ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சுண்டைக்காய் !


படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, இயற்கை, உணவு மற்றும் வெளிப்புறம்
#இந்த_காய்_கசப்பு_சுவை_கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.
வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
மருத்துவக் குணங்கள்:
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும். சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும். சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சனி, 11 பிப்ரவரி, 2017

தலைமுறைகள் தழைக்க தமிழகம் காப்போம்.

'ஒரு மாஃபியாவின் கையில் இந்த மாநிலம் சிக்கிவிடக் கூடாது.. அதுதான் முக்கியம்!'
பலருக்கு ஒரு விஷயம் சரியா புரியலைனு தெரியுது.
நம்ம தமிழ்நாடு ரொம்ப காலமா ஒரு நெருக்கடில சிக்கிட்டு இருந்தது. அதாவது கண் முன்னால் நடக்கிற ஒரு தப்பையோ அநியாயத்தையோ யாராலும் தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருந்தது.
சராசரி மக்கள் மட்டுமில்லை. மிக அதிகமான மக்களை தினமும் எட்டக் கூடிய பத்திரிகைகளாலும் கேள்வி கேட்க முடியாத நிலை. கேள்வி வேண்டாம், நடந்த சம்பவம் இதுதான் அப்டீனு சும்மா செய்தி போடக்கூட முடியாது.
அரசாங்கத்த விட சக்தி வாய்ந்ததுனு நம்மில் பலர் நம்பிட்டு இருக்கிற நீதிமன்றங்களே பல விஷயங்கள பாத்தும் பாக்காம இருந்த பரிதாபம் இங்க இருந்தது. ஊருக்கே தெரியும் இவன் அல்லது இவள் தப்பு செஞ்ச குற்றவாளி அப்டீனு.
போலீஸ் வரும், கைது, ஜெயில், வழக்கு, கோர்ட் எல்லாம் வரிசைப்படி நடக்கும்.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இவரை / இவர்களை விடுதலை செய்கிறேன்னு நீதிபதி தீர்ப்பு வாசிப்பார். லோக்கல் கோர்ட்ல இருந்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இந்த காட்சிகளை நாம பாத்திருக்கோம். அதனால் இது நம்ம தமிழ்நாட்டுக்கு மட்டும் இருந்த பிரச்னைனு சொல்ல முடியாது.
ஆனா, அங்கெல்லாம் கேள்வியாவது கேட்க முடிஞ்சுது. தீர்ப்புக்கோ தண்டனைக்கோ பயப்படலைனாலும் இப்டி ஜனங்களும் மீடியாவும் கேக்குமேனு கேள்விக்கு பயந்தாங்க கிரிமினல்ஸ். ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் எல்லாமே. நம்மூர்ல அதுகூட இல்லை.
மொத்த சமுதாயத்தையும் ஒரு மூட்டைல கட்டி மூலைல கடாசிட்டு அதிகார வர்க்கம் சுதந்திரமா செயல்பட்டுது. மூச்சு விடக்கூட திணறிகிட்டு கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருந்தது தமிழ்நாடு.
திடீர்னு ஜெயலலிதா மரணம் அடைஞ்சதும் அந்த மூட்டைல பெருசா ஒரு ஓட்டை விழுந்தது. ஆக்சிஜன் கிடைச்சுது. எல்லாரும் மூச்சு விட முடிஞ்சுது. அதோட சேர்ந்து சுதந்திரம், ஜனநாயகம், நியாயம், தர்மம் மாதிரியான சிந்தனைகளும் மறுபிறவி எடுத்தன.
ஜல்லிக்கட்டின் பேரால் மெரினாவில் நடந்த மக்கள் எழுச்சி அந்த சுதந்திரத்தோட வெளிப்பாடு தவிர வேறேதும் இல்லை.
அடுத்த கட்டம் அதுக்குள்ள வந்துருச்சு.
ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி. நடிகையா இருந்து அரசியலுக்கு வந்து அகில இந்திய அளவில் பல தலைவர்களோட பழகி, வேறுபட்ட அரசியல் அனுபவங்களை சந்திச்சு, கட்சி நிர்வாகம் அரசு நிர்வாகம் எல்லாம் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டு, மாநிலம் முழுவதும் மக்களை சந்திச்சு, தேர்தல்கள்ல வெற்றி தோல்விகளை சந்திச்சு பக்குவப்பட்ட ஒரு மாஸ் லீடர்.
அப்படிப்பட்ட ஜெயலலிதா ஆட்சியிலேயே தமிழ்நாட்டு மக்கள் சமூகம் ஒரு அழுக்கு மூட்டைக்கு சமமாக சுருட்டி வீசப்பட முடிந்தது என்றால்.. ஜெயலலிதாவுக்கு பின்னால் நிழலில் இருந்து கொண்டே தமிழகத்தின் இயற்கை வளங்களை சுருட்டுவதிலும் பிறர் சொத்தை அபகரிப்பதிலும் தீவிரம் காட்டிய ஒரு மர்மக் கூட்டம் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் கதி என்ன ஆகும், இந்த மக்களின் கதி என்ன ஆகும்?
அடுத்தடுத்து குற்றங்களையும் கொடுமைகளையும் பார்த்துப் பார்த்து நமது மனமும் மூளையும் மரத்து போய்விட்டது. சிறுமிகள் பெண்கள் பாலியல் பலாத்காரம், வீட்டில் தனியாக வசித்த முதியோர் கொலை, ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் ஐந்து ஆண்டுக்குள் 500 கோடி சொத்து சேர்த்துவிட்டு பத்து பைசா வரி கட்டாமல் ஏமாற்றுகிறார்.. என்ற செய்திகள் இப்போதெல்லாம் நம்மில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பையனூர் கிராமத்தில் நான் ஆசையாக வாங்கி அழகுபடுத்திய பண்ணை வீட்டை அடித்துப் பிடுங்கியவர் சசிகலா என்று நேற்று டீவி கேமராக்கள் முன்பு கண்ணீருடன் குமுறிய கங்கை அமரன் பற்றி சமூக ஊடகத்தில்கூட அதிக கமென்டுகளைப் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் சகஜம் என்ற பக்குவத்தை இவ்வாறு தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியதில் பெரும் பங்கு சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் சாரும்.
தங்களை வாழவைத்த ஜெயலலிதாவுக்கே அந்தக் குடும்பம் துரோகம் செய்ய முயன்றதும், அதன் விளைவாக அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் வெளியேற்றப்பட்டது வெறும் கதையல்ல, நிஜம்.
'அரசிலுக்கே வர மாட்டேன், உங்களுக்கு துரோகம் செய்த என் உறவினர்கள் எவருடனும் இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது' என்று பகிரங்கமாக எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் வேதா நிலையத்தில் புகுந்த சசிகலாதான் இன்று உலகமே வெறுப்புடன் பார்க்க முதலமைச்சர் நாற்காலியில் அமர துடியாய்த் துடிக்கிறார்.
உண்மையில் ஜெயலலிதாவுக்கு சசிகலா மீது நல்ல எண்ணம் இருந்திருந்தால் கட்சியில் ஒரு சிறிய பொறுப்பாவது கொடுத்து பயிற்சி அளித்திருக்க மாட்டாரா? எம்.பி., தலைமை நிலைய நிர்வாகி, கொள்கை பரப்புச் செயலாளர் என ஒவ்வொரு பதவியாக கொடுத்துப் பழக்கப்படுத்தி ஜெயலலிதாவை எம்ஜிஆர் வளர்த்தது போல் சசிகலாவை ஜெயா வளர்த்திருக்க மாட்டாரா?
'அரசியல் ஆசைகளுக்கு இடம் தர மாட்டேன் என்று எழுதிக்கொடு' எனக் கேட்டு, அந்தக் கடிதத்தையும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தினார் ஜெயலலிதா. சசிகலா அரசியலுக்கு வருவது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்பதை உணர்ந்திருந்த காரணத்தால்தானே ஜெயா அப்படி செய்தார்?
ஜெயலலிதாவை விட சசிகலாவை நன்றாக அறிந்த யாராவது இருக்க முடியுமா, மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக, அவருக்கே துரோகம் செய்யும் விதமாக அதிமுக கட்சியையும் தமிழக ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா துடிக்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
1.இதுவரை அடித்த கொள்ளை போதாது, இன்னும் வேண்டும் என்கிற பேராசை.
2.அடித்த கொள்ளையால் சேர்த்த சொத்துகளை சட்டபூர்வமாக பாதுகாக்க முடியாது என்பதால் ஆட்சி அதிகாரம் தேவை என்ற நம்பிக்கை.
3. தலைக்கு மேல் தொங்கும் வழக்குகள், அதன் மூலமான தண்டனைகளில் இருந்து தப்ப கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இருவகை பலமும் அவசியம் என்ற நம்பிக்கை.
4.அதிகாரம் கையில் இல்லை என்றால் இதுவரை கூட இருந்தவர்களே நம்மை அழித்து விடுவார்கள் என்ற பயம்.
5.தன்னை விட்டால் அதிமுகவையும் அதிமுக ஆட்சியையும் கட்டிக் காக்கும் திறமையுள்ள ஒருவர் கூட கட்சியில் இல்லை என்ற எண்ணம்.
இந்த காரணங்களில் ஏதோ ஒன்றுதான் அர்த்தமாக இருக்க முடியும், இல்லையா? இதில் ஐந்தாவது மிகப்பெரிய அபத்தம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலக் கட்சியான அதிமுகவில் முதல்வராக பதவியேற்க ஒருவருக்குமே தகுதி இல்லை என்பது வடிகட்டிய அபத்தமன்றி ஏதுமில்லை.
ஆகவே, இப்படிப்பட்ட மாஃபியாவின் கையில் இந்த மாநிலம் சிக்கிவிடக் கூடாது என்பதுதான் இன்றைய அவசர அவசியத் தேவை. இதில் வழக்கமான ஜாதி, மத, இன, அரசியல் துவேஷங்களை புகுத்த தேவையில்லை. வேறு எந்தக் கட்சி இதில் ஆதாயம் தேட முயன்றாலும் அது இயல்பான ஒன்றுதான். புறவாசல், பின்வழி என்பதெல்லாம் அரசியலுக்கு புதிதல்ல.
முற்றிலும் நல்லவர் ஒருவரே முதல்வராக வர வேண்டும் என்றெல்லாம் எழுதவோ பேசவோ ஆரம்பித்தால் நமது மாநிலத்துக்கு ஒருக்காலும் முதலமைச்சர் கிடைக்கப்போவது இல்லை. இருப்பதில் பரவாயில்லை என சொல்லக்கூடிய ஒருத்தர் இப்போதைக்கு போதும்.
வெளிப்படையானவர். வெட்டி பந்தா செய்யாதவர். மக்களை சந்திக்க தயங்காதவர். ஊடகங்களை வெறுக்காதவர். விமர்சனங்களை எற்றுக் கொள்பவர். கேலி கிண்டலையும் சகித்துக் கொள்பவர்.
அந்த தகுதிகளை அலசினால் இன்றுள்ள ஒரே சாய்ஸ் பன்னீர் செல்வம். பன்னீர் உத்தமர், இதுவரை அதிமுக ஆட்சியில் நடந்த எந்த முறைகேட்டிலும் சம்மந்தப்படாதவர், சொத்து சேர்க்காதவர், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் எவரும் வாதாடவில்லை.
இதுவரை இருந்த பன்னீராக இனிமேல் அவர் செயல்பட முடியாது. இப்போது மக்களும் ஊடகமும் விழித்துக் கொண்டன. தமிழ்நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பழகி விட்டது. தவறு செய்யும் அரசும், அதை தட்டிக் கேட்காத எதிர்க்கட்சியும், அம்பலப்படுத்தாத ஊடகமும் இனிமேல் இந்த மண்ணில் குப்பைகொட்ட முடியாது.
இன்னும் நாலரை ஆண்டுகள் இருக்க வேண்டிய பதவியை இழந்து விடுவோம் என்கிற ஒரே பயம்தான் சசி அணி பக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களை அடைய வைத்திருக்கிறது. ஒருக்கால் அவர்கள் ஆதரவுடன் சசிகலா ஆட்சி பீடம் ஏறினால் அது ஒரு மாதம்கூட நீடிப்பது கடினம் என்பதை அவர்கள் தாமதமாக உணரக்கூடும்.
பன்னீர் நல்லவரா கெட்டவரா என்ற பட்டிமன்றத்தை பிற்பாடு வைத்துக் கொள்ளலாம். மன்னார்குடி மாபியா கையில் நாடு சிக்குவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஜனநாயக சக்திகள் எல்லாமும் கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் எந்த செயலும் இறுதியில் வெற்றி பெற்றதாக உதாரணங்கள் இல்லை. வழி தவறிய தலைவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் வரலாறு இல்லை.
Tamilar neethi

