சனி, 17 டிசம்பர், 2016

அமெரிக்காவின் 'ஆப்பிள்' நகரின் மேயராக இந்திய வம்சாவளிப் தமிழ் பெண்!

அமெரிக்காவின் 'ஆப்பிள்' நகரின் மேயராக இந்திய வம்சாவளிப் தமிழ் பெண்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குபெர்டினோ நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணொருவர் தெரிவாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவிதா வைத்தியநாதன் என்ற பெண்ணே இவ்வாறு நகர மேயராக தெரிவாகியள்ளார்.
உலகின் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் இருக்கும் நகரம் தான் குபெர்டினோ. இந்நகரத்திற்கு மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடைவையாகும்.

20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசிக்கும் சவிதா, அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருவத்தோடு, வங்கி வணிகத் துறை அதிகாரிகாவும் இருக்கிறார்.
மேலும் சவிதா டெல்லி பல்கலைக்கழகத்தில் B.A படப்படிப்பையும், லக்னோ பல்கலைக்கழத்தில் ஆசிரியர் படிப்பையும், வெற்றி கரமாக பூர்த்தி செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சென் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பையும் சவிதா பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள