வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..!


அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலம்பெயர் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை அங்கீகரித்து அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துகொள்கின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள