்து குத்துனாரு முதலாளி - என்றான் வேலைக்காரன்.

திகைத்துப் போனார் இவர். கூடவே ஒரு சந்தேகமும் வந்தது. பத்தே பத்து பருப்பு சிந்தினதுக்கே இப்படிப் போட்டு குத்துற மனுசன், எப்படி அவ்வளவு பெரிய தொகையைத் தருவாரு? - இவர் எந்த முதலாளியைப் பார்க்க வந்தாரோ, அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்பினார்.

முகமது நபியிடம் போய் செய்தியைச் சொன்னார். முகமது நபி, பரவாயில்லை. மறுபடியும் போய் அவரைப் பாருங்கள், அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்றார். இவரால் மறுக்க முடியவில்லை. முகமது நபியே சொல்லிவிட்டார், போய்த்தான் பார்ப்போமே என்று மறுபடியும அந்த ஊருக்குப் போனார்.

இவர் போனபோது, அந்தப் பணக்காரரின் வீட்டுக்கு முன்னால் கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் எட்டிப் பார்த்தார். அதே பணக்காரர். அதே வேலைக்காரன். இப்போது பணக்காரர், கையில் வைத்திருந்த சவுக்கால் வேலைக்காரனை அடித்துக் கொண்டிருந்தார்.,

சரியாகப் பத்து சவுக்கடிகள். இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை விசாரித்தார்.

அது ஒண்ணும் இல்லீங்க. இந்த வேலைக்காரன் எண்ணெய் வாங்கிட்டு வந்திருக்கான். வர்ற வழியில பத்து சொட்டு எண்ணெய் கீழ சிந்திடுச்சாம். அதுதான் பத்து சவுக்கடி குடுக்கறாரு முதலாளி... என்றான்.

இவருக்கு இதயத்துடிப்பே ஒரு வினாடி நின்றுவிட்டது. பத்து சொட்டு எண்ணெய் கீழே சிந்தியதற்கு இந்த அடி அடிக்கிற மனிதர், எப்படி அவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகத் தருவார்? நம்பிக்கையற்றவராக அவரைப் பார்க்காமலேயே மீண்டும் ஊர் திரும்பினார்.

முகமது நபி விசாரிக்க, நடந்ததைச் சொன்னார். அடடா தப்புப் பண்ணிட்டீங்களே,, அவரைப் பாத்துட்டுல்ல வந்திருக்கணும்? சரி மறுபடியும் போங்க. இந்தத் தடவை என்ன நடந்தாலும் அவரைப் பார்க்காம வந்துடாதீங்க. போங்க என்றார் நபி. மறுபடியும் அதே ஊருக்குப் போனார்.

இந்த முறை இவர் எதிர்பார்த்ததைப் போல் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பணக்காரர் வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். யாருடனோ சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். இவர் பணக்காரருக்கு வணக்கம் சொல்ல, அவரும் மிகப் பணிவாக பதில் வணக்கம் சொல்லி வரவேற்றார். தன்னுடைய ஊரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதையும், பணம் இல்லாமல் வேலை பாதியிலேயே நிற்பதையும் சொன்னார்.

அடடா, நல்ல காரியத்தைப் போய் தள்ளிப் போடலாமா? முதல்லேயே வந்திருக்கக்கூடாது? - என்று உரிமையாகக் கடிந்து கொண்டார் அந்தப் பணக்காரர். உடனே வீட்டுக்குள்ளே போய் கேட்ட முழுத்தொகையையும் எடுத்து வந்து கொடுத்தார்.

வந்தவர் அசந்து போனார். அந்தப் பணக்காரர் அப்படி நடந்து கொள்வார் என்பதை இவர் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பிரமிப்பு மாறாமல் பணத்தோடு முகமது நபியிடம் வந்தார். பணக்காரர் பணம் கொடுத்த விவரத்தைச் சொன்னார்.

பத்தே பத்து பருப்புகளுக்காகவும், பத்து சொட்டு எண்ணெய்க்காகவும் வேலைக்காரனை அந்த அடி அடிச்சவரு, எப்படி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையா குடுத்தாரு? - என்று ஆச்சரியம் விலகாமல் நபியிடம் கேட்டார்.

நபிகள் மிகப் பொறுமையாகச் சொன்னார். நீங்க நெனைக்கிற மாதிரி அவரு கஞ்சன் இல்லை... சிக்கனக்காரர்.. அவர் மட்டும் அவ்வளவு சிக்கனமா இல்லைன்னா அவராலே பள்ளிவாசல் கட்டப் பணம் குடுக்க முடியாது.

இதுதான் சிக்கனத்தின் பெருமை.

( ஆர் பத்மநாபன் எழுதிய தண்ணியா செலவழி நூலின் முன்னுரையாகவும், நுழைவாயிலாகவும் எழுதிய சுவையான பகுதிதான் இது ) 














புதன், 16 நவம்பர், 2016

கல்விக் கண்ணோட்டம் !



இலங்கையின் நீண்ட கல்வி  வரலாறானது இரண்டாயிரம் ஆண்டுகளையும் பின்னோக்கிச் செல்வதோடு, இலங்கை அரசியலமைப்பானது அடிப்படை உரிமையொன்றாக கல்வியை ஏற்பாடு செய்கிறது. இலங்கையின் சனத்தொகையில் 92 வீதமானோர் எழுத்தறிவு வீதத்தை கொண்டவர்களாவர். இது மூன்றாம் உலக நாடொன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமானதாகும். இலங்கை, தெற்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கல்வியறிவை கொண்டு ஆசியாவில் மிகச் சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் வாழ்க்கை முறை, கலாசாரம் என்பவற்றில் கல்வி முக்கிய பங்கை வகிப்பதோடு, இது கி.மு. 543ஆம் ஆண்டை பின்னோக்கிச் செல்கின்றது. நவீன கல்வி முறைமையானது, இலங்கை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்டபோது கொண்டு வரப்பட்டதாகும்.  இது மத்திய அரசாங்கத்தினதும் மாகாண சபைகளினது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. சிலவற்றில் மத்திய அரசாங்கம் பொறுப்பை கொண்டுள்ளதோடு,  ஏனையவற்றுக்கு மாகாணசபை சுய அதிகாரத்தை கொண்டதாக உள்ளது.

உள்ளூர் இராஜ்ஜியங்களின் காலப்பிரிவில் இலங்கையில் உயர் கல்வியானது பல்வேறு முக்கிய  பிரிவெனாக்களின் (பண்டைய பௌத்த மதகுருகள்  பயிற்சி நிலையங்கள்) அடிப்படையில் அமைந்திருந்தது. இலங்கையில் நவீன பல்கலைக்கழக முறைமையின் மூலமானது லண்டன்  பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னைய இடத்தில் தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக கல்லூரி என்றவாறு பல்கலைக்கழக கல்லூரியொன்று 1921 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
எவ்வாறாயினும் இலங்கையில் நவீன உயர் கல்வியின்  ஆரம்பமானது 1870 இலங்கை மருத்துவ பாடசாலையின் தொடர்ந்ததுடன் ஆரம்பமாகி, அதன் பணிகள்  கொழும்பு சட்டக் கல்லூரி (1875) விவசாய பாடசாலை (1884), அரசாங்க தொழிநுட்பக் கல்லூரி (1893) என்பன தாபிக்கப்பட்டன.

இலங்கை பல்கலைக்கழகமானது 1942 ஆம் தனியான 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழக கட்டளைச் சட்டத்தினால் தனியான, வதிவிட, சுயாதீனமுள்ள, முள்ள நிறுவனமொன்றாக 1942 யூலை 01 ஆம் திகதியன்று தாபிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் கொழும்பில் தாபிக்கப்ட்டதோடு, பலவருடங்களின் பின்னர் இரண்டாவது வளாகம் பேராதனையில் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகமானது 1972 ஆம் ஆண்டில் 1ஆம் இலக்க இலங்கைப் பல்கலைக்கழக சட்டத்தினை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பல்கலைக்கழகமாக மாறி மிகவும் வினைத்திறன்மிக்க அரசாங்க கட்டுப்பாட்டையும் கொண்டதாக மாறியதோடு, 1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பின்னர் தனியானனன தனியான பல்கலைக்கழகங்களின் சுயாதீன அடையாளங்களுடன் தாபிக்கப்பட்ட போதிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினூடாக அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாடு, மத்திய அரசாங்கத்திற்கு இடப்பட்ட நிருவாக முறை என்பவற்றை பேணியது கல்வி அமைச்சர் காலஞ்சென்ற கௌரவ லலித் அதுலத் முதலி அவர்கள் 1980 களில் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டார். அவரால் தாபிக்கப்பட்ட மகாபொல நிதியமானது புலமைப் பரிசில் வழங்கியதோடு, நவீன உயர் கல்வி நிறுவனத்திற்கு தேவையான நிதியிடலையும் மேற்கொண்டது. 1999 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டுவரப்படும் வரை அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமே இளமாணிப் பட்டங்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன.  எவ்வாறாயினும் இம்முறை அதன் பிறகு மாற்றமடைந்தது.