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கடத்­திய தமி­ழர்­களை கொன்­ற­பின்னர் வேன் துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்­டுள்­ளது

அகதி முகாம்களுக்குள் 28 வருடங்களாக வாழ்வது எமக்குத் தெரியாது !

   



வியாழன், 9 பிப்ரவரி, 2017

6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்:


6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவச படவைக்கும் ...
சம்பவம்-1 👇👇👇👇👇👇
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇👇
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...
முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....
தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...
அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.
ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.
ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.
நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.
மனம் சற்று நிம்மதி அடைந்தது.
அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..
அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.
சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...
இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...
அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??
காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.
உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.
சம்பவம்-5 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம்-6 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

எம்.எல்.ஏ.-க்களுக்கு மிரட்டல்



அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை
VikatanExclusive
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' தமிழகத்தில் நிலவும் சூழல்களை பா.ஜ.க மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வகையில் அரசியல் காட்சிகள் அரங்கேறுவதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது பா.ஜ.க தலைமை' என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.
' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்; போயஸ் தோட்ட இல்லம் நினைவுச் சின்னமாக்கப்படும்' என மன்னார்குடி உறவுகளை கலங்கடிக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு வந்த எம்.எல்.ஏக்களை எங்கும் நகர விடாமல், அரண் அமைத்தார் சசிகலா. ' உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தும் வழங்கப்படும். மாத்திரை, மருந்து என எதற்கும் நீங்கள் தவிக்க வேண்டாம்' என உறுதி கொடுத்துவிட்டு, அனைவரையும் கல்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஓட்டலிலும் வேறு சில இடங்களிலும் தங்க வைத்தனர். முதலமைச்சர் பன்னீர்செல்வமும், ' என்னுடைய பலத்தை சட்டசபையில் நிரூபிப்பேன்' என உறுதியாகக் கூறிவிட்டார்.
" சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் சென்னை வரும் முடிவில் ஆளுநர் இல்லை. ' பன்னீர்செல்வத்தை பா.ஜ.கதான் இயக்குகிறது. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு ஏன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தயங்குகிறார்?' என சில அரசியல் கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டனர். கூடவே குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவும் அ.தி.மு.க எம்.பிக்கள் விமானத்தில் ஏறினர். மத்திய அரசுக்கு எதிராக பேசப்படும் தகவல்களை அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள், ஆளுநரை உடனடியாக தமிழகம் செல்ல அறிவுறுத்தினர். இன்று பிற்பகல் சென்னை வரும் ஆளுநரை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேச உள்ளனர். பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்துப் பேச இருக்கிறார்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
" தமிழ்நாட்டில் நடக்கும் சூழல்களைப் பற்றி விரிவாக ஆலோசித்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை சசிகலா சிறைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களில் சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்றதையும் கவனித்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் விலை பேசப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களுடன் பேசுவதற்குக்கூட எம்.எல்.ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பேசிய சசிகலா உறவினர் ஒருவர், ' உங்களுக்குத் தேவையான அனைத்தும் வந்து சேரும். எங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டோம். உங்களுக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்' என அச்சுறுத்தியிருக்கிறார். இதுகுறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளது பா.ஜ.க தலைமை. நேற்று மாநிலத்தில் பல மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் திரண்டனர். பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் சசிகலா ஆதரவாளர்கள் உருவ பொம்மை கொளுத்தினர். சுவரொட்டி கிழிப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என சட்டம் ஒழுங்கு சூழல்கள் கட்டுக்குள் இல்லை. இதைப் பற்றி நேற்று அமித் ஷாவிடம் விவரித்த தமிழகப் பிரமுகர் ஒருவர்,
