வெள்ளி, 28 அக்டோபர், 2016


சம்பந்தனுக்கு வீ. ஆனந்தசங்கரி எழுதிய நீண்ட கடிதம்!








 தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனுக்கு கடிதமொன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
நான் எழுதியிருந்த கடிதங்களில் இது ஐந்தாவதாகும். எனது முன்னைய கடிதத்திற்கு உங்களுடைய அமைதி எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
பொதுவாக எமது மக்களையும் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தையும் உங்களையும் பாதிக்கின்ற மிக முக்கியமானதென்பதை உங்களால் கவனத்திற்கெடுக்கப்படவில்லை.
2004ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், அவர்கள் தான் தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும் வெளியிட்டமை பெரும் தவறென இப்போதாவது உணர்வீர்களென நம்புகின்றேன்.
அத் தேர்தல் விஞ்ஞாபனம் பாராளுமன்றத்தில் சில ஆசனங்களை பெற உதவியிருக்கலாம். ஆனால் முழு தமிழ் சமூகத்திற்கும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் கற்பனையில் அடங்கா.
நீங்கள் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி என்பதால் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
வேறு எவரிடமிருந்தும் இது சம்பந்தமாக ஆலோசனையை பெற்றிருக்கக்கூடாது. தாம் ஒரு பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பதை உணராது நாடும் மக்களும் நன்கு உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனது முன்னைய கடிதத்தில் தங்களின் சகபாடியொருவர் ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பை அறியாமையால் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
இத் தீர்ப்பை நான் பாரதூரமாகவே கருதுகிறேன். ஏனெனில் இத் தீர்ப்புத்தான் தொடர்ந்து வரவிருக்கும் மகிழ்ச்சி தாராத சம்பவங்களுக்கு ஆரம்பமாக அமைகிறது.
அது மேலும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு நாடுகளில் நடக்கின்ற அகதி அந்தஸ்த்து கோரிக்கை வழக்குகளை பாதிக்கும் என்பது மட்டுமல்ல ஏனையோருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் கஸ்டத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
தயவு செய்து விழித்தெழுந்து உங்களை சுற்றி என்ன நடக்கின்றதென்பதை பாருங்கள்.
தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகித்தவர்கள் போட்டியிட உள்ளவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் அங்கத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியிலிருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் வாபஸ் பெறுமாறு எனது ஆலோசனையையாக தெரிவிக்கிறேன்.
இந்த அமைப்புக்கள்; விரைவில் சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்புக்களென பிரகடனப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
திரு. சம்பந்தன் அவர்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மோசமான அறிக்கையை வெளியிடும்போது மறைமுகமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிவருமென என்றாவது உணர்ந்தீர்களா? நடந்தவை ஒருபுறம் இருக்க இந்த பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து விடுதலைப் புலிகள் இறுதியுத்தத்தில் மே 18, 2009 தோற்கடிக்கப்படும் வரை ஏறக்குறைய ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் ஆயிரத்து ஐநூற்றுக்கு மேலானோர் காயப்பட்டும் உள்ளனர்.
நான் இதனை ஒரு வேடிக்கையாக கருதவில்லை. ஆனால் இதனையொரு பாராதூரமான விடயமாக கருதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அதிகமானவர்கள் தெரிவாகியிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தவர்களே.
தயவு செய்து இவர்கள் அனைவரும் இலங்கை தமிழரசு கட்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கத்துவம் பெற்றவர்களாவர்.
முன்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அடையாளத்தையும் தன் நாணயத்தையும் மிக வேகமாக இழந்து வருவதால் அதனை கைவிடும்படி கேட்டிருந்தேன்.
சாத்வீக கொள்கைக்கு கட்டுப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை என்றோ ஒருநாள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் என்று எண்ணிய எனது கணிப்பு கனடா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறு நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எமது நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது எனக் கூறுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இத்தீர்ப்பு பொருத்தமாக இருந்தால் எந்த வழக்கிலும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நாட்டிலும் உதாரணமாக உறுதிப்படுத்தப் பிரயோகிக்கப்படலாம்.
உங்களுக்கு விருப்பம் இல்லாது போனாலும் சில விடயங்கள் உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருவதற்கு வருந்துகிறேன்.
60 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தும் உங்களைப் போன்று கஷ்டங்கள் எதுவுமில்லாமல் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாக்கியசாலியல்ல.
தந்தை செல்வா இறந்து மிகக் குறுகிய காலத்திற்குள் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிக அதிகப்படியான வாக்குகளால் பெரும் வெற்றியீட்டினீர்கள்.
ஆனால் நான் கிளிநொச்சித் தொகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துசென்று மக்களை சந்திப்பதற்காக சுற்றித்திரிந்து பாராளுமன்றம் செல்வதற்கு பத்து ஆண்டுகளாகின.
ஆகையினால் பாராளுமன்ற பதவி என்னால் வருந்தி பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் உங்களுக்கு ஓர் ஆசீர்வாதம். தற்போது அப்பதவியை நீங்கள் நினைப்பதிலும், பார்க்க கூடுதலான பெறுமதியாக நினைக்கின்றேன்.
மக்களை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் கொண்டுவர நாம் எந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பது பலருக்குத் தெரியாது.
இந்த பணிக்கு உங்களுடைய பங்களிப்பு எதிலும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் அதனை அடைய எமக்கு பல ஆண்டுகளும் பல தியாகங்களும் செய்ய வேண்டியிருந்தன.
பேராசை பிடித்த அரசியல்வாதிகள் சிலரின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை சிதைக்க முக்கிய காரணியாக நீங்கள் இருந்தீர்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி எவ்வாறு உருவாகியது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
தலைசிறந்த பெரும் தமிழ் தலைவர்களாகிய கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட சிறந்த அந்தக் கட்சிக்கு நீங்கள் செய்த தீங்கை எண்ணி வருந்துகிறேன்.
நீங்கள் உங்கள் கௌரவத்தை இப்பெரும் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களையே நீங்கள் அவமதித்துள்ளீர்கள்.
இவ்விரு பெருந்தலைவர்களும் மலையகத் தமிழர் தலைவர் கௌரவ எஸ்.தொண்டமான் அவர்களை இணைத்துக்கொண்டதன் பின்னர் இம் மூவரும் முக்கூட்டுத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழரசு கட்சியையோ தமிழ் காங்கிரஸ் கட்சியையோ மீளப் புதுப்பிக்கும் எண்ணம் சம்பந்தப்பட்ட அவர்களுக்கு இருக்கவில்லை.
காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழ் மக்களின் பாதுகாவலனாகவும் அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தலை கொடுக்க வேண்டும் என்றே தீர்மானித்திருந்தனர்.
ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பின் 37வது பந்தியின் பொருத்தமான பகுதியை கீழே தருகின்றேன்.
'தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாத் தமிழர்களையும் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏனெனில் அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதால்தான்.
நான் கவனத்தில் எடுப்பது திரு.சம்பந்தன், அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விலகிச் சென்றது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இலங்கை தமிழரசு கட்சியையும் வழி நடத்துவதற்கே.
ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப் புலிகளுக்கு தீவிரமாக ஆதரவு வழங்க தயக்கம் காட்டியமையாலேயே'
திரு.சம்பந்தன் அவர்களே இதன் காரணமாகத்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தீர்களா? அல்லது கூடுதலாக சில ஆசனங்களை உங்கள் கட்சிக்கு பெற வேண்டும் என்பதற்காகவா?.
உங்களுடைய நடவடிக்கையால் 2004ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தின் ஊடாக எனது நேர்மையான, விசுவாசமான சேவைகளை, விடுதலைப்புலிகளை தவறாக வழிநடத்தி மக்களுக்கு கிடைக்காது செய்தீர்கள்.
இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவற்றையும் செய்யாது காலத்தை வீணடித்தீர்கள்.
மக்களை பாதுகாப்பதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அவைகளை புறந்தள்ளி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கும் பகுதியாகவோ முற்றாகவோ பொறுப்பேற்க வேண்டிய நிலைமைக்கும் ஆளாகியுள்ளீர்கள்.
இறுதியாக இந்த விடயத்தை மிக சிறிய விடயமாக கருதி புறக்கணித்து விடாதீர்கள் உடன் நடவடிக்கையெடுக்க தவறுவீர்களேயானால் உங்களுடைய எதிர்கட்சித்தலைவர் பதவி பறிபோவதற்கு வாய்ப்பளிப்பதோடு தேசிய அரசாங்கமும் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
எனது பணிவான ஒரு வேண்டுகோள் திரு வீ ஆனந்த சங்கரி ஐயாவுக்கு இந்த 
 தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதை கழட்டி விட்டுட்டு கடிதம் எழுதுங்கோ 



nanri tamilwin.

திங்கள், 24 அக்டோபர், 2016

தமிழினி கொடுக்கும் பூங்கொத்து!

தமிழினி கொடுக்கும் பூங்கொத்து!: இலங்கையில் போருக்குப் பின்னும் நீடிக்கும் கசப்பான சூழலின் இடையே சிறு பூங்கொத்தை நீட்டியிருக்கிறது ஒரு புத்தகம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நாயும் பாஷையும்


நாயும் பாஷையும்



படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...
ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....
காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!
(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும் என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....
ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்
பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)
எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....
அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....
கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......
அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....
அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது
விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது
உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...
உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....
பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...
அவர் மறுத்துவிட்டார்...
எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...
அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....
ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....
அதற்க்கு அவர்...சொன்னார்....
இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....
அவள் சொல்வாள்....
"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...
அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்
அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
ஹாஹாஹாஹா......
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
நன்றி புரட்ச்சி FM 

சனி, 22 அக்டோபர், 2016

பின்லாந்து கல்வி முறை


உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...
😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...
👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...
👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...
👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...
👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...
💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...
👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...
👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...
👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...
👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...
😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...
👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...
👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...
👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...
👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...
👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...
👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...
👏மதிக்கத்தக்க மனநிலை.
👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..
👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...
👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...
👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...
👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...
👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
👏👏👏👏👏👏👏👏
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...
முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...
ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….
01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.
02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.
03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.
04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.
05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.
09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.
11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.
13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.
14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.
15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...
முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!
நன்றிபுரட்ச்சி  FM

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!




தாமரைப் பூ ரோஜாவைப் பார்த்து
"உன் அழகே அழகு!"
என்ன ஒரு நறுமணம்
எல்லை முழுதும்  நறு
மணம்  பரவிக்கிடக்கிறது கண்களுக்கு இதமாக
காண்பவர் கண்களையும் வசீகரிக்கிறாய் ,இதனால்தான் உன்னைத் தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்"என்று புகழ்ந்து தள்ளியது.


ரோஜா சிரித்துவிட்டுச் சொன்னது."எனக்கு இவ்வளவு அழகு மணம் இருந்து
என்ன பயன்?அற்ப ஒரு நாள் வாழ்வு,மறு  நாளே  என் மணமும் அழகும்
வாடி வதங்கி அழிந்து விடுகின்றது.அனால் நீ அப்படியல்லவே வாடாதவள்
அழியாதவள் ஆண்டவன் திருவடியை அலங்கரிக்கப் பிறந்தவள் உன் பெருமையோ,பெருமை" என்று பதில் கூறியது.

#ஈசாப் கதைகள்#  

வந்தோரை வாழ வைத்த தமிழகம்!

வந்தோரை  வாழ வைத்த தமிழகம்!
,
இந்த வீடியோவைப் பாருங்க  பணத்தின் அருமை புரியும்,தானாடா விட்டாலும் தன்  தசையாடும் என்பார்கள் தமிழனின் பண்புக்கு இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு.தன்  கஷ்டத்தை விடவும் தன்  இனத்தின் தேவைகளை உணர்வதென்பதை விடவும் உடனடி நிவாரணம் என்பது கடவுளாலும் முடியாது உதாரணம் முள்ளிவாய்க்கால். 

சனி, 15 அக்டோபர், 2016

உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!




உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!: உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால...


புதன், 12 அக்டோபர், 2016

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி



உலகத்தில் இமயம் பெரிது
கண்டுபிடிப்பு!
 உலகம்,  இருப்பதில்  பெரிது
பொது அறிவு !

ஆனாலும்,
ஆகாயம் அதைவிடப் பெரிது
ஆன்மீகம்!

என்ன பெரிதாக இருந்தால்
எனெக்கென்ன?

என்
அம்மாவின் முன்னால்
இவையெல்லாமே
சிறிசு.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நினைப்பது நிறைவேறும்! அதற்கு ,நீங்க இருக்கணும் இவ்வாறு.

நினைப்பது நிறைவேறும் அதற்கு நீங்க இருக்கணும் இவ்வாறு 



நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சோடசக்கலையைப் பின்பற்றுங்கள் !!!
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூசோடேசக்கர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.
மிஸ்டிக்செல்வம்
இம்மாதம் சோடசக்கலை நேரம் 18.08.2016 வியாழக்கிழமை அன்று மதியம் 2:52 PM முதல் 4:52 PM மணி வரை வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com⁠⁠⁠⁠