இலங்கையில் தற்போது 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. மிக முன்னணியில் இருப்பவைகளாக கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ருஹுன பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் என்பன உள்ளன. பல்கலைக்கழக சட்டத்திற்கான மாற்றங்களுடன் அண்மைக் காலங்களில் சில நிறுவனங்கள் சுயமாகவே தமது பட்டங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றன. இதன் மிகப் பிரதானமானதாக அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகம் திகழ்கின்றது.
உயர் கல்வி முறைமையின் கீழான நிறுவகங்களை ஒழுங்குபடுத்தி, விரிவாக்கி விருத்தி செய்வதற்காக அரசாங்கம் உயர் கல்வி அமைச்சை உருவாக்கியது. அந்த வகையில் இந்த அமைச்சானது சமூக, பொருளாதார, அபிவிருத்தி துறையில் ஒரு பாரிய பொறுப்பை  கொண்டுள்ளது. பிரதான துறைகளினால் கோரப்படுகின்ற மனித வளத்தின் அபிவிருத்தியை நோக்கியதாக பாரிய செல்வாக்கொன்றை அது கொண்டுள்ளது. / தற்போதைய நிலைமை கல்வித்துறைக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதோடு இது அரசாங்கம் இறுதியாக கல்வி மற்றும் ஏனைய பொருளாதார , சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு சுதந்திரமாக விட்டுள்ளது. இதன் விளைவாக கல்வி, மற்றும் உயர் கல்வி அமைச்சுகள் கொள்கைகள், உபாயமுறைகள் என்பவற்றை ஏற்கனவே வகுத்தமைத்துள்ளதோடு, உலகின் ஏனைய நாடுகளின் தரத்திற்கு சமமானதாக நாட்டின் கல்விமுறைமையை கொண்டுவருவதற்கு அவற்றை நடைமுறைபடுத்துகின்றது.

உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுடன் கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள் ஏனைய பிரதான பங்காளர்களுடன் தேவையான மட்டத்தில் உயர் கல்வி முறைமையை தரமுயர்த்துவதற்கு தொடரான உரையாடலில் ஈடுபட்டிருக்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உயர் கல்வி கருத்திட்டமானது உயர் கல்வி முறைமையின் தரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது நாட்டில் இணைய ரீதியான உயர் கல்வி முறையை மேம்படுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. தேசிய இணைய, தொலைக்கல்வி அமைப்பை விரிவாக்கும் செயன்முறையில் ஈடுபட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சானது அதன் சர்வதேச சட்டத்தினை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கீழ் தர உத்தரவாத, அங்கீகரிப்பு சபையொன்றையும் தாபித்துள்ளது. த.உ.அ.ச. யின் பிரதான நோக்கம் யாதெனில் தர உத்தரவாதத்தினூடாக உயர் கல்வியில் கீர்த்தியை உறுதிப்படுத்துவதாகும்.

உள்ளூர் பட்டதாரிகளுக்கு தொழில் சந்தை பெறுமதியில் கேள்வியினை மேம்படுத்துவதற்காக அவர்களை தொழில் சார்ந்த கல்வி முறையை நோக்கி நகர்த்துவதற்கும் அவர்களுக்கு வினைத்திறனுள்ள தொடர்பியல் திறன்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு என்பவற்றையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கான ஒரு பிரதான முன்னெடுப்பாக தொழில் சந்தையில் உயர் கேள்வியைக் கொண்டிருக்கக் கூடிய த.தொ.தொ. விசேட இளமாணிப் பட்டம் இருக்கும். இந்த உபாயமுறை இலங்கையில் மனித மூலதனத்தின் நிகர பெறுமதியை மேம்படுத்தும்.
உயர் கல்வி அமைச்சானது சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இரு வழிமுறை மூலவள பரிமாற்றம், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு கற்கைக்கான புலமைப் பரிசில்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கும் பங்குடமைத் தன்மையை விருத்தி செய்கின்றது. உயர் கல்வி அமைச்சின் ஏனைய துறையாக கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொறியியல், மருத்துவம், சட்டம், கலை போன்ற பீடங்களுக்கான பொருத்தமான திறமையுள்ள உசாவுகை குழுக்களை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதாகும். அது தகவல்களை பரப்புதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளல், திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக நிபுணத்துவத்தையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்றது.




வடக்கு கிழக்கு ஆசிரியர் இணைப்பிற்காக விசேட அமைச்சரவை பத்திரம்!

வடக்கு கிழக்கு ஆசிரியர் இணைப்பிற்காக விசேட அமைச்சரவை பத்திரம்!: வடக்கு கிழக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தொழில் யாப்பின் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட மீதான இரண்டாம் நாள் விவாத்தில் உரையாற்றியபோதே