' கிரிமினல் வழக்கில் உள்ளவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்பதற்கு பல சட்ட உதாரணங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவி வருகின்றன. ' எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்' என சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியவில்லை. அவர்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதே சிறந்தது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொள்ளும். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சிதம்பரம் இருக்கிறார். நம்முடைய முடிவை அவரும் வரவேற்பார். அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தினால், தி.மு.கவும் ஆதரிக்கும். தற்போதுள்ள சூழலில், 'தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெறுவோம்' என ஸ்டாலின் நம்புகிறார். தேர்தலில் நமக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால், 15 சதவீத வாக்குகளைப் பெறுவோம். சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் பொதுமக்கள் இருக்கின்றனர். அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நாம் பயன்படுத்திக் கொண்டால், சட்டசபையில் பலம் பெறுவோம்' என விவரித்திருக்கிறார். இந்த முடிவை அமித் ஷாவும் ஏற்றுக் கொண்டார். தமிழக அரசைக் கலைக்கும் வேலைகள் வேகம் பெறத் தொடங்கிவிட்டன" என விரிவாகவே நம்மிடம் தெரிவித்தார்.
" அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கும்போது, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆதரவு கடிதங்களைக் கேட்கும் முடிவில் இருக்கிறார் வித்யாசாகர் ராவ். ' உண்மையிலேயே, அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்களா? நிர்பந்திக்கப்பட்டு கையெழுத்து போட்டார்களா?' என்பதை அறியும் வகையில் இப்படியொரு முடிவை எடுக்க இருக்கிறார். இதன்பிறகு, பன்னீர்செல்வத்திற்கு உள்ள ஆதரவு குறித்து கேட்டறிய இருக்கிறார். ஒருவேளை சசிகலாவுக்கு மெஜாரிட்டி ஆதரவு என வந்துவிட்டாலும், ஒரு வாரத்திற்கு அந்த ஆட்சி நீடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான். அந்தளவுக்கு டெல்லி அரசியல் தமிழகத்திற்குள் கோலோச்சிவிட்டது.
சசிகலா மீதான வழக்குகளை மையமாக வைத்துக் கேள்வி எழுந்தாலும், அடுத்தபடியாக, வேறு சிலர் பெயரையும் முன்வைக்கும் முடிவில் இருக்கிறார் சசிகலா. ஆளும்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர். நேற்று இரவு எம்.எல்.ஏக்களையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அணிவகுப்பு நடத்தும் வேலைகள் தொடங்கின. ஆளுநர் வரும் தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சசிகலா. அப்போலோவில் சிகிச்சை பெறும் நடராசன், அரசியல் சூழல்கள் முடிவுக்கு வந்த பிறகே வெளியில் வருவார். அங்கிருந்தபடியே, சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே, டெல்லி லாபியை நடத்தி வருகிறார். ஆனால், சுவாமியின் செயல்களை பா.ஜ.க மேலிடம் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக ஆடிட்டர் ஒருவரிடமே கலந்து ஆலோசிக்கிறது பா.ஜ.க மேலிடம். ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
' 356 விதியைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?' என சட்ட வல்லுநர் ஒருவரிடம் கேட்டோம். " மாநில அரசு கலைக்கப்படுவது குறித்து, அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356 வரையறுக்கிறது. இதன்படி, மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகள் இயங்காமல் இருக்கும்போது, மாநில அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. கூடவே, சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது அதனைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கட்டுக்குள் கொண்டு வரவும் சட்டப் பிரிவு 356 பயன்படுகிறது. சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரலாம். இதற்கான பரிந்துரையை ஆளுநர் அளித்தால், ஆறு மாதங்கள் சட்டப் பேரவை இடை நிறுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லையென்றால், பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதுவரையில், நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநருக்கு மாற்றப்படும். ' எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக 356 பயன்படுத்தப்படுகிறது. மாநில சுயாட்சிக்குப் பொருத்தமற்ற விதி' என காலம்காலமாக குரல் கொடுத்து வருகின்றன' எதிர்க்கட்சிகள். இதைப் பற்றியெல்லாம் மத்தியில் ஆளும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்கிறார்.
'அரசியமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும்போது, அரசியல் சூழல்களை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்பது பற்றித்தான் பா.ஜ.க வட்டாரத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. ' பன்னீர்செல்வமா? சசிகலாவா?' என்ற விவாதம் மட்டும்தான் அ.தி.மு.க தொண்டர்களின் கண்களுக்குத் தெரிகின்றன. அதையும் தாண்டிய அரசியல் நகர்வுகளை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை.
VikatanExclusive